தஞ்சாவூரில் ஸூபி மன்ஸில் திறப்பு விழா!

தஞ்சாவூரில் ஸூபி மன்ஸில் திறப்பு விழா!

By Sufi Manzil 0 Comment February 26, 2012

Print Friendly, PDF & Email

காயல்பட்டணம் தந்த காமில் வலி ஷெய்குனா ஷெய்கு அப்துல்காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களால் க்hயல்பட்டணத்தில் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட இடம்தான் குத்துக்கல் தெருவில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸில் ஆகும்.

இதேபோல் இந்த மகான் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கேரளாவிலும் ஸூபி மன்ஸில்களை நிறுவி மக்களுக்கு மகத்தான மார்க்க சேவையாற்றியிருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தஞ்சாவூரில் சிராஜுத்தீன் நகரில் மேற்காணும் மகானின் கலீபா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். முஹம்மதலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹழ்ரத் அவர்கள் புதிய ஸூபி மன்ஸிலை கடந்த 22-02-12 புதன்கிழமை அன்று திறந்து வைத்தார்கள்.

அத்துடன் மீலாது விழாவும், ஷெய்குனா முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் ஹைதராபாதி, ஷெய்குனா ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காஹிரி, ஷெய்குனா பூக்கோயா தங்கள் அந்தரத்தீவு ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் கந்தூரி விழாவும் நடைபெற்றது.

முன்னதாக காலை சுப்ஹு தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை புனித மௌலிது ஷரீபும் மஃரிபிற்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸும் அதைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவும் அன்னாரால் நடத்தப்பட்டது. இறுதியிர் நேர்ச்சை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இதில் சிறப்பு பிரதிநிதியாக அஷ்ஷெய்கு ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் அவர்களின் மகனார் கோயா தங்கள் அவர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான முஹிப்பீன்களும், முரீதீன்களும் இதில் கலந்து கொண்டனர். தூத்துக்குடி, மேலப்பாளையம், சென்னை போரூர், வியாசர்பாடி, காயல்பட்டினம், பீமாபள்ளி இடங்களிலுள்ள ஸூபி மன்ஸில் முஹிப்பீன்கள், முரீதீன்களும், அய்யம்பேட்டை, பள்ளப்பட்டி போன்ற ஊர்களிலுள்ள முஹிப்பீன்கள், முரீதீன்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஏற்பாடுகளை தஞ்சாவூர் ஹிஸ்புல்லாஹ் சபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.