Mahlara Ulamas Vs. Zavia Ulamas-தப்லீக் பற்றிய விவாதத்தில் காயல்பட்டணம் மஹ்லறா, ஜாவியா உலமாக்கள்!

Mahlara Ulamas Vs. Zavia Ulamas-தப்லீக் பற்றிய விவாதத்தில் காயல்பட்டணம் மஹ்லறா, ஜாவியா உலமாக்கள்!

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

காயல்பட்டணத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கும் தப்லீக் ஜமாஅத்தினர்களுக்கும் நடைபெற்ற விவாதத்தைப் பற்றி தெளிவாக வெளிவந்திருக்கும் விபரங்கள் அடங்கிய செய்திகளைப் பார்க்க : http://kayaltableegh.blogspot.com /

(இச் செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டது 29-03-2011)

முன்னுரை

இந்தியா, காயல்பட்டணத்தில் அமைந்திருக்கும் ஷாதுலிய்யா தரீகா என்று தங்களை கூறிக் கொள்ளும் ஜாவியா நிறுவனத்தினா,; தாங்கள் கொண்ட கொள்கை ஸுன்னத் வல் ஜமாஅத்திற்கும், தரீகாவிற்கும் மாறுபட்ட கொள்கைக்கு மாறுபடவில்லை என்று சுமார் 45 வருடங்களாக கூறி வருகின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் நமது சுன்னத் வ்ல ஜமாஅத்தின் உலமாக்கள் அவர்களோடு விவாதித்தும், விளக்கப்படுத்தியும் அவர்கள் தாங்கள் கொண்ட கொள்கைகளிலேயே உறுதியாக இருந்து வந்தனர். ஆனால் எவ்வித எழுத்து மூலமான ஆதாரங்களை அவர்கள் தெரிவிக்காமல் போக்கு காட்டி வந்தனர். ஒடுக்கு பத்வா மற்றும் ஹாளிர் பைத்து சொன்ன ஹிழ்ரு முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மீது அவர்களால் கொடுக்கப்பட்ட குப்ரு பத்வா போன்றவைகளை தாங்கள் சார்ந்திருக்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடாமல் தந்திரமாக மறைமுகமாக வெளியிட்டனர்.

இந்த விவாதத்தில் ஜாவியா நிர்வாக ஆலிம்கள் மற்றும் மத்ரஸா ஆலிம்களும்,; நேரடியாக கலந்து கொண்டு ஷெய்குனா ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாக்களான மௌலவி முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி, ஸூபி அவர்கள், மௌலவி ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதரி, ஸூபி அவர்கள் தலைமையில் மஹ்லறாவின் உலமாக்கள் மற்றும் ஊரின் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் ஒன்று கூடி இரு பிரிவாக கலந்து கொண்டனர்.

சுன்னத் வல் ஜமாஅத்தினர் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில் கூறமுடியாமல் விவாதம் நடந்த ஹாலிலிருந்து ஒரு அறைக்கு சென்று இரகசியம் பேசி பேசி வந்தனர். இறுதியில் ஜாவியாவிலிருந்து குற்றம் சொல்லப்பட்ட நூலான பதாவா ரஷீதிய்யா எடுத்துவரப்பட்டு அக்குற்றச்சாட்டு உண்மையென நிரூபிக்கப்பட்டது. அச்சமயத்தில் எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு ஜாவியா தப்லீக்காரர்களின் முகமூடியை மக்கள் மத்தியில் கிழிக்க உதவியது. இருந்தும் அதற்கும் சப்பைக்கட்டு கட்டி தாங்கள் வென்றுவிட்டதாக பொய்பிரச்சாரம் செய்ததால் உண்மை நிலையை விளக்கும் நோக்கோடு சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் வெளியிடப்பட பிரசுரத்தைத் தான் தாங்கள் பார்க்கிறீர்கள்.
 

முனாபிக்குகளிள் முரண்பட்ட போக்கை பாரீர்!!!
 
அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
 

புனித சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணான கொள்கையை பரப்பி வரும் தப்லீக் ஜமாஅத்தை பல்லாண்டுகளாக தக்க சான்றுடன் எதிர்த்து வரும் 'மஹ்லறத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி' ஆலிம்களும் மற்ற ஆலிம்களும், தப்லீக்கை ஆதரித்து வரும் 'ஜாவியத்துல் பாஸிய்யா' அரபிக் கல்லூரி ஆலிம்களில் சிலர்களும் ஆகிய இரு சார்பு ஆலிம்களை அழைத்து ஹாஜி வாவு காதர் சாகிலு அவர்களும் மன்பக்கம் கண்ட சிலர்களும் அம்பலமரைக்கார் தெரு ஹாஜி வாவு காதர் சாகிபு அவர்கள் இல்லத்தில் 11, 12-08-1998 நாட்களில் மௌலவி எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் அவர்கள் தலைமையில் உலமாக்களின் ஆலோசனைக் கூட்டம் கூடி எடுக்கப்பட்ட முடிவிற்கு ஜாவியத்துல் பாஸிக்காரர்களின் முரண்பாட்டின் முழு விபரம்: (தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை தலைவர்களிலுள்ளவரும், தப்லீகர்களால் மகானென போற்றப்படுபவருமான) மௌலவி ரஷீது அஹ்மது கங்கோஹி, இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை ஆதரித்தும், வஹ்ஹாபிக் கொள்கைகளை சரி கண்டும் எழுதின அவரது 'பதாவா ரஷீதியா' ந}வை அனைவர்களுக்கும் முன் வாசித்ததும், தப்லீக்காரர்களான ஜாவியத்து பாயஸியாக்காரர்கள் இவ்விரண்டு விஷயங்களும், தப்லீகை ஆதரிக்கும் இங்கு வந்துள்ள ஆலிம்களுக்கு உடன்பாடானது அல்ல. அவரின் இந்த கருத்தை இந்த ஆலிம்களும், தப்லீக் இயக்கத்தின் பிற நிறுவனர்களும் ஏற்கவில்லை. வஹ்ஹாபிஸம் காரிஜிக்களைப் போன்று நமக்கு முற்றிலும் ஆகாத வழி கெட்ட இனம் என்பதே தேவ்பந்தி உலமாக்களின் முடிவாகும் என்பதை இங்கு வந்த தப்லீகை ஆதரிக்கும் உலமாக்களின் நிலைபாடு என ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார்கள்.

தப்லீகர்கள், வழி கெட்டவர்களை வழி கெட்ட இனம் என ஒப்புக் கொண்டதை ஏற்று கையைழுத்து போடும்போது நாங்களும் இருந்தோம் என்பதற்கு ஆதாரமாக தப்லீக் எதிர்ப்பாளர்களாகிய ஆலிம்களெல்லாம் கையெழுத்திட்டார்கள். ரஷீது அஹ்மது கங்கோஹியின் 'பதாவா ரஷீதிய்யா'வின் இரண்டு பத்வாக்களும் உடன்பாடில்லை, வஹ்ஹாபி வழி கெட்ட இனம் என மட்டுமே தப்லீகர்கள் ஒப்புக் கொண்டார்களே தவிர, கெட்ட இனத்தை உண்டாக்கும் கங்கோஹியை நிராகரிக்காத தப்லீகர்களின் நயவஞ்சக குபாடத்தை பாருங்கள்.

இவ்வாறு ஒப்புக் கொண்டது தப்லீகின் கொள்கைக்கும் மூலகர்த்தாக்களுக்கும் முரணாகி விட்டது என்று தீயவர்களை காப்பாற்ற தீய உதிப்பு ஏற்பட்டதும், தப்லீகர்களாகிய ஜாவியத்து பாஸிக்காரர்கள் குரோத நோக்கோடு அகீதா, ஷரீஅத், தரீகத் கொள்கைகைய திறம்பட கற்றுக் கொடுக்கும் கலாசாலை என்றும் புனித ஷாதுலிய்யா தரீக்கா தலைமை பீடமென புகழப்படக் கூடிய ஜாவியத்துல் பாஸிய்யாஅரபிக் கல்லூரியில் ஹைஅத் ஷரீஅத் கிளை தொடக்க விழா என்ற ஏற்பாட்டுடன் ஷரீஅத் விளக்கக் கூட்டமொன்று 13-10-1998 ம் நாள் ஹாஜி மௌலவி எஸ்.எம். முஹம்மது அப்துல் காதர் முத்து வாப்பா பாஸி கலீபத்துல் குலபா ஷாதுலி அவர்கள் தலைiமையில் தலைமையுரையுடன் ஆரம்பமாயிற்று.

தலைமையுரை தவறாக அமைந்ததாக அடுத்து பேசிய மௌலவி முஸ்தபா ரஷாதீ உடனே க்டித்து விட்டு கொள்கைக்கு முரணான சிலதை சொல்லி முடித்தார்.

அடுத்து தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலின் மொழி பெயர்ப்பு ஆசிரியர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி மன்பஈ, பாஜிலே தேவ்பந்தி மேற்படி நூல் 161 ம் பக்கத்தில் 'அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன்' என்ற கங்கோஹியின் கருத்தை சரிகண்டும், அதெ நூல் 144 ம் பக்கத்தில் 'ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது மாடு, கழுதை நினைப்பில் மூழ்குவதை விட கெட்டது' என்ற கொள்கைகளை சரி கண்டு உறுதிபடுத்தி அவருக்கு கொடுத்த தவறான குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் என்ற தலைப்பில் உளறி முடித்தார். 11,12-10-1998 ம் நாள் எடுக்கப்பட்ட முடிவிற்கு இது மாற்றமில்லiயா? இவ்வாறுதான் ஊரை குழப்பி ஈமானை கெடுப்பதா? சிந்தியுங்கள். நாங்களும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்தான், மத்ஹப் வாதிதான், தகீக்காவாதி தான் என்று கூறிக் கொள்ளும் ஜாவியா பாஸிக்காவைச் சார்ந்த தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கும் உலமாக்களும், மற்றவர்களும் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு முற்றிலும் முரணான கேடுகெட்ட கொள்கைகளை பேசினதை ஏன் கண்டிக்கவில்லை.? இதிலிருந்து இவர்களின் உள்ளத்திவ் பதிந்த தீய கொள்கை விளங்க வரும். மேலும் இவர்கள் அல்லாஹ்வையும் அன்பியாக்களையும் குறை கூறுபவனை உண்மை முஃமின் என தக்க சான்றுடன் மார்க்கத் தீர்ப்பு கொடுப்பார்களா? சிந்தியுங்கள்.

இவ்வாறு இஸ்லாமிய ஷரீஅத் படி அல்லாஹ்வை, அன்பியாக்களை குறை காணுபவன், குறை காணுபவனை நேசிப்பவன், இவனை பின் தொடர்ந்து தொழவது, நிகாஹிற்கு வக்கீலாக்குவது, பிறை கண்டு சொன்னால் அவர்களை நம்பி நோன்பு வைப்பது கூடுமா? சுன்னத் ஜமாஅத் கொள்கையில் பிடிப்புள்ள கல்வி கூடங்களுக்கு எழுதிக் கேட்டு நற்பயனடையுங்கள்.

குறிப்பு: 13-10-1998 ஜாவியாவில் கொள்கைக்கு முரணாக பேசியது பதிவு நாடாவில் பதியப்பட்டு பலரிடம் உள்ளது.
 

18.10.98                                                                                                                       இப்படிக்கு,
          

காயல்பட்டணம்.                                                                புனிதமிகு அனைத்து தரீக்கா வாசிகள்,              

 

குறிப்பு: நம் சுன்னத்வல்ஜமாஅத் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வழிகெட்ட கொள்கையைக் கொண்ட தப்லீக் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அஹ்மத் கங்கோஹி தனது பதாவா ரஷீதியா என்ற நூலில் இப்னு அப்துல் வங்ஙாப் நஜ்தியை ஆதரித்தும் வஹ்ஹாகியக் கொள்கையை சரி கண்டும் எழுதிய இரண்டு பத்வாக்களை பற்றி மட்டுமே 12.08.1995 அன்று நடந்த நம் நகர் உலமாக்களின் கருத்தரங்கில் கேசப்பட்டு, அக் குற்றச்சாட்டு உண்மைதான் என்று அனைத்து உலமாக்களும் ஒப்புக் கொண்டு கையொப்பமிட்ட தீர்மானமாகும். இதுபற்றி 15.02.02 அன்றும் இப் பிரசுரம் மூலம் மறுபதிப்பாக வெளியிட்டும் இதற்குரிய பதிலைக் கொடுக்காமல், அப்துல்லா இப்னு உபை போன்ற முனாபிக்குகளின் நயவஞ்சகத் தன்மையும், கோயபல்ஸின் பொய், புரட்டு, பித்தலாட்டம், மோசடி மூலம் முஸ்லிம்களை இன்னும் வழி கெடுத்துக் கொண்டிருக்கும் தப்லீக்கை ஆதரிக்கும் உலமாக்களே! அதன் அபிமானிகளே! தப்லீக் தலைவர்கள் கூறிய ஈமானை வேரறுக்கும் கொள்கைகள் பற்றியும் அதைக் கூறிய தவைர்கள் நிலை பற்றியும் தற்போதாவது உங்கள் நிலைமையை பொது மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். நிறம் மாறும் பச்சோந்தியாக இல்லாமல், சுவனம் செல்லும் உண்மை சுன்னத்வல்ஜமாஅத் னொள்கையின்பால் வாருங்கள் என்று வேண்டுகிறோம். அல்லாஹ் தௌஃபீக் செய்வானாக! ஆமீன்! யாரப்பல் ஆமீன்! ஆமீன்!!
 

மூன்றாம் பதிப்பு:   

    18 – 12- 07
                           

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை எதிர்ப்போரை எதிர்க்கும் இயக்கம் (யுசுழுP),
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிரூ மஹ்பூபு சுபுஹானி சங்கம்,
காயல்பட்டணம்.