கௌது யா முஹிய்யத்தீன்…

கௌது யா முஹிய்யத்தீன்…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

Print Friendly, PDF & Email

கௌது  யா முஹிய்யத்தீன்

       அப்துல் காதிர் ஜீலானி

மன்னி மன்னி வேண்டுகிறோம்

       எங்கள் துயர்த் தீர்ப்பீரே!

புனித மிக்க ஜீலான் – நகர்

       பதிலே பதியில் பிறந்தீர்

இஸ்லாத்தின் பண்பைப் பரப்ப

       பஃதாதில் அரசுப் புரிந்தீர்

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

அன்னைச் சொன்ன வாக்கை

       கண் போலக் காத்து வந்தீர்

கள்வர் கல்பை மாற்றி –உயர்ப்

       பண்பின் தீனை வளர்த்தீர்

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

தாஹா நபியின் பேரா

       தவ சீலக் குரு நாதா

அருளாளன் தீனும் ஓங்க

       அயராமல் உழைத்தீர் நாதா!

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

முத்தி லுதித்த ஒலியே

       உலகோர்கள் போற்றும் குத்பே

எந்நாளும் எம்மைக் காத்து

       அருள் புரிவீர் புரிவீர் குத்பே!

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

அபு ஸாலிஹ் மகவென உதித்தீர்

       அஞ்ஞான இருளை மாய்த்தீர்

மெஞ்ஞான நிலைக் கண்ட ஞான

       வருவீர் வருவீர்க் குருவே!

உங்களைக் காண வேண்டுமே

       எங்கள் ஆவல் மீறுதே

என்னை மன்றாடி

       கைத் தாங்குவீர்!

(கௌது…)

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.