காஜாநாயகம் கந்தூரி!-Ajmeer Khaja Uroos!

காஜாநாயகம் கந்தூரி!-Ajmeer Khaja Uroos!

By Sufi Manzil 0 Comment June 8, 2011

Print Friendly, PDF & Email

அஜ்மீர் மாநகரில் மறைந்து வாழும் குத்புல் ஹிந்த் அதாயிர் ரஸூல் காஜா முயீனுத்தீன் ஜிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் இன்ஷாஅல்லாஹ் வழமை போல் இவ்வருடமும் 8-6-2011 புதன் அன்று நமது காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் வைத்து நடைபெற்றது. இவ்வைபவம் நமது ஷெய்கு நாயகம் ஸூபி ஷெய்கு அப்துல் காதிர் காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாக்களாகிய மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் காதிரி ஸூபி அவர்களும், மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி ஆகியோர்களின் தலைமையில், காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. அஸருக்குப் பின் நாயகம் அவர்களின் புனித மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டது. மஃரிபிற்குப் பின் காதிரிய்யா ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது. இஷாவிற்குப் பின் மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் காதிரி ஸூபி அவர்களால் மார்க்க உரை நிகழ்த்தப்பட்டது.

கந்தூரி விழாவின் இறுதியில் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி அவர்கள் எழுதிய 'ஷெய்கும் பைஅத்தும்' என்ற நூல் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களால் வெளியிடப்பட்டது.

இறுதியில் பாத்திஹா துஆ வோடு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்த முரீதீன்கள், முஹிப்பீன்கள் கலந்து கொண்டனர்.