அன்னை ஜெய்னப் பின்த் குசைமா ரலியல்லாஹு அன்ஹா

அன்னை ஜெய்னப் பின்த் குசைமா ரலியல்லாஹு அன்ஹா

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

அன்னையவர்கள் இளம் வயதிலேயே வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஏழைகளைத் தேடிச்சென்று உணவளிக்கும் உயர் குணத்தைக் கொண்டிருந்ததால் உம்முல் மஸாகீன் – ஏழைகளின் தாய் என்று அழைக்கப்படலானார்கள்.

முதலில் பிரபல்யமான நபி மணித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மையாரை மணந்திருந்தனர். ஹிஜ்ரி 3ஆம் ஆண்டு நடைபெற்ற உஹத் யுத்தத்தில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் வீர மரணம் எய்தப்பெற, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மறுமணம் புரிந்தனர்.

எனினும் திருமணம் முடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே அன்னையவர்கள் அண்ணலாரோடு தம் வாழ்வினை பகிர்ந்து கொண்டார்கள்.

மதீனப் பெருநகரில் வைத்து ஹிஜ்ரி 04ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் அன்னையவர்கள் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) ஜன்னத்துல் பகீஃ இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இந்நேரத்தில் அன்னையவர்களுக்கு வயது முப்பதுதான்.

நபியவர்கள் காலத்திலேயே இம்மை வாழ்வைத் துறந்த மணவாட்டிகளில் கதீஜா அம்மையாருக்குப் பிறகு அன்னை ஜெய்னப் அவர்கள் மட்டுமே! எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் பொற்கரங்களால் இறுதிச் சடங்குகளை செய்கின்ற பாக்கியத்தினையும் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றார்கள்.

Add Comment

Your email address will not be published.