இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாமா?

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாமா?

By Sufi Manzil 0 Comment June 1, 2010

Print Friendly, PDF & Email

இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம்

கேள்வி: இறந்தவர்களுக்காக தர்மங்கள் செய்யலாம் என அறிவிக்கக் கூடிய ஹதீஸ்களைக் கூறுக:

பதில்: 'அல்லாஹ்வின் அருமைத் தூதரே! எனது தாயார் திடீரென இறந்து விட்டார். அவருக்குப் பேச வாய்ப்பிருந்தால் அவர் தர்மங்கள் செய்திருக்க கூடுமென எண்ணுகிறேன். அவருக்காக நான் தான தருமங்கள் செய்யலாமா?' என ஒருவர் கேட்க, 'ஆம்! உம் தாயாருக்காக நீர் தர்மம் செய்வீராக! என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுறுத்தார்கள்.

அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.   நூல்: புஹாரி.

ஸஃது இப்னு உபாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம். 'நாயகமே! என் தாய் இறந்து விட்டார். அவர் மீது நேர்ச்சை இருக்கிறது. (அதனை நான் நிறைவேற்றலாமா? என வினா தொடுத்தபோது அதனை அவருக்காக நீர் நிறைவேற்றும்' என பதிலுரைத்தனர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.   நூல்: புஹாரி.

ஸஃது இப்னு எபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் அவர் ஊரிலில்லாதபோது மௌத்தாகி விட்டார். பின்னர் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து 'யாரஸூலல்லாஹ் நான் ஊரில் இல்லாத போது எனது தாயார் இறந்து விட்டார்கள். அவருக்காக நான் தான தர்மங்கள் செய்யலாமா? அது அவருக்கு பலனளிக்குமா?' எனக் கேட்க, 'ஆம்!' என்றனர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். மிஃராப் என்ற எனது தோப்பை என் தாயாருக்காக நாயகமே! தங்களை சாட்சியாக வைத்து தானம் செய்கின்றேன்' என்றார்கள் ஸஃது இப்னு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.   நூல்: புஹாரி.

நன்றி: வஸீலா 1-3-1987.