ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா!-New Sufimanzil Building Opened!

ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா!-New Sufimanzil Building Opened!

By Sufi Manzil 0 Comment May 4, 2010

Print Friendly, PDF & Email

ஸூபி மன்ஜிலின் புதிய கட்டிடம் திறப்பு விழா!

கடந்த 2-05-2010 ஞாயிற்றுக் கிழமை, காயல்பட்டினம் ஹிஸ்புல்லாஹ் சபை டிரஸ்ட்டால் நடத்தப்பெறும் ஸூபி மன்ஜிலுக்காக திருநெல்வேலி டவுண் சாலியார் தெருவில் வாங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழா மௌலானா மௌலவி அஷ்-ஷெய்கு ஊண்டி W.M.M.செய்யிது முஹம்மது ஆலிம் காதிரி ஸூபி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மன்ஜிலின் நிர்வாகத்தினர் ஹாஜி S.M.தாஜுத்தீன் அவர்கள், நோ.மஹ்மூது அவர்கள், W.K.M. சாலிஹ் அவர்கள், Z.A. செய்கு அப்துல் காதிர் அவர்கள், இன்ஜினீயர் ஹஸன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டிடம் மிகவும் சிறப்பானதாக அமையப்பெற்றிருந்தது. கட்டிடத்தின் மாடியை கட்டுவதற்கு சுமார் ரூ.ஒரு இலட்சம் தேவைப்படுகிறது. அதையும் கட்டி முடித்தால் மிகவும் சிறப்பாக, பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதனால் முஹிப்பீன்கள், முரீதீன்களான உங்களை நாடுகின்றனர் காயல்பட்டணம் ஸூபி மன்ஜில் நிர்வாகத்தார்.

தங்களது தாராள நன்கொடைகளை காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலுக்கு அனுப்பித் தர வேண்டுகிறார்கள்.