ஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம்

ஏழு நிலைகள் மகாம்கள் – நப்ஸுகள் – எல்லைகள் அல்லது ஞான பூமிகளின் விபரம்

By Sufi Manzil 0 Comment January 10, 2014

Print Friendly, PDF & Email

1.    நப்ஸ் அம்மாறா – முன் துவாரம் பின் துவாரத்துக்கும் மத்தி (குதம்)

(மகாமே நாசூத்து  – மூலாதாரச் சக்கரம் -ஜாக்கிரம்  Gonands Glands)

இந்த நிலையில் இருப்பவர்கள் புலனாதிகளின் புசிப்புக்காக தன்னையே அர்ப்பணித்தவர்கள். நன்மை, தீமை இன்னது என்று புரியாமலே பஞ்ச மகாபாதகங்கள் அனைத்திலும் ஈடுபடும் தன்மை உடையவர்கள். இந்நிலையில் இருப்பவர்களுடைய விமோசனம் ஷரீஅத்தின் சட்டதிட்டங்களைக் கண்டிப்பாக கடைபிடிப்பதுதான். கடைபிடித்தால் நப்ஸ் லவ்வாமாவின் நிலையை அடையப் பெறுவர்.

2.    நப்ஸ் லவ்வாமா – லிங்கத்திற்கும் நாபிக்கும் (நடு குய்யம்)

(மகாமே மலக்கூத்து – சுவாதிஸ்தானச் சக்கரம் -சொப்பனம் –Adernals Glands)

இந்த நிலையில் நன்மை எது? தீமை எது? என உணர முடியும். இந்நிலையில் உள்ளவர்கள் தீமையில் ஈடுபடும்போது தன்னை நிந்தித்தாலும் அதிகமாய் தீமையின் பக்கமே சாடும் தன்மையுள்ளவர்கள். கெட்ட பண்புகளை புறக்கணித்து நல்ல பண்புகளை மேற்கொண்டு தெய்வ பக்தியுடன் நன்மையே செய்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைப்படி (தரீகத்தின் படி) நடந்து வந்தால் ஜபரூத்து என்ற பதவியை அடைய முடியும்.

3.    நப்ஸ் முல்ஹிமா – தொப்புள் (நாபி)

(மகாமே ஜபரூத்து – மணிப்பூரகச் சக்கரம் -சுளுத்தி –Pancreas Glands)

இந்நிலைக்கு வந்தவர்கள் முக்கால் பாகம் நன்மையிலும், கால் பாகம் தீமையிலும் ஈடுபடும் தன்மையுள்ளவர்கள். இவர்கள் மிகுதமாக ஜெபதபங்களில் ஈடுபட்டால் மகாமே லாஹுத்து என்ற பதவியை அடையப் பெறுவர்.

4.    நப்ஸ் முத்மஇன்னா – இருதய கமலம் (தாமரைக் காய்)

(மகாமே லாஹுத்து – அனஹதாச் சக்கரம் -துரியம் – Thymus Glands)

இந்நிலையை அடைந்தவர்கள் நன்மையைத் தவிர தீமையைத் தெரியாதவர்கள். இவர்களுடைய மனம் சதாவும் ஆண்டவனையே தியானித்துக் கொண்டு இருக்கும். நான் என்பது அற்றுப் போன இடம். விலாயத்து உதயமாகும் இடம். இவர்கள் சதாவும் மௌனமாய் இருந்து ஆண்டவனை தியானித்து வந்து 'மகாமே ஹாஹுத்து' என்னும் பதவியை அடையப்பெறுவர்.

5.    நப்ஸ் ராளியா – நாவின் கடைசி. கண்டஸ்தானம். – அடிநாவு (கழுத்து)

(மகாமே ஹாஹுத்து – விசுத்தாச் சக்கரம் – துரியாகீதம் – Thyroids Glands)

இந்நிலையை அடைந்தவர்கள் நான்காவது பதவியின் பூரணத்துவத்தை அடையப் பெற்று பேரின்ப நிலையை அடைந்தவர்கள். இன்னல்லா ஹாஹுவல் வலிய்யு என்ற திருவசனத்தின்படி விலாயத்தை சம்பூரணமாகப் பெற்றவர்கள்.

6.    நப்ஸ் மர்ளியா – எல்லை வாசல். நெற்றி –லலாடதானம் -சுழிமுனை –புருவ மத்தி –காப கௌஸைனி

(மகாமே பாஹுத்து –அஜ்னா சக்கரம் -அதீதம் – Pitutiary Glands) கண்ணுக்கும் புருவத்திற்கும் மத்திய தாழ்வான பாகம்.

தெய்வத்துடன் தொடர்பு கொள்ளும் நிலை. இல்ஹாம் என்னும் தெய்வ உதிப்பைப்பெறுவதும், தெய்வ வசனங்கள் கிடைக்கப்பெறுவதும் இந்நிலையில்தான். நுபுவ்வத்தின் எல்லை. இந்நிலைக்கு அதீதம் என்றும், ஆறாவது எல்லை என்றும் இதற்குமேல் ஒன்றுமில்லை என்றும் சில மகான்கள் கூறுகிறார்கள்.

7.    நப்ஸ் காமிலா – மூளை (சிரசின் உச்சி) பிரஹ்ம ரத்திரம்

(மகாமே ஜம்ஹுத்து –சகஸ்ராரச் சக்கரம் – Pineal Glands)

தெய்வம் தானாய் இருக்கும்நிலை. நுபுவ்வத்தின் சம்பூரண நிலை. குதுபிய்யத்தின் உதயம். இந்த நிலையை அடைந்தவர்களிடைமே முழு உலகத்தினுடைய அந்தரங்க ஆட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆளுநர்க்கு –குத்புல் அக்தாப் என்றுபெயர். இந்நிலையில் இருப்பவர்கள் தற்போதம் இழந்து, உஷாரற்ற நிலையில் இருப்பதனால் இவர்களுக்கு ஹாலூன்கள் என்று பெயர். மக்அது ஸித்கு உண்மை குடிகொள்ளும் தானம் என்று பெயர்.

8.    ஸகஸ்ராரம் – பிரங்ம ஸ்தானம் அல்லது பிரஹ்ம ரந்திரம்

ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை வரையில் ஜீவன் தன்னுடைய தன்மையினின்றும் மாறாமல் அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஸகஸ்ராரம் சென்றவுடன் பரமாத்மாவுடன் ஐக்கியமாய் விடுகிறது.

புருவங்களுக்கு மத்தியில் பிராணனை வைத்தல், விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அஞ்ஞானி ஒருவனுக்கு அந்திய காலத்தில் பிராணன் நவத் துவாரங்களில் கூட்டை விட்டுப் போகிறது. துன்பவுலகம் செல்லும் ஞானிக்கோ அது புருவத்தின் மத்தியில் நின்று உச்சந்தலையில் பிரம்மாந்திரத்தின் வாயிலாக வெளியே வருகிறது. மோட்ச உலகம் செல்லும்.

–    ஞானப்பிரகாசம் அல்லது நூருல் இர்பான் என்ற நூலிலிருந்து.