Salman Farsi-ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு.

Salman Farsi-ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

Short Histroy-Hazrath Salman Farsi

 

Kuniat Abu Abdullah , Country Iran , Faras

He  was fire prayer then accept Christianity.

He was Alim of Christianity.

He was then informed by an Alim , who was at the verge of death , that 

              “The Final Prophet has been came and you

               should then go to him and accept Islam.”

He was then went to Madina and Embraced Islam on the hands of Hazrath Muhammed Mustafa  .

Hazrat Muhammed Mustafa , one day, called him  that,

                          Salman- minna-ahlal-bait     

                  i.e., “Salman  is in my family”

He  was in those students who learn Islam by Hazrat Muhammed Mustafa 

( known as Ashabe Suffa )

He  was at the age of more than 250 years when he  passed away from this world to Rafiq-e-Aala in 10 th Rajab 33 Hijri.

ஸல்மான் ஃபார்ஸி ரலியல்லாஹு அன்ஹு.
 
      அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் உற்றத் தோழர்களில் ஒருவரான இவர்களின் பெயர் மாபா. தந்தை பெயர் பூஸகஷான் அல்லது திக்கான். இஸஃபஹபனின் அண்மையிலுள்ள ஜீ என்ற சிற்றூரில் பிறந்தார்கள். தொடக்கத்தில் தந்தை போன்று ‘அக்னி’ வணக்கக் காரராய் திகழ்ந்த இவர்கள் கிறித்துவர்களின் வணக்க முறையால் கவரப்பட்டதை அறிந்த இவரது தந்தை இவர்களை சிறையில் அடைத்தார்கள். அதிலிருந்து தப்பிய இவர்கள் சிரியா சென்று சிறித்துவ மதத்தை தழுவி கிறித்துவ பாதிரியாரின் ஊழியத்தில் இருந்தார். அவர் இறந்ததும் மூஸலில் இருந்த கிறித்துவ பாதிரியாரிடம் சென்று வாழ்ந்தார்கள். அவருக்கு இறப்பு அண்மியதும், அவரின் ஆணைப்படி நஸீப்யன் நகர் சென்று அங்கிருந்த கிறித்துவ பாதிரியாரிடம் வாழ்ந்தர்கள். அவருக்கும் இறப்பு நெருங்கவே ‘நான் இனி எங்கு செல்வேன்?’ என்று இவர்கள் அவரை நோக்கி கேட்க, ‘பேரீச்சம் மரங்கள் அடர்ந்த இடத்தில் ஒரு நபி வருவார். அவரை அடைவீராக! என்று கூறிச் சென்றார்.
      இறுதி நபியைத் தேடி இவர்கள் வரும்வழியில், ஒரு கூட்டத்தினர் அதற்கு தாங்கள் வழிகாட்டுவதாகக் கூறி யத்ரிபிலுள்ள யூதன் ஒருவனுக்கு இவரை விற்று விட்டனர். அச்சமயத்தில் அண்ணல் நபி அவர்கள் குபா வந்திருந்தனர்.அங்கு அவர்களை சந்தித்த இவர்கள், கிறித்துவ பாதிரியார் சொன்ன அடையாளங்கள் அவர்களிடம் இருப்பதைக் கண்டதும், இஸ்லாத்தை தழுவினர்.அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இவர்களுக்கு ஸல்மான் என்று பெயரிட்டனர். இவர்கள் பாரசீக நாட்டைச் சார்ந்தவராகயிருந்தால் ஃபார்ஸி என்று சேர்த்து அழைக்கப்பட்டனர்.
  
     இவர்கள் அடிமையாய் இருந்தால் பத்ர், உஹது போர்களில் கலந்து கொள்ளவில்லை. 300 பேரீச்சம் நாற்றுகளை நடுவதோடு, 40 அவுன்ஸ் தங்கம் தந்தால் இவர் விடுவிக்கப்படுவார் என்று இவர் எசமான் கூற, அதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களே கொடுத்து அவர்களை விடுதலை செய்து, அபூதர்தா அன்ஸாரி அவர்களுடன் சகோதரராக இணைத்தார்கள்.
  
     அகழ்ப்போரில் இவர்கள் ஆலோசனைப்படியே அகழ் வெட்டப்பட்டது. அகழ் வெட்டுவதில் ஏனையவரை விட இவர்களே சிறந்து விளங்க, முஹாஜிர்களும் அன்ஸரிகளும்’இவர் எங்களைச் சார்ந்தவர்’ என்று கூறி தங்களுடன் சேர்த்துக் கொள்ள போட்டி போட்டனர். ‘ஸல்மான் மின்னா அஹ்லல் பைத்'(ஸல்மான் நம் குடம்பத்தைச் சார்ந்தவர்) என்று கூறி தங்களுடன் இணைத்துக் கொண்டனர்.
   
     இவர்கள் மீது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள். ‘இப்படியே பேசிக் கொண்டிருந்து விடுவார்களோ’ என்று அண்ணலாரின் மனைவிமார்கள் எண்ணுமளவிற்கு இரவில் வெகுநேரம் அண்ணலார் இவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
  
     ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் மதாயினின் ஆளுநராய் நியமிக்கப்பட்டார்கள். அப்போது தமக்கு அளிக்கப்பட்டு வந்த 5000 பொற்காசுகளை ஏழைகளுக்கு தானமாக வழங்கிவிட்டு, விறகு விற்றும் பாய் முடைந்து விற்றும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். எளிய உடையுடன் மதாயின் நகரில் சென்றபோது கூலியாள் என்றெண்ணி சுமை சுமந்து வருமாறு சிலர் கூறிய சம்பவங்கள் இவர்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
   
   ஈரானியரில் முதல் முஸ்லிமான இவர்களை ‘அறிவில் லுக்மான் ஹகீமுக்கு நிகரானவர்’ என்று அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். ஸூபித்துவத்தின் நிர்மாணகர்த்தாக்களுள் ஒருவர் என்று கூட கருதப்படுகிறார்கள். பல தரீகாக்கள் இவர்களை தங்கள் முன்னோடியாக வைத்துள்ளன. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்கு இவர்கள் முடியிறக்கியதால் நாவிதர்களின் போஷகனாகவும் கருதப்படுகிறார்கள். சுமார் 250 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் மதாயின் ஆளுநராய் இருந்தபோதே காலமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.