காயல்பட்டினம் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்க மாநாட்டுத் தீர்மானங்கள் 15-06-2025
By Zainul Abdeen
காயல்பட்டினத்தில் 2025 ஜூன் மாதம் 14,15 சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெற்ற அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் அகீதா மாநாட்டில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1. நமது முன்னோர்கள் காட்டித் தந்த குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அடிப்படையில் மத்ஹபு இமாம்களை ஏற்று ஷரீஅத் தரீகத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றி நடக்கும் மௌலிது, மீலாது, ஃபாத்திஹாக்கள், கொடியேற்றுதல், ஓதிப் பார்த்தல், உரூஸ் போன்ற காரியங்களை முஸ்தபஹான (நல்ல) காரியம் என்று செய்து வந்ததில்… தப்லீக், தேவ்பந்த் வஹ்ஹாபிகள் போன்ற ஷைத்தானிய மாயவலையில் சிக்காமல் அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் அகீதாப்படி நடந்திடுமாறும், மதநல்லிணக்கத்துடன் நாட்டுப்பற்றுடனும் நடந்திடுமாறு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
2. ஷிர்க், பித்அத் ஒழிப்பு மாநாடுகள் என்றும் தேவ்பந்த் தப்லீக் ஜமாஅத் நடத்தும் இஜ்திமாக்கள், ஷப்குஜாரி, கஷ;த்து, சில்லா மற்றும் தேவ்பந்த வஹ்ஹாபிகளை ஆதரிக்கும் வழிகெட்ட தரீக்காக்களான நூரிஷாஹ் வகையறா தரீகாக்களின், அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விட்டும் விலகி இருக்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
3. இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் பிரிவினைவாத அமைப்புகளான இல்யாஸி தப்லீக் ஜமாஅத், அஹ்லுல் குர்ஆன், அஹ்லெ ஹதீஸ், தேவ்பந்தி, தவ்ஹீத் ஜமாஅத்;, ஜாக், ஜமாஅத்தே இஸ்லாமி, நூரிஷாஹ் வகையறாக்கள் இன்னபிற வழிகெடுக்கும் தரீக்காக்கள் ஆகிய வஹ்ஹாபிய மத இயக்கங்களைக் கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
4. ஷரீஅத் நடைமுறையில் ஹனஃபி, ஷhஃபியி, மாலிகி, ஹம்பலி ஆகிய நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்ற வேண்டியது எப்படி அவசியமோ, அதேபோல தரீகத் நடைமுறையில் ஒரு ஷைகிடம் முரீதாக – பைஅத் பெறுவதிலும் சரியான சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய வஹ்ஹாபியத்தையும், வஹ்ஹாபி தலைவர்களையும் எந்த வகையிலும் ஆதரிக்காத சில்சிலா தொடர் முறிந்து போகாத ஷைகுமார்களை கரம் பிடிக்க வேண்டும் என்றும்,
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமரியாதை செய்த ரஷீத் அஹ்மத் கங்கோஹி, ஹுஸைன் அஹ்மது டான்டவி (மதனி), சையத் அஹ்மத் ரேபரேலி போன்ற வஹ்ஹாபிய மதத் தலைவர்களின் பெயர் வருகின்ற சில்சிலாக்களில் சேராதிருக்க வேண்டும் என்றும்,
தாம் பைஅத்துப் பெற்ற ஷெய்குமார்களை எதிர்த்து செயல்பட்டு பின்னர் அவர்களின் ஸில்ஸிலாத் தொடரைக் கொண்டே பைஅத் கொடுக்கும் போலி தரீக்காக்களிடம் பைஅத் பெற வேண்டாம் என்றும்,
மேற்படி பைஅத் பெற்றிருப்பின் அந்த பைஅத்து செல்லாது என்றும், அவர்களிடம் பைஅத் பெற்றோர் மேற்படி பிரச்சினைகள் இல்லாத சரியான காமிலான (முழுமையான) iஷகிடம் சென்று பைஅத் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
5. வக்ஃபு சொத்துக்களை கபளீகரம் செய்யும் நோக்கில் வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் கொண்டுவர இருக்கும் சட்டத்தை திரும்பப் பெறுமாறு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
6. பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களும், பெரும்பான்மையான பள்ளிவாசல்களும், தர்காக்களும், தைக்கால்களும், கான்காஹ்களும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை ஏற்று நடப்பவை. அதன்படியே வக்ஃபு செய்யப்பட்டவை. எனவே அதை நிர்வகிக்கும் பொறுப்பை இஸ்லாத்திற்கெதிரான மதவாதிகளிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் வக்ஃபு வாரிய பணியாளர்களை நியமிக்கும்போது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கொண்டவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளையும் பொறுப்புதாரிகளையும் அதிகாரிகளையும் இந்த மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
7. தவ்ஹீத், தப்லீக், தேவ்பந்து வஹ்ஹாபிய மதத்தினர் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் பள்ளிவாசல்களில் தொப்பி அணியாமல், அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டிக் கொண்டோ இன்னும் இதுபோல வஹ்ஹாபிய முறையில் வழிபாடு செய்வதற்கோ, நிர்வாகத்தில் பங்கு பெறவோ ஸுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலை ஆக்கிரமித்து தப்லீக் மர்கஸாக ஆக்குவதற்கோ அனுமதிக்கக் கூடாது.இதற்கு முன்பு அந்தநிலை ஏற்பட்டிருப்பின் மஹல்லா ஜமாஅத்தார்கள் ஒன்றுபட்டு அதை சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.
8. தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், நூரிஷாஹ் வகையறா தரீக்காக்கள் போன்ற வஹ்ஹாபிய மதத்தை ஆதரிக்கும் வஹ்ஹாபிய மதத்தினர், வஹ்ஹாபிய தலைவர்களை ஆதரிப்பவர்களை ஸுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளில் இமாம்களாகவோ, முஅத்தின்களாகவோ நியமிக்கக் கூடாது என்று ஸுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகிகளை இச்சபை கேட்டுக் கொள்கிறது.
9. தங்களது பிள்ளைகளை மத்ரஸாவில் பயில சேர்க்கும்போது மக்தப் மதரஸாவிலும்;, அரபிக் கல்லூரியிலும் ஸுன்னத் வல் ஜமாஅத் மத்ரஸாக்களில்தான் சேர்க்க வேண்டும் என்றும்,
வஹ்ஹாபிய மத்ரஸாக்கள், தப்லீக் மத்ரஸாக்கள், நூரிஷாஹ் போன்ற கிளை தரீக்காக்கள் ஏற்படுத்தியிருக்கும் மத்ரஸாக்களில் சேர்த்து பிள்ளைகளின் ஈமானைப் பாழாக்க வேண்டாம் என பெற்றோர்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறது.
10. பெண்கள் மத்ரஸா என்னும் பெயரில் தப்லீக், தவ்ஹீத், நூரிஷாஹ் போன்ற வஹ்ஹாபிய ஜமாஅத்துகள் நடத்தும் கேந்திரங்களில் பெண்களை சேர்க்காமல் நம் தாய்வழி பாரம்பரிய முறையில் பெண்கள் மார்க்கம் பயில வழிவகை செய்ய மஹல்லா ஜமாஅத்துகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11. வழிகெட்டகொள்கை கொண்ட வஹ்ஹாபிகளால் தொகுக்கப்பட்ட நூல்கள், ஆடியோ, வீடியோ கேசட்டுகள் போன்றவற்றை வாங்கிப் பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோ கூடாது என்றும், அவர்கள் நடத்தும் கூட்டம், பயான் மஜ்லிஸ்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
12. பெஹல்காமில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட நாசகாரச் செயல்களை இந்த மாநாடு வன்மையாக கண்டிப்பதுடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் எல்லா பயங்கரவாத அமைப்புகளையும் பாரபட்சம் பார்க்காமல் தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய,மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
13. மிகப்பெரும் முயற்சி செய்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்த காயல்பட்டினம் ஸுன்னத் வல் ஜமாஅத் பொதுமக்களையும், நிர்வாகிகளையும் இதில் உடன்பட்டிருக்கிற ஒத்துழைப்பு தந்திருக்கிற அனைவருக்கும் இந்த மாநாட்டு குழுவினருக்கும் மஜ்லிஸ் சார்பாகவும், இந்த மாநாட்டு குழு ஏற்பாட்டாளர்கள், உலமாக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறோம்.
14. அத்தோடு இந்த மாநாட்டுக்காக சிறப்பாக பந்தல் அமைத்துக் கொடுத்து ஒலி, ஒளி அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கும், காட்டு மக்தூம் பள்ளியில் தங்குவதற்கு ஏற்பாடு, ஆங்காங்கே தங்குவதற்கு ஏற்பாடுகள், செய்யிதினா பிலால் பள்ளியில் ஏற்பாடுகள் செய்து தந்தவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், சேலம், சென்னை போன்ற வெளியூர்களில் இருந்து தன்னிச்சையாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு இந்த மாநாடு சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
இதில் நிறைவேற்றப்பட்ட மார்க்கம்சம்பந்தமான தீர்மானங்களை பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் நடைமுறைபடுத்தும் பட்சத்தில் அன்னவர்களுடைய ஈமான் காப்பாற்றப்படும் என்பதில் ஐயமில்லை.
வல்ல ரஹ்மான் நமக்கு அதற்கு அருள் புரிவானாக.. ஆமீன்.
16-06-2025
வெளியீடு:
ஜம்இய்யத்து அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்,
காயல்பட்டினம் -628204