காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்

காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹுதஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி விழா அழைப்பிதழ்

By Sufi Manzil 0 Comment April 18, 2013

Print Friendly, PDF & Email

 

அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1434 ரஜப் பிறை 5 (16-05-2013) வியாழக்கிழமை; காயல்பட்டினம், குத்துக்கல் தெரு, ஸுபி மன்ஸிலில் அஜ்மீர் காஜா நாயகம் கந்தூரி விழா நடைபெறவுள்ளது. 

வழமைபோல் இவ்வருடமும் காலை சுப்ஹுக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படும். மாலை 4.30 மணிக்கு அன்னாரது மவ்லிது ஷரீபு ஓதி, மஃரிபுத் தொழுகைக்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெற்று அன்னாரது ஜீவிய சரிதமும், மார்க்க உபன்னியாசமும் நடைபெறும். அதன்பின் தபர்ரூக் என்னும் நேர்ச்சை விநியோகிக்கப்பட்டு விழா இனிதே நிறைவுறும் இன்ஷாஅல்லாஹ்.

இம்மஜ்லிஸிற்கு தாங்கள் அனைவரும் வருகை தந்து நற்பயன் அடைய வேண்டுகிறோம்.

இம்மாமேதை அவர்கள் பேரிலுள்ள நன்கொடை, நேர்ச்சைகளை தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களிடமும் கூடுதலாக வசூல் செய்து  ஜனாப் S.M. தாஜுத்தீன் , 93 A குத்துக்கல் தெரு, காயல்பட்டினம். என்ற முகவரிக்கு அனுப்பித் தர வேண்டுகிறோம்.

வல்ல ரஹ்மான் சங்கைமிகு காஜா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துஆ பொருட்டால் நம் அனைவர்களின் நாட்டதேட்டங்களை நிறைவேற்றித் தந்தருள்வானாக! ஆமீன்.

இவண்,

காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி கமிட்டி,

ஸூபி மன்ஸில், காயல்பட்டினம்.

Add Comment

Your email address will not be published.