உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா

உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

மக்காவில் முஸ்லிம்களுக்குக் கொடுமையும் அக்கிரமும்நடைபெற ஆரம்பித்தபோது அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, தாங்கிக் கொண்டு மக்கத்துக் குரைஷிகளை உளவுபார்த்து அவர்களது திட்டங்களை நபியவர்களுக்குத் தெரிவிப்பதில் திறம்படசெயல்பட்டார் உம்மு அய்மன்.நீக்ரோ அடிமைப் பெண்ணான இவர்களின் இயற்பெயர் பரிகாவாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையாவார்.

ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் மகனான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவரின் மாமன்மார்களிடம் காட்டி வருவதற்காக யத்ரிப் அழைத்துச்சென்றபொழுது இவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார். திரும்பும் வழியில் ‘அப்வா’ என்னும் இடத்தில் ஆமினா நாயகி அவர்கள் மறைந்துவிடவே, அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அண்ணலாரை பத்திரமாக மக்கா கொண்டு வந்து அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் ஒப்படைத்தவர்கள் இவர்கள்தாம்.

அண்ணலாரை இளவயதில் வளர்த்ததில் இவருக்கும் பங்குண்டு. அண்ணலார் இவர்களை தம் தாயைப் போன்றே கருதினர். பிற்காலத்தில் அவர்கள் இவரை நோக்கி, ‘என் தாய்க்குப் பின்னர் நீரே என் தாய்’ என்று நன்றியுணர்வுடன் கூறினர். மேலும் இவரே தம் குடும்பத்தில் எஞ்சிய உறுப்பினர் என்றும் கூறினர்.

கதீஜா நாயகியை அண்ணலார் திருமணம் முடித்தபின் இவர்களை விடுதலை செய்து விட்டனர். குறைஷிகளின் கொடுமை தாளாது அபினீஷியா சென்றவர்களில் இவர்களும் ஒருவர். பின்னர் இவர்கள் மதீனா வந்த போது கஸ்ரஜ் கூட்டத்தைச் சார்ந்த உபைத் பின் ஜைதை மணமுடித்து அய்மன் என்ற மகனை ஈன்றெடுத்தார். இதனால் இவருக்கு உம்மு ஐமன் என்ற பெயர் ஏற்பட்டது.

முஸ்லிம்களின்மீதுசினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்முஅய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர்! சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்குஇடமுண்டு உம்மு அய்மன்”

“சொர்க்கவாசிப் பெண்ணைத்திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை  மணம் புரிந்து கொள்ளட்டும்.”

அப்பொழுது உம்மு அய்மனின் வயதுஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில் கொண்டு முன் வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.

“அல்லாஹ்வின் தூதரே! நான் உம்மு அய்மனை மணந்து கொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.”

உம்மு அய்மனும் சரி, அவரை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தஸைது இப்னு ஹாரிதாவும் சரி, நபியவர்களின் வாழ்க்கையுடன் மிக ஆழமாய்ப்பின்னிப் பிணைந்தவர்கள். நபியவர்களுக்கு ஸைது மகனைப்போன்றவர் என்றால், உம்மு அய்மன் அன்னை.

மக்காவில்குரைஷியர் கொடுமை முடிவுக்கு வராமல் மதீனாவுக்கு நகர ஆரம்பித்தார்கள். அந்தக்காலகட்டத்தில் ஒருநாள்தன்னந்தனியாக, கால்நடையாகவே கிளம்பிவிட்டார் உம்மு அய்மன்.

உஹதுப் போரில்தோழியர் சிலரும் இடம் பெற்றிருந்தார்கள். அதில் உம்மு அய்மனும் ஒருவர்.முஸ்லிம் வீரர்களுக்குக் குடிநீர் அளிப்பது, காயமுற்றவர்களுக்குச் சிகிச்சைஅளிப்பது என்று சுறுசுறுப்பான களப்பணி.

பின்னர் ஃகைபர், ஹுனைன்யுத்தங்களின் போதும் நபியவர்களுடன் இணைந்து களம் புகுந்தார் உம்மு அய்மன்.முத்ஆ யுத்தத்தில் அவர் கணவர் ஸைதும்  ஹுனைன் யுத்தத்தில் அவர் மகன்அய்மனும் உயிர்த் தியாகிகளாகிப் போனார்கள். எழுபது வயதை எட்டிவிட்டிருந்தஅவர் அதன் பிறகு பெரும்பாலான காலத்தை வீட்டிலேயே கழித்தார். தம் அணுக்கத்தோழர்கள் அபூபக்ரு, உமரை அழைத்துக்கொண்டு நபியவர்கள் அவரது வீட்டிற்குச்சென்று நலம் விசாரித்து வருவது வழக்கம்.

நபியவர்கள்இறந்த பிறகு உம்மு அய்மனை நலம் விசாரிக்கச் சென்றனர் கலீஃபா அபூபக்ரும்உமரும். “வாருங்கள். நாம் சென்று உம்மு அய்மனைச் சந்தித்துவிட்டு வருவோம்.நபியவர்கள் செய்ததை நாமும் செய்வோம்,” என்று உமரை அழைத்துக்கொண்டுசென்றிருந்தார். அபூபக்ரு.

இவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் அழஆரம்பித்துவிட்டார் உம்மு அய்மன். “ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் தன்தூதருக்கு வாக்களித்துள்ளது சாலச் சிறப்பானதன்றோ!” நபியவர்களின் இழப்பைநினைத்து அழுகிறார் என்று நினைத்தார்கள் அவர்கள். ஆனால் காரணம் அதையும்மிகைத்திருந்தது.

“வானத்திலிருந்து இறங்கும் இறைவேதம் நின்று போய்விட்டதே என்று அழுகிறேன்.”

பிற்காலத்தில்மற்றொரு முறையும் அழுதார் உம்மு அய்மன். உமர் ரலியல்லாஹு கொல்லப்பட்டசெய்தி அறிந்து அழுதிருக்கிறார். அதைப்பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்க, “இன்று இஸ்லாம் பலவீனம் அடைந்துவிட்டது,” என்றார் உம்மு அய்மன். உமரின்திறமையின் மீதும் இறைப்பற்றின் மீதும் அவரது திட உறுதி, புத்திக் கூர்மை, ஆளுமையின்மீதும் உள்ளார்ந்த பார்வை இருந்திருக்கிறது உம்மு அய்மனுக்கு.

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உதுமான் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது மரணமடைந்தார் உம்மு அய்மன்.

Add Comment

Your email address will not be published.