முஹம்மத் அப்துல் அலீம் சித்தீகி (மீரட் மௌலானா) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.

முஹம்மத் அப்துல் அலீம் சித்தீகி (மீரட் மௌலானா) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்.

By Sufi Manzil 0 Comment September 8, 2012

Print Friendly, PDF & Email

 

பெயர்: முஹம்மது அப்துல் அலீம் சித்தீகி

குலமும் கோத்திரமும்: முதலாம் கலீஃபா ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்  வழித் தோன்றலாக தந்தையார் மூலமாக 36 வது தலைமுறையிலும், தாயார் மூலமாக 32வது தலைமுறையிலும் வந்துதித்தார்கள்.

தந்தையின் பெயர்: ஹழ்ரத் மௌலானா முஃப்தி அப்துல் ஹக்கீம் ஜோஷ் சித்தீகி காதிரி.

பிறந்த தேதி:  ஹிஜ்ரி 1310 ரமலான் பிறை 15 திங்கள் கிழமை. (03-04-1893)

வளர்ப்பும் கல்வியும்: அரபி, உருது, ஃபார்ஸி வீட்டிலேயே தம் தந்தையாரிடம் கற்றார்கள். தமது ஏழாம் வயதிலேயே முழுகுர்ஆனையும் சிறப்பாக மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றனர். அதற்குப் பின் மத்ரஸா அரபியா இஸ்லாமிய்யாவில் சேர்ந்து படித்தார்கள். தந்தையார் மறைவிற்குப்பின் தாயாரும், பின்பு அன்னாரின் மூத்த சகோதரர் மௌலானா முக்தார் அஹ்மத் சித்தீகியின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

பட்ட மேற்படிப்பு: மத்ரஸா அரபியாவில் மௌலவி ஆலிம் என்ற பட்டத்தை ஹிஜ்ரி 1326ல் பெற்றார்கள். பின் ஆங்கிலக் கல்லூhயிpல் சேர்ந்து பி.ஏ. பட்டமும், அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் எல்.ஹெச்.பி. என்ற வழக்கறிஞர் பட்டமும் பெற்றார்கள். பின் ஹக்கீம் இஹ்திஷாமுத்தீன் அவர்களிடம் யூனானி வைத்திய முறையைக் கற்றுத் தேர்ந்தார்கள்.

ஆசிரியர்கள்: முஃப்தி அப்துல் ஹக்கீம் ஜோஷ் சித்தீகி, மௌலானா முக்தார் சித்தீகி, ஹழ்ரத் மௌலானா அஹ்மத் ரிழா கான் பாழில் பரேல்வி.

ஹதீது கலையில் இஜாஸத் எனும் அனுமதி: ஹிஜ்ரி 1332 துல்ஹஜ் பிறை 19 ல் சிஹாஹ் சித்தா என்ற சஹீஹான 6 கிரந்தங்களின் ரிவாயத்துகளுக்கு இஜாஸத் என்ற அனுமதியை ஆலா ஹழ்ரத் அஹ்மது ரிழா கான் அவர்களிடம் பெற்றார்கள்.

பைஅத்:

தமது மூத்த சகோதரர் முக்தார் சித்தீகியிடம் பைஅத்தும், கிலாபத்தும், அஹ்லு பைத்தைச் சார்ந்த ஷெய்குல் மஷாயிக் ஹழ்ரத் செய்யிது ஷாஹ் முஹம்மது அலீ ஹுஸைன் அஷ்ரஃபி ஜீலானி கசோச்சவி அஷ்ரஃபி மியான் அவர்களிடம் கிலாபத்தும் பெற்றார்கள். மேலும் பரேல்வி அஃலா ஹழ்ரத் அவர்களின் பிரதான கலீபாவாகவும் திகழ்ந்தார்கள்.

கற்ற மொழிகள்:

உலகின் முக்கிய 16 மொழிகளில் பாண்டித்துவம் பெற்றிருந்தார்கள். அவைகள்: உருது, அரபி, பார்ஸி, இந்தோநேஷி, ஆங்கிலம், ஜப்பானி, ஜெர்மன், சீன மொழி, டச்சு, ஸவாஹிலி(ஆப்பிரிக்க பாஷை), பிராசிலா, மலாய், ஹிந்தி, சிங்களம் போன்றவைகள். அவற்றில் சில பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் (ழுசநைவெயட டுயபெரயபநள) பன்மொழி பன்னாட்டு மொழிகளில் முனைவர் -டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

கலீஃபாக்கள்: 

பல்லாயிரக்கணக்கான முரீதுகளை பெற்றிருந்தார்கள். குறிப்பாக மொரிஷியஸ் தீவில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹழ்ரத் அவர்களின் முரீதுகளும் மாணவர்களுமாக இருந்தார்கள். பல கலீபாக்கள் இருந்தாலும் மௌலானா ஷாஹ் அஹ்மது நூரானி சித்தீகி (ஹழ்ரத் அவர்களின் மகனார்), டாக்டர் பழ்லுர் ரஹ்மான் அன்சார், மௌலானா முப்தி பழ்ளுர் ரஹ்மான் ரஹ்மானி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இஸ்லாமிய தஃவத்து பணி:

சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள், கிறித்துவர்கள், நாத்திகர்கள் போன்றோரை தம் நன்னடத்தையால் ஹக்கான மார்க்கத்தை எடுத்து வைத்து இஸ்லாத்தைத் தழுவச் செய்தார்கள். 

பற்பல நாடுகளில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தும், நூலகங்களை அமைத்தும், அனாதை இல்லங்கள், மருத்துவ மனைகள் ஆங்காங்கே மக்களுக்காக தேவைப்படும் மன்றங்கள், அமைப்புகள் நிர்மாணித்து அவற்றிற்கான கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தனர். அந்த அமைப்புகள் இன்றுவரை செயலாற்றி ஹழ்ரத் அவர்களின் நினைவைப் போற்றுகின்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடவுள் மறுப்பு கொள்கை மக்களை வெகுவாக பாதித்த போது 1949 ல் சிங்கப்பூரில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தன்ஜீமெ பைனுல் மஸாஹிம் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள். அது இன்றுவரை உலகளாவிய அளவில் செயல்படுவது குறிப்பிடத்ததக்கது.

நூல்கள்:

1. லதாயிஃபுல் மஆரிஃப் – வலிமார்கள் பற்றி இறைமெய்ஞ்ஞான ரகசியங்கள் பற்றிய நூல்.

2. திக்ரே ஹபீப் – பெருமானாரின் பெருமையைப் போற்றும் இரண்டு பாகங்கள் அடங்கிய நூல்.

3.அஹ்காமே ரம்ஜானுல் முபாரக் – நோன்பின் மாண்பும் அதற்குரிய சட்டங்களும்.

4.பஹாரே ஷபாப் – இளைஞர்களுக்கு அறைகூவல்.

5. தேவ்பந்தி மௌலவி கா ஈமான் – தேவ்பந்த் உலமாக்கள் தமது ஈமானை வஹ்ஹாபிகளுக்கு விற்றுவிட்டதாக சாடும் ஆதாரப்பூர்வ நூல்.

6. ஃபர்ரத் மின் கஸ்வரா- அஷ்ரப் அலி தானவி மேல் கொடுக்கப்பட்ட குப்ரு பத்வா.

7. அல்மர்ரதுல் காதிய்யானிய்யா – காதியாணிகள் ஏன் காபிராகிப் போனார்கள் என்பதை விளக்கும் நூல்.

ஆங்கில நூற்கள்:

 

1. The claron

2. The Elementary Teaching of Islam

3. How to Preach Islam

4. The Mirar

ஹழ்ரத் அவர்கள் 1931ல் சிங்கப்பூரிலிருந்து ரியல் இஸ்லாம் என்ற பத்திரிகையும், 1936ல் தி ஜெனியூன் இஸ்லாம் என்ற பத்திரிகையையும் நடத்தினார்கள்.

பேச்சாற்றல்:

ஹழ்ரத் அவர்கள் இனிமையான குரலில் மேற்கோள்களாக ஆயத்துக்களும், ஹதீதுகளும், சம்பவங்களும் கூறி உரையாற்றும் போது மக்கள் மதிமயங்கி கேட்பார்கள். 

டோக்கியோவில் பேசிக் கொண்டிருக்கும்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தின் முனைவர் பேராசிரியர் என்.ஹெச். பராஸ் அவர்கள் இது போன்ற இனிமையான குரலில் கருத்துமிக்க ஒரு சொற்பொழிவை கேட்டதில்லை என்று சிலாகித்துக் கூறினார்.

ஹழ்ரத் அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி எல்லா மதங்களின் குருமார்களும் சேர்ந்து ர்ளை நுஒயடவநன நுஅinஅநnஉந என்ற பட்டத்தை வழங்கினர்.

ஹஜ் பயணம்:

தமது வாழ்நாளில் 36 முறை ஹஜ்ஜுக்குச் சென்று வந்துள்ள ஹழ்ரத் அவர்கள் 1919 ல் முதல் முறையாக ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஹாஜிகளிடம் வரி விதித்த அக்காலத்திய வஹ்ஹாபிய சவூதி மன்னர் சுல்தான் அப்துல் அஜீஸ் பின் சவூதிடம் வாதாடி போராடி முழுமையாக வரிவிதிப்பை நீக்கினார். அன்றுமுதல் இன்றுவரை எந்த ஹாஜிகள் மீதும் வரிவிதிப்பு இல்லை.

மறைவு:

தமது உயிருக்கும் மேலாக நேசித்த ரஸூலுல்லாஹ்வை விட ஒரு நொடி கூட அதிக வயது வாழக் கூடாது என்று துஆ கேட்டு வந்தார்கள். அதேபோல் தம் மௌத் மதீனாவில்தான் இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களாக 1953ம் ஆண்டு தமது 62வது வயதில் மதீனா முனவ்வரா சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். மக்கள் இதுபற்றி வினவியபோது தமது வயதில் இன்னும் ஒருவருடமே பாக்கியுள்ளதாக தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணப்படியே துல்ஹஜ் பிறை 22, ஹிஜ்ரி 1373 (22-08-1954) அன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்கள். அன்னாரின் விருப்பப்படியே மதீனா ஷரீபில் அவர்களின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.