அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு

அப்துல்லாஹ் பின் ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 20, 2014

Print Friendly, PDF & Email

இரண்டாம் அகபா உடன்படிக்கையின் போது பங்குபெற்ற 73 ஆண்களுள் முக்கியமான மற்றொருவர்அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. மதீனாவின் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.நுஃமான் இப்னு பஷீர் ரலியல்லாஹு அன்ஹுவின் தாய்மாமன். அகபா உடன்படிக்கைமுடிந்தவுடன் அவர்களுக்குப் பன்னிருவரைத் தலைவராக நியமித்தார்கள்நபியவர்கள். அவர்களுள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவும் ஒருவர். இவர் சிறந்த வீரர் மட்டுமில்லாமல் எழுதப்படிக்கத் தெரிந்த சிலரில் ஒருவராகவும் இருந்தார்கள். எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களை தங்கள் எழுத்தாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.அப்புறம்கவித்திறன். நபியவர்களே மகிழும் அளவிற்குக் கவிதைகள் புனைந்திருக்கிறார்.

‘அகபாஉடன்படிக்கை முடித்து, மக்கள் யத்ரிபுக்குத் திரும்பினார்கள்; அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்வுற்ற மிகமுக்கியப் போரான பத்ருப் போரும் நமக்குத் தெரியும். அப்பொழுது களமிறங்கியமுந்நூற்றுச் சொச்சம் முஸ்லிம்களுள் இப்னு ரவாஹாவும் ஒருவர். அந்தப் போரில்முஸ்லிம்கள் வெற்றியடைந்ததும் அந்தச் செய்தியை மதீனாவில் அறிவிக்க ஸைதுஇப்னு ஹாரிதாவையும் இப்னு ரவாஹாவையும்தாம் அனுப்பிவைத்தார்கள் நபியவர்கள்.

அபூதர்தா, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா இருவரும் நீண்ட நெடுங்காலமாய் இணைபிரியாநண்பர்கள். இப்னு ரவாஹா இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே இருவரும் தோழமையில்சகோதர உறுதிமொழி எடுத்துக் கொண்டு, “நீயும் நானும் இன்றிலிருந்துஅண்ணன்-தம்பி” என்று ஆகிவிட்டனர்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா மட்டும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தமது தோழர் அபூதர்தா இஸ்லாத்தை ஏற்காதது இவருக்கு உறுத்தலாகவே இருந்தது. ஒருநாள் அவர்கள் தம் நண்பர் அபூதர்தா வீட்டிற்கு சென்றார். அங்கு அபுதர்தாவின் மனைவி மட்டும் இருந்தார்.

இவர்கள் தம் நண்பரைப் பற்றி விசாரித்தபோது, கடைத்தெருவிற்கு சென்றிருப்பதாக அவர் மனைவி கூறியதும், அவருக்காக வீட்டில் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டார். அபுதர்தாவின் மனைவி மற்ற வேலைகளில் மும்முரம் காட்டியதும், ரவாஹா அவர்கள் அபுதர்தாவின் பூஜை அறைக்குள் நுழைந்து தாம் ஏற்கனவே கொண்டுவந்திருந்தசிறுரம்பத்தை கொண்டுகிடுகிடுவென்று அந்தச் சிலையைத்துண்டு துண்டாக அறுக்க ஆரம்பித்துவிட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறெதையும்வணங்குவது பொய்மையே” என்று சொல்லிக் கொண்டே அந்தச் சிலையை வெட்டிஎறிந்துவிட்டு, அபூதர்தாவின் வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டார்.

வீட்டிற்கு வந்த அபுதர்தா நிலைமையை பார்த்துவிட்டு கொதித்தெழுந்தார். அபூதர்தாவின் மனம் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பழி வாங்கத்துடித்தது. கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, அரற்றி, புலம்பி எல்லாம்முடிந்து மனம் ஒரு நிலைக்கு வந்தபோதுதான் அவரது புத்திக்குச் சட்டென்று அதுபட்டது. “இந்தச் சிலைக்கு என்று ஏதாவது ஒரு சக்தி இருந்திருக்குமானால் அதுதன்னைத் தானே தற்காத்துக் கொண்டிருக்க வேண்டுமே!”

அந்தஎண்ணம் தோன்றியவுடன் நிதானமடைந்து மிகவும் யோசிக்க ஆரம்பித்தார். உடனே நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றார்.

ஒருமுறைநபியவர்கள் பள்ளிவாசலில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அங்கு வந்து கொண்டிருந்தார் இப்னு ரவாஹா. சொற்பொழிவின் இடையேநபியவர்களின் ஒரு வாக்கியத்தில், “அமரவும்” என்ற வார்த்தைஇடம்பெற்றிருக்கிறது. அதை அவர்கள் உச்சரித்ததுதான் தாமதம்; பள்ளிவாசலுக்குவெளியே இருந்தவர் அங்கேயே அப்படியே சட்டென்று அமர்ந்துவிட்டார். பின்னர்இவ்விஷயம் நபியவர்களுக்குத் தெரியவந்தது. “அல்லாஹ்வுக்கும் அவன்தூதருக்கும் கீழ்படியும் உமது விருப்பத்தை அல்லாஹ் அதிகப்படுத்திவைப்பானாக” என்றார்கள் நபியவர்கள்.

இறையச்சம்உதிரத்தில் கலந்து, நாடி-நாளமெங்கும் பரவி இருந்திருக்கிறது இப்னுரவாஹாவுக்கு. ஒருநாள் வீட்டில் அமர்ந்திருந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவிசும்பி அழ ஆரம்பித்தார். ‘என்ன ஏது என்று தெரியவில்லை. கணவர் இப்படிஅழுகிறாரே’ என்று அவரது மனைவிக்கும் அழுகை தொற்றிக்கொண்டது.

அவரும் அழுதார். தம் மனைவியிடம், “நீ எதற்கு அழுகிறாய்?” என்றார் இப்னு ரவாஹா.

“நீங்கள் அழுதீர்கள். அதைக் கண்டு எனக்கும் அழுகை வந்துவிட்டது; அழுதேன்.”

“நான்நரக நெருப்பின் அருகே வருவேனே, அதிலிருந்து காப்பாற்றப்படுவேனோ, மாட்டேனோஎன்று எனக்குக் கவலை ஏற்படுகிறது. அதனால் எனக்கு அழுகை,” என்றார் இப்னுரவாஹா.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த புதிதில் ஒருநாள் தம் கழுதை மீதேறிச் சென்ற போது வழியில் நயவஞ்சகத் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபையைச் சந்தித்து அவனை இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். அப்போது அவன் ‘ முஹம்மதே! உம்மிடம் எவரும் வந்தால் அவரை இஸ்லாத்தின்; பால் அழையும். உம்மை எவரும் இங்கு அழைக்காதபோது ஏன் வீணாக தொந்திரவு செய்கிறீர்’ என்று கூறினான்.

அதுகேட்டுப் பொறுக்காத அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எங்களிடம் வந்து அருளுரை பகருங்கள். நாங்கள் அதை விரும்புகிறோம். உங்களை நேசிக்கிறோம்’ என்று கூறினர். தம்முடைய நண்பரே இவ்வாறு கூறியது அப்துல்லாஹ் இப்னு உபைக்கு மிகவும் சங்கடமாகிப் போய்விட்டது.

ஹுதைபிய்யாஉடன்படிக்கையின் அடிப்படையில்அடுத்த ஆண்டு நபியவர்களும் முஸ்லிம்களும் உம்ராவுக்குக் கிளம்பிச்சென்றார்கள்.

நபியவர்கள்அல்-கஸ்வா என்ற பெயருடைய தம் ஒட்டகத்தில் அமர்ந்துவர, அதன் வாரைப்பிடித்துக்கொண்டு முன்நடந்தார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா. நபியவர்கள் கஅபாவைச் சுற்றிவரும்போது அவர்களுக்கு முன்னால் சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, கவிதைஉரைத்தார்.

இறைமறுப்புக் குலத்தவரே விலகிச் செல்வீர்!
இன்றும்மோ டிறைவாக்கால் பொருத வந்தோம்
உறைவாளின் வீச்சால்உம் தலைகள் வீழும்!
உறுநண்பர் நண்பர்க்கே உதவ மாட்டார்!

இதைச்செவியுற்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு “ஓ இப்னு ரவாஹா! புனித இறைத்தலத்தில்அதுவும் நபியவர்கள் முன்னிலையில் நீ இப்படிக் கவிதை சொல்லலாமா?” என்றுஆட்சேபம் தெரிவித்தார்.

நபியவர்கள்உமருக்கு பதில் அளித்தார்கள். “இவர் சொல்லட்டும் உமர். சத்தியமாகச்சொல்கிறேன், இவரது வார்த்தைகள் ஈட்டி துளைத்தால் ஏற்படும் வலியைவிட அதிகவலியை இறைமறுப்பாளர்களுக்கு ஏற்படுத்தும்.”

பிறகுஅவர்களுக்கு மற்றொரு பிரார்த்தனையைச் சொல்லித் தந்தார்கள். “அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை; அவன் தனியோன்; வாக்குறுதியை நிறைவேற்றுபவன்; தன்அடியாருக்கு அவன் வெற்றியை அளித்தான்; தன் படையினரைக் கண்ணியப்படுத்தினான்; எதிரணியிர் அத்தனை பேரையும் தனியனாய்த் தோற்கடித்தான்.”

மிகஉரத்த குரலில் இதை உச்சரிக்க ஆரம்பித்தார் இப்னு ரவாஹா. முஸ்லிம்களும் அதைத் தொடர்ந்து உச்சரிக்க , குன்றுகளில் எதிரொலித்தது அந்த ஒலி.அங்கிருந்த குரைஷிகளின் உள்ளங்கள் அதிர்ந்தன.

யூதர்களுக்குஎதிரான ஃகைபர் யுத்தம் அதில்முஸ்லிம்கள் வெற்றிபெற்றபின், கைப்பற்றிய விளைநிலத்தை யூதர்களிடமே திருப்பிஅளித்தார்கள் நபியவர்கள். விளைச்சலில் முஸ்லிம்களுக்கு யூதர்கள் பங்குசெலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பங்கைநிர்ணயித்து விளைச்சலைப் பாகம் பிரிக்க அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைத்தான்நபியவர்கள் அனுப்பிவைப்பார்கள். மிகவும் கவனமுடன் அனைத்தையும் சரிபார்த்து, விளைச்சலைப் பங்கிட்டு எது முஸ்லிம்களுக்கு எது யூதர்களுக்கு என்று இப்னுரவாஹா சொன்னதும்,“நீர் நியாயமாய்ப் பங்கு பிரிக்கவில்லை இப்னு ரவாஹா.” என்று சிலசமயம் யூதர்கள் குறுக்கிடுவார்கள்.

நியாயமாய்அது கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிக எளிதான உபாயத்தைக்கையாண்டார் இப்னு ரவாஹா. “அப்படியா! ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களுக்குஎந்தப் பங்கு வேண்டுமோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.”

ஒருமுறைஅந்த யூதர்கள் தங்கள் பெண்களின் நகைகள் சிலவற்றைத் திரட்டி அவருக்குஇனாமாய் அளிக்க வந்தார்கள். “இந்தா இது உனக்கு. உன் வீட்டுப் பெண்கள்மகிழ்வார்கள்; வைத்துக்கொள். ஏதோ பங்கு பிரிப்பதைப் பார்த்துச் செய்யப்பா!” அது வேறொன்றுமில்லை. கிம்பளம். கையூட்டு அளித்து அவரைக் கைக்குள்போட்டுக்கொண்டால், தங்களுக்குச் சாதகமாய் அவர் பங்கு பிரிப்பார் என்பதுயூதர்களது எண்ணம்.

ஆனால்அப்துல்லாஹ் இப்னு ரவாஹா, “ஓ யூதர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக்கூறுகிறேன்! இறைவனின் படைப்பில் நீங்களே எனக்கு மோசமானவர்கள். ஆனால்அதற்காக உங்களுக்கு அநீதி இழைக்கும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நான்ஒருநாளும் நினைத்ததில்லை. கையூட்டுப் பெறுவது எங்களுக்குத்தடைசெய்யப்பட்டுள்ளது. அதை நாங்கள் தொடக்கூட மாட்டோம்.”

அந்தபதிலைக் கேட்டுவிட்டு மறைக்க இயலாமல் உண்மையைப் பேசினார்கள் யூதர்கள். “இது, இந்த நீதிதான் வானத்தையும் பூமியையும் தாங்கிப் பிடித்துள்ளது.”

முஃத்தா எனும் சிறிய கிராமம் இன்றைய ஜோர்டான்நாட்டு மலைப்பகுதிகளில் சிரியா நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள்ரோமர்களைக் களத்தில் சந்தித்த முதல் போர். மூத்தா படையெடுப்பின்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ஜைத், ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் இறந்து விடின் அப்படையணிக்குத் தலைமை தாங்குமாறு பணிக்கப்பட்டார்கள்.

சுமார் 3000படைவீரர்கள் கொண்ட ஒரு படையை தயார் செய்து தன்யத்துல் விதாவில் வைத்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணம் அனுப்பி வைத்தபோது, ‘அல்லாஹுத்தஆலா என் பாவம் பொறுத்து இப்போரில் மாள்பவர்களில் என்னை ஒருவனாக ஆக்குவாயாக! அப்போது என் அடக்கவிடத்தைக் கடந்து செல்பவர்கள், ‘வீராதி வீரரான இப்னு ரவாஹாவே! நீர் நேர்மையாளராகவும், வெற்றியாளராகவும் இருந்தீர். அதேபோன்று இறைவன் உம்மை மறுமையிலும் ஆக்குவானாக! என்று இறைஞ்சிவிட்டுச் செல்பவர்களாக’ என்று பாடினார்.

இதேபோன்ற பாடலை அவர் வழிநெடுக பாடிக் கொண்டே வருவதை இவருடன் வாகனத்தில் வீற்றிருந்த இளைஞர் ஜைத் இப்னு அர்க்கம் கேட்டுத் தேம்பித் தேம்பி அழுதபோது, ‘மகனே! எனக்கு இறைவன் மார்க்கத்திற்காக உயிர்தியாகம் செய்த நற்பேற்றினை நல்கி, உலகக் கவலைகளை விட்டும் என்னை அப்புறப்படுத்துங்கால் நீ ஏன் அழுகிறாய்? அது நல்லதல்லவா?’ என்று கூறிக்கொண்டே கீழே இறங்கி இரண்டு ரக்அத் தொழுது பின்னர் ஜைதை நோக்கி மகனே! இறைவன் என் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வான்’ என்று கூறினர்.

அங்கோகடலெனத் திரண்டிருந்தது எதிரிகளின் படை! பைஸாந்தியர்கள் ஓரிலட்சம் வீரர்களைஅனுப்பியிருந்தனர்; அவர்களுக்குத் துணையாய் லக்ஹம், ஜுத்ஆம், குதாஆ  கோத்திரங்களைச் சேர்ந்த இலட்சம் கிறித்தவ அரபுப் படையினர் திரண்டிருந்தனர்.ஏறத்தாழ இரண்டு இலட்சம் வீரர்கள்.

அப்பொழுது அவர்களுக்கு ரோமர்களின் பிரம்மாண்ட படையைப்பற்றிய தகவல் கிடைத்தது. நிச்சயமாய் முஸ்லிம்களுக்குப் பெரும் கிலேசத்தைஏற்படுத்தியது அந்தச் செய்தி. அவர்கள் மத்தியில்எழுந்து நின்றார் இப்னு ரவாஹா.

“உங்களதுதயக்கம் எனக்குப் புரிகிறது! ஆனால், இந்தப் பரிசிற்காகத்தான் நீங்கள்கிளம்பி வந்துள்ளீர்கள் – ‘ஷஹாதத்’ வீர மரணம் எனும் பரிசு. நமது எதிரிகளின்எண்ணிக்கையின் அடிப்படையிலோ, ஆயுத வலிமையின் அடிப்படையிலோ, குதிரைகளின்எண்ணிக்கையின் அடிப்படையிலோ நாம் போரிடுவதில்லை. நமக்கு அல்லாஹ் அருளியுள்ளஇந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக மட்டுமே போரிடுவோம். நாம்முன்னேறிச் செல்வோம்”

“நான்பத்ருப் போரில் கலந்து கொண்டேன். அப்பொழுதும் நம்மிடம் இரண்டு குதிரைகள்மட்டுமே இருந்தன. உஹது யுத்தத்தில் நம்மிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒருகுதிரைவீரர் மட்டுமே. முன்னேறுங்கள் சகோதரர்களே! நமக்கு இரண்டில் ஒரு பரிசுநிச்சயம். ஒன்று நமக்கு வெற்றி – இதைத்தான் அல்லாஹ்வும் அவன் தூதரும்நமக்கு வாக்களித்துள்ளார்கள். அவ்வாக்குப் பொய்ப்பதில்லை. அல்லது நமதுஉயிர்த் தியாகம். பிரிவது நமது உயிர் எனில் நமக்குமுன் சொர்க்கம் புகுந்தநம் சகோதரர்களுடன் நாம் சென்று இணைவோம்”

அந்தச்சிறு உரை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது.அவர்களின் குரல் ஓங்கி ஒலித்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இப்னு ரவாஹாஉண்மையை உரைத்தார்.”

முன்னேறியதுமுஸ்லிம்களின் படை. முஸ்லிம்கள் முஃத்தாபகுதிக்கு நகர்ந்து சென்று தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். துவங்கியதுயுத்தம். மும்முரமான போர். ஆனால்அதன் தீவிரம் சொல்லிமாளாத உக்கிரம்.

ஸைதுஇப்னு ஹாரிதா வீரமாய்ப் போரிட்டு வீர மரணம் எய்தினார். அடுத்து, தலைமைஜஅஃபரிடம் வந்து சேர்ந்தது. அவரும் போரிட்டு மரணம் அடைந்தார். போர்தீவிரமான நிலையை அடைந்திருந்தது. அடுத்து தலைமை அப்துல்லாஹ் இப்னுரவாஹாவிடம் வந்து சேர்ந்தது. அதுவரை படை அணியில் ஒரு வீரராய்ச் சுற்றிச்சுழன்று போரிட்டுக் கொண்டிருந்த அவருக்குத் தம்மிடம் வந்தடைந்த கூடுதல்பொறுப்பு ஒரு சிறு தயக்கத்தை ஏற்படுத்தியது. உடனே தமது ஆன்மாவிற்குஊக்கமளிக்கத் தமக்குத்தாமே கவிதை உரைத்தார் இப்னு ரவாஹா.

சபதம் செய்தேன் ஆன்மாவே!
சமரில் பொருதல் விதிஎன்றே
சபலம் ஒன்றும் எனக்கில்லை
சாப வெறுப்பும் எனக்கில்லை

பறையை முழக்கிப் பெருங்கூட்டம்
பாய்ந்தே வந்தும் எனக்கென்ன?
சிறையாம் உலகின் வாழ்வின்முன்
சேர்ந்த சொர்க்கம் பெரிதன்றோ?

மனமே நேரம் நீள்கிறது
மாற்றம் வருமுன் சீர்படுவாய்
இனமோ விந்தின் துளியாவாய்
இனியேன் உனக்குச் சபலங்கள்?

என்றன் உளமே படைநடுவில்
இறப்பேன் வெட்டப் பட்டவுடன்
உன்றன் விதியில் இறப்பொன்றே
உண்டோ அதுவே விதியாகும்

எதனை எதிர்பார்த் திருந்தாயோ
இறப்பாம் அதனை அடைவாய்நீ
முதலில் சென்ற அவ்விருவர்
முடிவே உனக்கும் விதியாகும்!

முஸ்லிம்கள்சரியான உணவை உட்கொள்ளக்கூட நேரமின்றி அன்று போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவின் உறவினர் ஒரு துண்டு இறைச்சியைஎடுத்துக்கொண்டு அவரிடம் ஓடிவந்தார்.

“இதைச் சாப்பிட்டுக் கொஞ்சம் தெம்பேற்றிக்கொள்ளுங்கள். இன்றைய போரில் உங்களது உடல் மிகவும் களைப்புற்றுவிட்டது.”

அதைவாங்கிச் சிறிது கடித்துச் சுவைத்திருப்பார். போர்களத்தின் ஓசையும்இரைச்சலும் காதில் விழுந்தன. “நான் இன்னுமா இந்த உலகில் இருக்கிறேன்?”

‘சகோதரர்கள்அங்கு உயிரைப் பணயம் வைத்திருக்க இங்கு என்ன இன்னும் ஆற அமர உணவு!’ என்றுஅந்த இறைச்சியைத் திருப்பித் தந்துவிட்டுக் களத்தில் குதித்தார் அவர்.

அச்சமயம்நபியவர்கள் மதீனாவில் தோழர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.அதனிடையே நேரில் காண்பதுபோல் இந்தச் செய்தியை அறிவித்தார்கள். ‘ஸைத் இப்னுஹாரிதா கொடியைக் கையிலெடுத்து இஸ்லாமியப் படையினருக்குத் தலைமை தாங்கிக்கொண்டுள்ளார் … இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, ஜஅஃபர்அதைத் தம் கையில் எடுத்துத் தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார் … அவரும் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹாதம் கையில் எடுத்துத் தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டுள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார் … பிறகு, தளபதியாகநியமிக்கப்படாமலேயே காலித் இப்னு வலீத் அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்குவெற்றியளிக்கப்பட்டுவிட்டது. வீர மரணத்தினால் பெரும் பேற்றினைஅடைந்துவிட்டார்கள். ஷஹாதத் எனும் பெரும்பேறு அவர்களுக்குக்கிடைத்துவிட்டது. அதைவிட அவர்கள் நம்முடன் இருப்பது மகிழ்ச்சிக்குரியதல்ல …”

இதைக் கூறியபோது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

முஃத்தா போரில் தமது உயிரைத் தியாகமாக்கி சொர்க்கவாசியாகிப் போயிருந்தார் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா.

Add Comment

Your email address will not be published.