மேலப்பாளையம் ஸூபி மன்ஸிலில் கந்தூரி விழா!

மேலப்பாளையம் ஸூபி மன்ஸிலில் கந்தூரி விழா!

By Sufi Manzil 0 Comment January 27, 2012

Print Friendly, PDF & Email

தென்னிந்தியா தமிழ்நாடு மேலப்பாளையத்தில் அமைந்திருக்கும் ஸீபி மன்ஸிலில் மகான்களான சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷெய்கு அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அன்னாரின் கலீபாவான அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் அஷ்ஷெய்கு செய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி மற்றும் அன்னாரின் கலீபாவான ஸெய்யிது ஸாதாத் அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸூபி அந்தரத் தீவு ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் கந்தூரி விழா கடந்த புதன் கிழமை(25-01-2012) மாலை புனித மௌலிது ஷரீஃப் ஓதுவதுடன் ஆரம்பமானது. மன்ஸிலின் முன்னால் அடங்கப்பட்டிருக்கும் மகானுக்கு போர்வை போர்த்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து மஃரிபிற்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் மௌலானா மௌலவி அல்லாமா அவ்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத்  அவர்களால் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்க்க உபன்னியாசம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா அஷ்ஷெய்கு ஊண்டி செய்யது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி அவர்களால் நிகழ்த்தப்பட்டு தபர்ருக் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

இதில் ஏராளமான முரீதீன்களளும், முஹிப்பீன்களும் கலந்து சிறப்பித்தனர்.