தங்கள் வாப்பா கந்தூரி!

தங்கள் வாப்பா கந்தூரி!

By Sufi Manzil 0 Comment March 30, 2011

Print Friendly, PDF & Email

இன்ஷாஅல்லாஹ் வருகிற 03-04-2011 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் இலங்கை கொழும்பு குப்பியாவத்தை ஸூபி ஹழரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா ஷரீபில் வைத்து

அஷ்ஷெய்கு குத்புத்தீன் முக்துக் கோயா தங்கள் அல் ஹஸனி அல்காதிரி அர்ரிபாயீ(குத்திஸ்ஸிர்ரஹு)அவர்களின் கந்தூரி வைபவமும் அன்னாரின் செல்வப்புதல்வரும் அல் ஆரிபுபில்லாஹ் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவுமாகிய அல்ஆரிபுபில்லாஹ் அஷ்ஷெய்கு செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயாத் தங்கள் (குத்திஸஸிர்ரஹு) அவர்களின் 11வது வருட கந்தூரி வைபவம் நடைபெறவிருக்கிறது.

இதற்கு தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவரும் காயல்பட்டணம் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹ { அவர்களின் கலீபாவுமாகிய மௌலவி S.M.H. முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்கள்.

இதில் பிரதமஅதிதியாக சங்கைமிகு பூக்கோயாத் தங்களின் புத்திரர் மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது P.A. சைபுத்தீன் ஆலிம் ஸகாபி காமிலி அவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

குர்ஆன் சரீப் ஓதுதல், மௌலிது ஷரீப் ஓதுதல், பயான், லுஹர் தொழுகை, ஸியாரத்தைத் தொடர்ந்து நேர்ச்சை வழங்கப்படும்.

அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து அல்லாஹ்வின் பேரருளையும் ஷெய்குமார்களின் நல்துஆவினையும் பெற்றேக வேண்டுகிறோம்.

கந்தூரிக்கான நேர்ச்சை, நன்கொடைகளை அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் காதிர் கொழும்பு டிரேடர்ஸ் 53 பழைய சோனகத் தெரு, கொழும்பு-12 என்ற முகவரிக்கு அனுப்பித் தர வேண்டியது.

ஸ்ரீலங்காக ஹிஸ்புல்லாஹ் சபை,
ஸூபி மன்ஸில்,
411 தெமட்டகொட வீதி, கொழும்பு-9