Is Noorie Sha Thareekat against Sunnat Jamat? நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்!

Is Noorie Sha Thareekat against Sunnat Jamat? நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்!

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

நூரிஷா தரீகாவும், சுன்னத் வல் ஜமாஅத்தும்!

        தமிழ்நாட்டில் சுமார் 1974ம் ஆண்டு வாக்கில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரிலிருந்து உருது மொழியில் பாண்டித்துவம் பெற்ற நூரி ஷாஹ் என்ற ஹெட் கான்ஸ்டபிள் ஒருவர் தமிழ்நாட்டிற்கு தரீகா ஒன்றை அறிமுகம் செய்து வைக்கிறார். அததுடன் கேரளா மாநிலத்திற்கும் சென்று தமது தரீகாவை பரப்பினார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சென்று தமது தரீகாவை பரப்பினார். இவர் பைஅத்து பெற்ற ஷெய்கான கௌது அலி ஷாஹ்விற்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டு, கௌதுஅலி ஷாஹ்வும் அவரது ஆதராவாளர்களும் நூரி ஷாஹ்வா? நாரி ஷாஹ்வா? என்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வால்போஸ்டர் ஒட்டும் அளவிற்கு மோதல் முற்றி ஒரு கட்டத்தில், கௌதுஅலி ஷாஹ், நூரி ஷாஹ்வை அவர் என் முரீது இல்லை. மரீதாகிவிட்டார் என்று அறிவிக்கும் அளவிற்கு சென்றது. அவரின் மௌத்திற்குப் பின் நூரிஷாஹ் தன்னை கலீபாவாக-ஷெய்காக கூறிக் கொண்டு தன் கொள்கைகளை பரப்ப ஆரம்பித்தார்.

       கேரளாவில் பட்டிக்காட்டில் ஒரு மத்ரஸாவை உருவாக்கினார். பின் இவரின் கொள்கை கோட்பாடுகள் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமாக இருந்ததினால் இவரின் தரீகா வழிகெட்டது என்று கேரளா உலமா சபையினால் பத்வா வெளியிடப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டார். அதனபின் தமிழ்நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்து தமது தரீகாவை பரப்ப முயன்று சுமார் 54 கலீபாக்களை ஏற்படுத்தினார். அவரின் கலீபாக்களில் பல கொள்கைகளை சார்ந்தவர்களும் இருந்தனர். அவரின் சில்சிலா எனும் தொடரில் பல்வேறு குழப்பங்கள் இருந்தன. அவரின் சில்சிலாவில் வருகின்ற ஷெய்குகளில் ஒருவராக மௌலவி இஸ்மாயில் திஹ்லவி (தக்வியத்துல் ஈமான் நூலின் ஆசிரியர்) யின் நண்பர் செய்யிது அஹ்மது பரேலி எனபவரும் ஒருவர். இவர்களிருவரும் தமது வஹ்ஹாபியக் கொள்கைகளை பரப்ப பஞ்சாப் அருகே சென்றபோது சுன்னத் வல் ஜமாஅத்தினர்களால் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் ஸெய்யிதினா ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அடுத்தாண்மையாக ஸெய்யிதினா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகிறார்கள். இது எங்கும் காணப்படாத ஒன்றாகும்.

        அடுத்து, மெய்ஞ்ஞானத்தில் தாத்து மற்றும் உஜுதை இரண்டாக சொல்லி தாத்து பலதும், உஜுது ஒன்று என்றும், இதுவே வஹ்தத்துல் வுஜுது என்றும், இதற்கு மாறற்மான கருத்துடையவர்கள் வழி தவறியவர்கள் என்றும் கூறி வருகின்றனர்.

         இவ்வாறு தமிழ்நாட்டில் அவரின் கலீபாக்கள் ஆங்காங்கே தமது சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட கொள்கைகளை கூறி மக்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பதால், அவர்களின் கொள்கை என்ன? என்பதை விளங்க வேண்டி நூரி ஷாஹ் அவர்களின் கலீபாக்களில் ஒருவரான ஜமாலி ஷாஹ் என்பவருக்கு கடிதம் எழுதி கேட்டபோது அதற்கு அவர் அளித்த விபரம்கெட்ட, மடத்தனமான பதிலுக்கு உடன் எழுதிய விளக்கம் இதில் இடம்பெறுகிறது. ஆகவே மக்கள் இந்த தரம் கெட்ட தரீகாவை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டுகிறேன்.


1
786/92

அன்பும், நேசமும் கொண்ட  கலீபா ஜமாலி ஷாஹ் நூரி அவர்களுக்கு,

       ஜமால் உடைய சலாம். இதற்குமுன் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதில் கூறி எனக்கு தெளிவு தரும்படி எழுதியிருந்தேன். பதில் இல்லை. சந்தேகம் என்பது நோய். எனவே எனது சந்தேகங்களை தீர்த்து வைக்க அன்புடன் வேண்டுகிறேன்.

1. தங்களுடைய சில்சிலா ஷெய்கான நூரி ஷாஹ் ஹஜ்ரத் அவர்கள் எழுதிய 'பைஜானே ஹக்' நூலுக்கு K.A. நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ எழுதிய மறுப்பு நூலான 'இர்பானுல் ஹக்' எனும் நூலில் கூறியவைகள் உண்மையா?

2. மக்கா, மதீனா உலமாக்களாலும், இந்தியாவின் சங்கைமுpகு 268 உலமாக்களாலும் 'காபிர்' என்று தீர்ப்பளிக்கப்பட்ட அஷ்ரப் அலி தானவியை தாங்கள் பெரிய மகான், மெய்ஞ்ஞான ஸூபி என்று கூறுவதாக சொல்லப்படுவது உண்மையா? அஷ்ரப் அலி தானவி எப்படிப் பட்டவர்?

3. ஞான வழியில் நடக்க விரும்பும் எனக்கு தஸவ்வுப் பற்றி அறிவுறுத்தவும். உஜூது, தாத்து பற்றி விளக்கம் தரவும். முக்தி அடைய வழி சொல்லவும்.

மேற்கூறியதற்கு தாங்கள் பதில் எழுதி எனது ஆன்மீகத்திற்கு வழிகாட்ட வேண்டுகிறேன். தாங்கள் ஒரு பொறுப்பாக உள்ளதால் அடியேனுக்கு பதில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். பின் துஆ சலாம்.
                                                                                                        -Jamal Mohamed

இந்த கடிதத்திற்கு ஜமாலி ஷாஹ் எழுதிய அறிவீனமான பதில்களுக்கு எழுதிய விளக்கமான மறுப்புரை.

1
                                                          786/92                          17-11-95                               
                                                                                                                                    

அன்புள்ள ஜமாலி ஷாஹ் நூரி அவர்களுக்கு,

அல்லாஹ்வின் நேர்வழியை யார் பெ;றார்களோ அவர்கள் அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக! உங்கள் தபால் கடைத்தது. நான் கேட்டிருந்த 3 கேள்விகளுக்கு ஒன்றிற்கு மட்டும் விடையளித்திருந்தீர்கள்.

அந்த விடைகளில் உண்மைக்குப் புறம்பான செய்திகளும், தவறான கருத்து கொள்ளப்பட்ட செய்திகளும் இருந்ததால் மேலும் ளரு காபிரை முஃமினாக்கும்படியும் எழுதியிருந்தால் விளக்கமான, ஆதாரமான, சிந்தனையைத் தூண்டி நல்வழிக்குத் திரும்பும்படியான கருத்துக்கள் கொண்ட பதிலை எழுதியுள்ளேன்.

ஆகவே, இப்பதிலைக் கண்டாவது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு திரும்பி வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறேன். மேலும் இனிமேல் இதுபோல் மக்களை வழி கெடுக்க முற்படாதீர்கள் என்றும் வேண்டுகிறேன். 

 மற்றவை பின்.                                                           – ஜமால் முஹம்மது.

1
                                 786/92                                                                                                                                                       

அன்புள்ள ஆலிம்களுக்கு,

அல்லாஹ்வின் நேர்வழியை யார் பெ;றார்களோ அவர்கள் அனைவர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக! ஆமின். தங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றது. ஒரு திறமை மிகுந்த மத்ரஸா என்று சொல்லப்படும் மத்ரஸாவின் நாஜிர் அவர்களின் பதில் வியப்புக்குரியதாக இருந்தது.

மக்கா,மதீனா உலமாக்கள் 35 பேர்களும், இந்திய உலமாக்கள் 265 பேர்களும் அஷ்ரப் அலி தானவி போன்றோரைக் 'காபிர்' என்று தீர்ப்பளித்திருக்கிறார்களே! அவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தாங்கள் எழுதிய பதில் சிரிப்பி;ற்கிடமானது என்பதில் ஐயமில்லை. உங்கள் பதிலில் 'சரஹு பிக்ஹுல் அக்பரின்' வாசகத்திற்கு தாங்கள் எழுதிய கருத்து, 'ஒரு முஸ்லிம் உடைய சொல்,செயல் குப்ருடன் சம்பந்தப்பட்டுள்ளதாக காணப்பட்டால் அவற்றில் 99 சாத்திய் கூறுகள் குப்ருடன் சம்பந்தம் கொண்டிருக்க ஒரே ஒரு சாத்தியக் கூறின் மூலம் மட்டுமே குப்ரை நஃபி செய்யமுடியுமெனில் முப்திகளும், காழிகளும் நஃபியைக் கொண்டே தீர்ப்பு வழங்குவது ஏற்றமானது என்பதாகும்.

ஆனால், ஒரு முஸ்லிம் உடைய சொல், செயல் தெளிவாக குப்ருடன் சம்பந்தப்பட்டுள்ளதாக காணப்பட்டால் அவரை 'காபிர்' என்று சொல்வதுதானே மார்க்கச் சட்டம். ஒருவன் அல்லாஹ், ரஸூலைக் குறைவு கண்டால், அவர்களின் சொல், செயல்களை மறுத்தால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்குப் பின் தான் நபி என்று வாதித்தால் அவனின் சொல், செயல்களுக்கு 100 கருத்து வைத்து அதைப் பிரித்தா பார்ப்பார்கள்? இவ்வாறுதான் நீங்கள் ஓதியுள்ளீர்களா? அல்லாஹ், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீது கொண்ட நேசம் இவ்வளவுதானா? பிக்ஹு சட்டம் படித்தல்லவா எழுத வேண்டும்.

அடுத்து, 'அஹ்லு கிப்லாவைச் சார்ந்தவரில் எவரையும் 'காபிர்' என்று சொல்ல நமக்கு தகுதியல்லை.' என்கிறீர்கள். உங்கள் வாதப்படி வைத்துப் பார்ப்போம். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுக்குப் பின் தான் ஒரு நபி என்று வாதிட்ட குலாம் அஹ்மது காதியானியை மட்டும் ஏன் 'காபிர்' என்கிறீர்கள்? மேலும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜை தம் மீது கடமையில்லi என்பவனையும், ஹராமானவற்றை தனக்கு ஜாயிஸ் என்றும் கூறுபவனையும் முஃமின் என்றா கூற முடியும்? நீங்கள் ஓதிப்படித்தவர்தானே! இதெல்லாம் தெரியாமலாயிருக்கும்? யாருடைய நிர்பந்தத்திற்கோ, வேறு ஏதும் கிடைக்கும் என்ற காரணத்திற்கோ ஏன் பயந்து உண்மைக்கு மாறானவற்றை எழுத வேண்டும?;.

'ஷிர்க்' வைக்காமலிருக்கும் காலம் வரை ஒருவரை 'காபிர்' என்று சொல்ல முடியாது' என்கிறீர்கள். ஆனால் முதலி; சரஹு பிக்ஹுல் அக்பருடைய வாசகத்தை நீங்கள் எடுத்துக் காட்டும்போது 'குப்ருடன்(100 சாத்திய் கூறுகள் மூலமும்) சம்பந்தப்பட்டால் அவரை 'காபிர்' என்று கூறலாம் என்ற கருத்துடன் எழுதியுள்ளீர்கள். உங்கள் கூற்றுகளிலேயே முரண்பாடு தெரிகிறதே! தாங்கள் நான்கு மத்ஹபுக்குரிய பிக்ஹு நூற்களில் 'ரித்தத்' உடைய பாடத்தையும், சரஹு பிக்ஹுல் அக்பர் உடைய பிற்பகுதியையும் படிக்கவில்லை போலும்! அதையும் படிக்க முற்படுங்கள். யாருக்கும் அடி பணிய வேண்டாம். உண்மையை எழுதுங்கள், சொல்லுங்கள்.

'சுன்னத் வல்ஜமாஅத் யார்? அல்லாதார் யார்? எனக் கண்டு கொள்ள இயலாத அளவிற்கு நம் சமுதாயத்தில் உலமாக்கள் உள்ளார்கள்' என்கிறீர்கள். தாங்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை எது என்பதை புரிந்து கொள்ளாததே இதற்கு காரணம்.

மேலும் இமாம்களுடைய காலத்தில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளில் ஒரு சிலதுக்கு மாறுபட்ட கொள்கை கொண்டவர்களை அடையாளம் காட்டும் பொருட்டு அந்த கொள்கைகள் சுன்னத் ஜமாஅத் கொள்கைக்கு அப்பாற்பட்டவை என்று கூறி உண்மைக் கொள்கையை நிலை நாட்டினர் இமாம்கள் என்பது அறிந்த ஒன்று. ஆனால் அல்லாஹ், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை குறைவு கண்ட எவரையும் அவர்கள் 'முஃமின்' என்று சொன்னதில்லை. அவர்கள் முஃமின்களே அல்ல என்பது ஏகோபித்த முடிவு என்பதும் நீங்கள் அறியாதது அல்ல!

அடுத்து 'ஈமான், குப்ர் சம்பந்தப்பட்ட பிரச்சனை கல்பு சம்பந்தமானது என்கிறீர்கள். ஒருவன் வெளிரங்கமாக குப்ரை நாடுகிறான், செய்கிறான் என்றால் அவனுடைய கல்பை நோட்டமிட்டா அவனை காபிர், முஃமின் என்று தீர்ப்பளிப்பார்கள்? வெளிரங்கத்தைக் கொண்டுதானே பிக்ஹு மசாலா எடுக்க இயலும்? இது கூட படித்ததுதானே! ஏன் விதண்டாவாதம்?

அடுத்து, 'நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்தில், அவர்கள் முனாபிக்கீ;ன்களை முஸ்லிம்களின் பட்டியலில் சேர்த்தே வாழ்ந்து வந்தார்கள் என்பது சமுதாயம் அறிந்தது என்று எழுதியுள்ளீர்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் முனாபிக்குகளை வெளியாக்கி அவர்களுடன் சேராதிருக்க உபதேசித்ததையும், ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு என்ற சகாபியிடம் முனாபிக்குகளைப் பற்றி கூறி அவர்களின் பட்டியலை கொடுத்துள்ளதையும், நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் காலத்திற்குப் பி;ன் யாராவது வபாத்தானால் அந்த ஜனாஸாவிற்கு அந்த ஸஹாபி தொழ வருகிறார்களா? என்று பார்த்து விட்டு அவர்கள் வற்தால்தனர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள் தொழுவார்கள் என்ற சம்பவங்களையும் நீங்கள் பார்க்காமல் இருக்கமுடியாது. பார்த்தும் ஏன் நீங்களும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்புகிறீர்கள்? குர்ஆன் ஷரீபில் காபிர்களை கண்டித்து கூறியிருப்பதை விட அதிகமதிகம் முனாபிக்குகளைத்தான் கண்டித்து கூறப்பட்டடிருப்பது உங்களுக்கு கொஞ்சம்கூட தென்படவில்லை போலும்!

மேலும் இமாமுல் அஃலம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹு அவர்களை கௌதுல் அஃலம் போன்றோர்கள் குறை கூறியுள்ளதாக கொஞ்சம் சுட தயங்காமல் எழுதியுள்ளீர்களே! அபூ ஹனீபா ஹனபிய்யுல் யமனி, அபூ ஹனிபா ஹனபிய்யுல் கூஃபி என்று இருவர்கள் இருந்தார்கள். இதில் கூஃபி அவர்கள் நமது இமாம். எமனி என்பவர் குழப்பக்காரர். எமனியைத்தான் குழப்பக்கரரர் என்று கொளதுல் அஃலம் கண்டித்துள்ளார்கள் என்று ஒரு சாராரும், 'இவ்வாசகம் கௌதுல் அஃலம் கூறியது அல்ல. பிற்காலத்தலி; திணிக்கப்பட்டது என்று ஷாஹ் வலியுல்லாஹ் போன்ற ஒரு சாராரும் கூறியுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லை போலும். திரும்ப ஓத முற்படுங்கள். கௌதுல் அஃலம் அவர்களை விலாயத்து இல்லாத சாதாரண மனிதர் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நபிமார்கள், ஒலிமார்கள் விஷயத்தில் அதபுடன் நடக்க வேண்டும் என்பது தெரியாதா?

அடுத்து, பிரச்சனைக்குரிய உலமாக்கள் பற்றி எழுதும்போது, 'அவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. மேலும் அவர்கள் எழுதியதாகக் சுறப்படும் நூற்கள் அவர்கள் எழுதிய பிரதிதான் என்பதை உறுதிபட கூற இயலாது' என்று கூறிவிட்டு 'அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்' எனவும் எழுதியுள்ளீர்கள். அஷ்ரப் அலி போன்ற உலமாக்கள் தோன்றி பல நூற்றாண்டுகள் ஆகிவிடவில்லை. இன்றைய காலகட்டத்தில்தான் தோன்pனார்கள் என்பது அறிந்த ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, நகல் செய்யப்பட்ட ஹதீஸ்கள், சட்டங்கள் போன்றவற்றை ஒப்புக் கொள்ளும் நீங்கள், குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்க் மூலம் மக்களுக்கு அருளப்பட்டது என்பதையும் நம்பும் நீங்கள் உங்கள் கருத்துக்கு ஒத்து வரவில்லை இதை ஒப்புக் கொள்ள மறுத்து, உங்கள் வேஷம் கலைந்து விடும் என்று நொண்டி சாக்கு சொல்கிறீர்கள்.

நீங்கள் போற்றும் அஷ்ரப் அலி தானவி போன்ற உலமாக்கள் 'குப்ரை'க் கொண்டு தீர்க்கமாக எழுதியதை இன்றுரை அவரை மகான், வலி என்று போற்றிப் புகழும் தேவ்பந்த் மத்ரஸாவும், மற்ற குதுப்பானாக்களும், உலமாக்கள் என்பவர்களும் மறுக்கவில்லையே! அதையே தொடர்ந்து புத்தகமாக வெளியிட்டு வருகிறார்களே! அஷ்ரப் அலியின் காலத்திலேயே வெளியிடப்பட்டதே! இவ்வாறு அஷ்ரப் அலி தௌ;ளத் தெளிவாக குப்ருடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று காணும்போது அவரை 'காபிர்' என சொல்ல ஏன் தயங்க வேண்டும்?

மக்கா, மதீனா உலமாக்கள் வெளியிட்ட 'ஹுஸாமுல் ஹரமைன்' என்ற தீர்ப்பு வெளிவரும்போது அஷ்ரப் அலி உயிருடன்தானே இருந்தார். அதற்கு ஏன் ஒரு பதிலும் சொல்லவில்லை? அந்த குப்ர் கொள்கையை ஒப்புக் கொண்டதால்தான் பதில் சொல்லவில்லை. அதே பொல் மீரட் மௌலானா அவர்கள் அஷ்ரப் அலியை நேரில் விசாரித்து நீர் உம்மை ரஸூலாக அறிவித்தது உண்மையா? என்று கேட்டபோது ஏன் மறுக்கவில்லை? தன்னை ரஸுலாக அறிவித்ததினால்தானே! அதன் பிறகுதான் பர்ரத் மின் கஸ்வரா' என்ற தலைப்பில் அஷ்ரப் அலியை 'காபிர்' என்று தீர்ப்பளித்தார்கள். அப்போதும் அஷ்ரப் அலி உயிருடன்தானே இருந்தார். மறுக்கவில்லையே!

இப்னு ஜௌஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வழி கெட்ட கொள்கையில் இருக்கும்போது எழுதிய புத்தகங்களுக்கு அவர்கள் திருந்திய பின் மறுப்பு எழுதினார்களே! அஷ்ரப் அலி அப்படி ஏதும் எழுதினாரா? 'அஷ்ரப் அலி அந்த புத்தகங்களை எழுதினார் என்று உறுதிபட கூற முடியாது' என்று எழுதியு;ளளீர்கள். அஷ்ரப் அலி எழுதிய புத்தகம் சரிதான், .துதான் அவர்க கொள்கை என்று அவருடைய கலீபாக்களே ஒப்புக் கொண்டுள்ளனரே! நீங்கள் படித்துப் பார்க்கவில்லையா?

உங்கள் ஷெய்குமார்கள் அவிழ்த்து விட்டுள்ள கட்டுக் கதை போல் நீங்களும் அவிழ்த்துவிட்டுள்ளீர்கள். அவர்களின் கலீபாக்கள் ஸலவாத்தைமுழுமையாக சொல்லும்படி சொன்னதாகவும், நபி மீது காதல் கொண்டிருந்ததாகவும் எழுதியுள்ளீர்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் பெயர் எழுதும் போத ஒரு ஸலவாத்து கூட எழுத உங்களுக்கு மனம் வரவில்லையே ஏன்? உங்கள் சகவாசம் அப்படி. மேலும் அஷ்ரப் அலி கான்பூர் சுன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாவில் ஓதிக் கொடுக்கும் போது மௌலிதுகள் ஓதுவார். ஒருமுறை இதுபற்றி அவரிடம் கேட்கும்போது, இதுமாதிரி நடித்துதான் மக்களை நல்வழிக்கு இழுக்க இயலும் என்றார். இதனால்தனர் இவருக்கு ஹகீமுல் உம்மத் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது போலும். ஷெய்கே இப்படி இருக்கும் போது அவருடைய கலீபா எப்படி இருப்பார்?

துல் குவைஸரா, அப்துல்லா இப்னு மஸ்லூல் போன்ற முனாபிக்குகளை முஃமின் என்று சொல்ல முடியுமா? குலாம் அஹ்மது காதியானி, ஷியாக்கள் போன்றோரை முஃமின் என்றும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றும் சொல்ல முடியுமா? இக் காலகட்டத்தில்தான் தன்னை ரஸூலாக பிரகடனப்படுத்தி ரஸூலை குறைவு படுத்தி எழுதிய அஷ்ரப் அலி தானவியை முஃமின் என்று சொல்ல முடியுமா?

மேலும் உங்கள் சில்சிலாவின் ஷெய்கு நூரி ஷாஹ் அவர்கள் இல்யாஸி தப்லீகை வழிகெட்டது என்று சாடி பேசியது அறிந்த ஒன்று. ஆனால் நீங்கள் இல்யாஸை 'ரஹ்' போட்டு எழுதுகிறீர்களே! என்னே! நீங்கள் ஷெய்கு மீது கொண்ட பணிவு!

ஒவ்வொர காலகட்டத்திலும் வழிகெட்டவர்களை சுன்னத் வல் ஜமாஅத்தினர் அடையாளம் காட்டி சென்றுள்ளனர். அவ்வகையில் அஷ்ரப் அலியை 'காபிர்' என்று சொல்லியுள்ளார்கள். இவ்வாறு காபிர் என்றவரை 'முஃமின்' ஆக்கும் உங்கள் கூட்டம் வழி கெட்டதுதான்.

ஒரு காபிரை 'காபிர்' என்று சொல்லத் தயங்குபவனும் 'காபிர்' என்று உலமாக்ககளின் ஏகோபித்த முடிவுபடி (நூல்: ஷிபா) உங்கள் நிலையை உற்று நோக்குங்கள்.

முற்றும்