எல்லாம் அவன் எனில் மக்களிடையே துவேஷம் ஏன்?

எல்லாம் அவன் எனில் மக்களிடையே துவேஷம் ஏன்?

By Sufi Manzil 0 Comment June 22, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: எல்லாம் அவனாயிருக்க மக்களிடையே துவேஷமென்பது ஏன் உண்டானது?

பதில்: துவேசிப்பது சொரூப அம்சத்தை சார்ந்து. அந்த சொரூப அம்சமோ பூதக் கூட்டுறவினால் உண்டானது. பூதக் கூட்டுறவுகள் ஒவ்வொரு உயிர்களிடமும் இருக்கிறது. அதாவது தண்ணீர் மிஞ்ஞின உயிர்களும், அக்கினி மிஞ்ஞின உயிர்களும், வாய்வு மிஞ்ஞிய உயிர்களும்,  பிருதிவி மிஞ்ஞிய உயிர்களும் இருக்கின்றன. எந்த உயிரினத்தில் எந்த பூதம் மிஞ்ஞியிருக்கிறதோ அவர்கள் அந்த குணபாட்டில் இருப்பார்கள். குணங்களுடைய வேறுபாட்டினால் துவேசமுண்டாகிறது. ஆகையால் சொரூப அம்சத்தை மாயை என்று எண்ணி மாற்றி விடுவானாயில் துவேசம் வருவதற்கு காரணமில்லை.

-ஞானப் பிரகாசம் அல்லது நூருல் இர்பான்.