Meditation-திக்ரின் சிறப்புகள்

Meditation-திக்ரின் சிறப்புகள்

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

அல்லா ஹ்வை நினைவு கூறுதல்- திக்ரு செய்தல். 

 In Tamil:-  Moulana Assheikh   As sah Sheikh Abdul Qadir Sufi Hazrath Kahiri   Kadasallahu Sirrahul Azeez.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.

اَلْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ ، وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ ، وَاصَّلاَةُ وَاسَّلاَمُ عَلٰى اَشْرَفِ الْمُرْسَلِيْنَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهِ وَصَحْبِه اَجْمَعِيْنَ ،

அறிந்து கொள்! திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும். ஷைத்தானை வருத்தமாக்கும். மேலும் ஷைத்தானுடைய கோட்டைகளை உடைத்து, அவனுடைய பட்டாளங்களை முறியடித்து விரட்டி விடும்.

  மனக் கவலையை போக்கி சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். உடலையும் மனதையும் உறுதியாக்கும். அகத்தையும் முகத்தையும் பிரகாசமாக்கும்.

  திக்ரு செய்கிறவனை கண்டவர்கள் அஞ்சக்கூடிய வித்தில் அவன் முகத்தில் கம்பீரத் தோற்றத்தை கொடுக்கும். இரணத்தை அதிகப்படுத்தும்.

  திக்ரு செய்கிறவனோடு மறுகுதலாக இருப்பவன் சீதேவியாவான். அவன்கூட இருப்பவன் மூதேவியாகான்.

   அழுகையோடும், சஞ்சலத்தோடும் திக்ரு செய்வதாகிறது, கியாமத்து நாளில் அர்ஷுடைய நிழலில் உட்காரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள காரணமாகும்.

திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத் கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
 

ஆகவே எவனுக்கு திக்ரை கொடுக்கப்பட்டதோ அவன் விலாயத்தின் பதவிக்கு தகுதியானவனென்று அவனுக்கு அருகதை சீட்டை கொடுக்கப்பட்டு விட்டது.

எவனைவிட்டும திக்ரை உரியப்பட்டதோ அவனை விலாயத்தின் பதவியை விட்டும் நீக்கப்பட்டு விட்டது.

திக்ருடைய மஜ்லிஸாகிறது அவர்களில் சாந்தம் நிலவும்.அவர்களை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹுத் தஆலாவின் கிருபை அவர்களை பொதியும். அல்லாஹீதஆலா அவர்களை அர்ஷிலே திக்ரு செய்வான்.

திக்ரின் வரிசையை பற்றி குர்ஆன், ஹதீதுகளில் மட்டிலடங்கா அனேக ஆதாரங்கள் வந்திருக்கின்றன. சிலதை எழுதுகிறேன்:-

 

يَآ اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اذْكُرُوا اللهَ ذِكْرًا كَثِرًا وَسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹுத்தஆலாவை மீகுதமாக திக்ரு செய்யுங்கள். காலையும், மாலையும் அவனை துதி செய்யுங்கள்.

 

وَالذّٰاكِرِيْنَ اللهَ كَثِيْرًا وَالذَّاكِرَاتِ اَعَدَّاللهُ لَهُمْ مَغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்யும் ஆண்களும், மிகுதமாக திக்ரு செய்யும் பெண்களும் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வலுப்பமான கூலியையும், பாவமன்னிப்பையும் தங்கரியம் செய்து வைத்திருக்கிறான்.

 

فَاذْكُرُوْنِيْ اَذْكُرُكُمْ

 என்னை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நான் உங்களை திக்ரு செய்கிறேன்.

 

وَاذْكُرِاسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا

காலையும் மாலையும் உம்முடைய இரட்சகனுடைய நாமத்தை ஸ்தோத்திரம் செய்வீராக!

 

 

اِنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلٰى حَلْقَةٍ مِنْ اَصْحَابِه فَقَالَ مَا اَجْلَسَكُمْ قَالُوْا جَلَسْنَا نَذْكُرُاللهَ وَنَحْمَدُهُ عَلٰى مَاهَدَانَا لِلْاِسْلَامِ وَمَنَّ عَلَيْنَا قَالَ اَللهِ مَااَجْلَسَكُمْ اِلَّا ذٰلِكَ قَالُوْا اللهِ مَااَجْلَسَنَا اِلّاَ ذٰلِكَ قَالَ اَمَا اَنِّيْ لَمْ اَسْتَحْلِفْكُمْ تَهْمَةً لَكُمْ وَلٰكِنَّهُ اَتَانِيْ جِبْرِيْلُ فَاَخْبَرَنِيْ اَنَّ اللهَ تَعَالٰى يُبَاهِيْ بِكُمُ الْمَلٰئِكَةَ اَخْرَجَهُ مُسْلِمٌ وَالتّرْمَذيْ .               

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒரு நாள் தங்கள் தோழர்களின் கூட்டத்திற்கு சென்று, 'நீங்கள் ஏன் கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள், அல்லாஹுத்தஆலா எங்களுக்கு பெரும் உபகாரம் செய்து எங்களை சுத்த சத்திய இஸ்லாம் மார்க்கத்தில் நேர்வழி காட்டியதற்காக அவனை நாங்கள் புகழ்ந்து திக்ரு செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (சஹாபாக்களை பார்த்து) அல்லாஹ்வின் ஆணை! நீங்கள் இதற்காகத்தானா கூடிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்டார்கள். சஹாபாக்கள் அல்லாஹ்வின் ஆணை! நாங்கள் இதற்காகவேதான் கூடிக் கொண்டிருக்கிறோம். நபி அவர்கள் நான் உங்கள் பேரில் சந்தேகப்பட்டதற்காக சத்தியம் செய்து கேட்டதல்ல, எங்கிலும் அல்லாஹுதஆலா உங்களைக் கொண்டு மலக்குகளிடத்தில் பெருமை பேசுவதாக ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வந்து சொன்னார்கள்' என்றார்கள்.

 

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعٰالٰى  عَنْهُ قَالَ قَالَ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ لِلهِ مَلَائِكَةً يَطُزْفُوْنَ فِي الطُّرُقِ يَلْتَمِسُوْنَ اَهْلَ الذِّكْرِ فَاِذَا وَجَدُوْا قَوْمًا يَذْكُرُوْنَ اللهَ تُنَادُوْا هَلُمُّوْا اِلٰى حَاجَتِكُمْ فَيَحُفُّوْنَهُمْ بِاَجْنِحَتِهِمْ اِلٰى السَّمَاءِ الدُّنْيَا قَالَ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ اَعْلَمُ بِهِمْ مَايَقُوْلُ عِبَادِيْ قَالَ يَقُوْلُوْنَ يُسَبِّحُوْنَكَ وَيُكَبِّرُوْنَكَ وَيُحَمِّدُوْنَكَ وَيُمَجِّدُوْنَكَ قَالَ فَيَقُوْلُ هَلْ رَأَوْنِيْ قَالَ فَيَقُوْلُوْنَ لاَوَاللهِ مَارَأَوْكَ قَالَ فَيَقُوْلُ كَيْفَ لَوْرَأَوْنِيْ قَالَ يَقُوْلُوْنَ لَوْرَأَوْكَ كَانُوْا اَشَدَّ لَكَ عِبَادَةً وَاَشَدَّلَكَ تَمْجِيْدًا وَاَكْرلَكَ تَسْبِيْحًا قَالَ فَيَقُوْلُ فَمَايَسْأَلُوْنَ قَالَ يَقُوْلُوْنَ يَسْاءلُوْنَكَ الْجَنَّةَ قَالَ فَيَقُوْلُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ وَاللهِ مَارَأَوْهَا يَارَبِّ قَالَ يَقُوْلُ فَكَيْفَ لَوْرَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ لَوْ اَنَّهُمْ رَأَوْهَا كَانُوْا اَشَدَّ عَلَيْهَا حِرْصًا وَاَشَدَّ لَهَا طَلَبًا وَاَعْظَمَ فِيْهَا رَغْبَةً قَالَ فَمِمَّ يَتَعَوَذُوْنَ قَالَ يَقُوْلُوْنَ يَتَعَوَّذُوْنَ مِنَ النَّارِ قَالَ فَيَقُوْلُ وَهَلْ رَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ وَاللهِ مَارَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ فَكَيْفَ لَوْرَأَوْهَا قَالَ فَيَقُوْلُوْنَ لَوْ لَوْرَأَوْهَا كَانُوْا اَشَدَّ مِنْهَا فِرَارً وَاَشَدَّلَهَا مَخَافَةً قَالَ فَيَقُوْلُ اُشْهِدُكُمْ اَنِّيْ قَدْغَفَرْتُ لَهُمْ قَالَ يَقُوْلُ مَلَكٌ مِنَ الْمَلَائِكَةِ فِيْهِمْ فُلَانٌ لَيْسَ مِنْهُمْ اِنَّمَا جَاءَلِحَاجَةٍ قَالَ هُمُ

அபுஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு ரிவாயத்து செய்கிறார்கள்:- நபி பெருமானார் அவர்கள் சொன்னார்கள், 'அல்லாஹுத் தஆலாவிற்கு சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்கள் வீதிகளில் சுற்றிக்கொண்டு திக்ரு செய்பவர்களை தேடிக் கொண்டிருப்பார்கள். திக்ரு செய்பவர்களை கண்டுவிட்டார்களானால், நீங்கள் தேடியது இதோ! இருக்கிறது விரைந்து வாருங்கள் என்று தங்களுக்கிடையில் கூப்பிடுவார்கள். எல்லாவர்களும் வந்து அவர்கள் இறகுகளை கொண்டு முதல் வானம் வரையிலும் திக்ரு செய்பவர்களை சூழ்ந்து கொள்வார்கள்.

அந்த மலக்குகளைப் பார்த்து அல்லாஹு தஆலா அவன் அறிந்தவனாக இருந்து அடியார்களை கொண்டு பெருமை பாராட்டி என் அடியார்கள் என்ன சொல்கிறார்கள்? என்று கேட்பான். மலக்குகள்(உன் அடியார்கள்) உன்னை துதி செய்கிறார்கள். பெருமைபடுத்துகிறார்கள், மகிமை படுத்துகிறார்கள், புகழ்கிறார்கள் என்று சொல்வார்கள்.

அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்தர்களா?

மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை.

அல்லாஹு தஆலா:- அவர்கள் என்னைப் பார்த்திருந்தாலோ?

மலக்குகள்:- அவர்கள் உன்னைப் பார்த்திருந்தார்களேயானால் உன்னை ரெம்பவும் வணங்குவார்கள், மிகுதமாக மகிமை படுத்துவார்கள், துதி செய்வார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் என்னிடம் எதைக் கேட்கிறார்கள்.?

மலக்குகள்:- அவர்கள் உன்னிடத்தில் சுவர்க்கத்தை கேட்கிறார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அந்த சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா?

மலக்குகள்:- சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை இரட்சகா!

அல்லாஹு தஆலா:- அவர்கள் அதைப் பார்த்திருப்பார்களேயானால் எப்படி?

மலக்குகள்:-அவர்கள் அந்த சொர்க்கத்தைப் பார்த்திருந்தால் அன்னமும் ஆசையுடையவர்களாகவும், அதில் அதிக தேட்டமுடையவர்களாகவும் அதன் பேரில் வேட்கையுடையவர்களாகவும் இருப்பார்கள்.

அல்லாஹு தஆலா:- பின்பு அவர்கள் எதை விட்டும் காவல் தேடுகிறார்கள்?

மலக்குகள்:- அவர்கள் நரகத்தை விட்டும் காவல் தேடுகிறார்கள்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?

மலக்குகள்:-சத்தியமாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அதைப் பார்த்திருந்தாலோ?

மலக்குகள்:-அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அதைவிட்டும் ரெம்ப பயப்படுவார்கள். ரெம்ப ஓடுவார்கள்.

அல்லாஹு தஆலா:-மலக்குகளே நான் உஙகளை சாட்சியாக்குகிறேன். நான் அவர்களுடைய பாவங்களையெல்லாம் பொருத்துவிட்டேன்.

மலக்கிலொருவர்:- பலானவன்(இன்னவன்)அந்த கூட்டத்தை சேர்ந்தவனல்ல. அவன் ஒரு தேவைக்காக வந்தவன்.

அல்லாஹு தஆலா:-அவர்கள் அவர்களோடு உட்கார்ந்தவனும் மூதேவியாகானே அப்படிப்பட்டவர்கள்.(ஆகையினால் அவனுக்கும் தான் பாவம் பொறுக்கப்பட்டது) என்று சொல்வான்.

 

عَنْ اَبِيْ سَعِيْدِاخُدْرِيْ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلّىَ اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ اَيُّ الْعِبَادِ اَفْضَلُ وَاَرْفَعُ دَرَجَةً عِنْدَ اللهِ يَوْمَ الْقِيٰمَةِ قَالَ اَلذَّاكِرُوْنَ اللهَ كَثِيْرًا قِيْلَ يَارَسُوْلَ اللهِ وَمِنَ الْغَارِيْ فِيْ سَبِيْلِ اللهِ قَالَ لَوْضَرَبَ بِسَيْفِه حَتّٰى يَنْكَسِرَ وَيَتَخَضَّبَ دَمًا فَاِنَّ ذَاكِرَاللهِ اَفْضَلُ مِنْهُ دَرَجَةً اَخْرَجَهُ التِّرْمَذِيْ .

அபூஸயீதுல் குத்ரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து செய்யப்படுகிறது:

அடியர்களில் யார் ரெம்ப வருசையானவரும், கியாமத் நாளில் அல்லாஹுதஆலா இடத்தில் பதவியால் உயர்ந்தவர்? என்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது.

அல்லாஹுத்தஆலாவை மிகுதமாக திக்ரு செய்கிறவர்களென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்தவரை பார்க்கிலுமா? என்று கேட்கப்பட்டது.

வாள் முறிந்து ரத்தத்தால் தோய்மளவும்(அல்லாஹ்வின் பாதையில்) வெட்டினாலும் அவனை விடவும் அல்லாஹுவை திக்ரு செய்தவன் பதவியால் வருசையானவனென்று ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

 

عَنْ اَبِيْ هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ قَالَ يَقُوْلُ اللهُ تَعَالٰى اَنَاعِنْدَظَنِّ عَبْدِيْ بِيْ وَاَنَامَعَهُ فَاِنْ ذَكَرَنِيْ فِيْ نَفْسِه ذَكَرْتُهُ فِيْ نَفْسِيْ وَاِنْ ذَكَرَنِيْ فِيْ مَلَأٍ ذَكَرْتُهُ فِيْ مَلَأٍ خَيْرٍ مِّنْهُمْ وَاِنْ تَقَرَّبَ اِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ اِلَيْهِ ذِرَاعًا وَاِنْ تَقَرَّبَ ذِرَاعًا تَقَرَّبْتُ اِلَيْهِ بَاعًا وَاِنْ اَتَانِيْ يَمْشِيْ اَتَيْنُهُ هَرْوَلَةً اَخْرَجَهُ الْبُخَارِيْ وَمُسْلٍمٌ وَالتِّرْمَذِيْ

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டும் ரிவாயத்து    செய்யப்படுகிறது, அல்லாஹுத்தஅலா சொல்வதாக, ரஸூலுல்லாஹி அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்:-

'நான் என்னுடைய அடியானுடைய எண்ணத்திடத்திலிருக்கிறேன். நான் அவனோடவே இருக்கின். ஆக அவன் என்னை அவன் மனதில் திக்ரு செய்வானேயானால் நான் என் மனதில் அவனை திக்ரு செய்யவும்.என்னை ஒரு கூட்டத்தில் திக்ரு செய்வானேயானால் அவர்களைக்காண விசேஷமான கூடடத்தில் நான் அவனை திக்ரு செய்யவும். என்னிடத்தில் ஒரு ஜான் முடுகுவானேயானால் அவனிடத்தில் ஒரு முழம் முடுகுவான். அவன் ஒரு முழம் முடுகினால் நான் ஒரு கெஜம் முடுகுவேன். என்னிடத்தில் நடந்து வந்தால் நான் அவனிடத்தில் ஓடி வருவேன்.'