காயலில் காஜா நாயகம் 2012 கந்தூரி!

காயலில் காஜா நாயகம் 2012 கந்தூரி!

By Sufi Manzil 0 Comment May 29, 2012

Print Friendly, PDF & Email

இந்தியாவில்அஜ்மீரில் மறைந்து வாழும் மகான் குத்புல் ஹிந்த் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்த தினமான ரஜப் பிறை 6 அன்று நமது ஸூபி மன்ஸிலில் வழமை போல் கந்தூரி வைபவம் இவ்வருடமும் நடைபெற்றது.

27-5-12 ஞாயிற்றுக் கிழமை காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. மாலை அஸருக்குப் பின் மகான் அவர்களின் பெயரில் உள்ள மௌலிது ஷரீபு ஓதப்பட்டது. மஃரிபிற்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபத்தீன் ஆலிம் ஸூபி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி ஸூபி ஹழ்ரத் அவர்கள் மார்க்க உரை நிகழ்த்தி தபர்ருக்குடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றது. இதில் உள்ளுர், வெளியூர் முரீதீன்கள், முஹிப்பின்கள் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.