குருத்துரோகமும் ரவூப் மௌலவியின் வஜ்தத்துல் (?) வுஜூதும்!

குருத்துரோகமும் ரவூப் மௌலவியின் வஜ்தத்துல் (?) வுஜூதும்!

By Sufi Manzil 0 Comment January 28, 2017

Print Friendly, PDF & Email

 சமீபகாலமாக இணையதளங்களில், முகநூல்களில், வாட்ஸ்அப் தளங்களில் இலங்கை காத்தான்குடியைச் சார்ந்த மௌலவி அப்துர் ரவூப் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எங்கள் இமெயில் முகவரிக்கும் அவரைப் பற்றின மெயில் வந்தது. இதை எழுதியவர்கள் அஸ்ஹாபுல் பத்ர் கல்முனை என்னும் ஊரைச் சார்ந்த இயக்கத்தினர். அனைத்துக்கும் பதிலளிக்கும் விதமாக தொகுக்கப்பட்டதுதான் இந்த பதிலுரை.:

முதலில் தரீகத் அதிலும் பைஅத் கிலாபத் – ஷெய்குக்கும், முரீதுக்கும் உள்ள தொடர்புகள், பேணவேண்டிய விதிமுறைகள், ஒழுக்கங்கள் பற்றி முழுமையாகப் புரியாமல் தலைகால் தெரியாமல் இவர்கள் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்றனர்.

தரீகத்தைப் பின்பற்றுபவன் ஒரு ஷெய்கிடம் பைஅத் பெற்றுக் கொண்டு, அவரது கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, அவரிடம் முழு முஹப்பத் வைப்பது கொண்டே ஜெயம் பெற முடியும் என்பது தரீகத் காட்டும் வழிமுறைகளில் ஒன்றாகும். அனைத்து தரீகாக்களும் இதையே போதிக்கின்றன.

செய்குனா குத்புஜ்ஜமான் உமர் வலியுல் காஹிரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்: ‘நான் இவ்வளவு பெரிய அந்தஸ்த்தை அடைவதற்கு எனது செய்கின் கட்டளைக்கு முற்றிலும் இணங்கி நடந்ததும் ஒன்று’ என்று.

அதிலும் எங்களது ஷெய்குனா அவர்கள் தங்களுடைய வஸியத்தில் ஒன்றாக இதை பிரகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறு ஷெய்குவிடம் நேசம் கொண்டால் மட்டுமே ஜெயம் பெற முடியும் என்பது அனைத்து தரீகத்து சகோதரர்களுக்கும் தெரியும்.

அதேபோல் ஷெய்கு தமது கொள்கைக் கோட்பாடுகளை காப்பாற்றுவார், தம் வழியில் முற்றிலும் நடப்பார் என்று நம்பி ஒருவரை தமது கலீபா – பிரதிநிதியாக நியமிப்பதும் தரீகின் நடைமுறை. அவர் கலீபாவை நியமிக்கலாம், நியமிக்காமலும் போகலாம். இது ஷெய்குவின் விருப்பத்தைப் பொறுத்தது. அவ்வாறு நியமிக்கப்படுபவர் ஷெய்குவின் கோட்பாடுகளை நிலைநிறுத்தி செய்குக்கு முற்றிலும் மாறுபடாமல் இருத்தல் வேண்டும். இது அவரது கடமையாகும். இதற்கு மாற்றமாக செயல்பட்டால் அவரது பைஅத்தே அறுந்து, செய்குவுடன் உள்ள தொடர்பு முற்றிலும் நீங்கி விடும். (ஆதார நூல்: இர்ஷரதே ஹபீப்)

ஷெய்கானவர் தம்முடைய ஷெய்குக்கும், அவர் அவருடைய ஷெய்குவுக்கும் பிரதிநிதியாக செயல்பட்டு இந்த சில்சிலா தொடர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை செல்லக் கூடியதாக இருக்கும். இறுதியில் அல்லாஹ்வை சென்றடையும். ஆக ஷெய்குக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் மாறு செய்தவராகிறார். இதுதான் தரீகத்தின் கோட்பாடு. இதை  முதலில் விளங்கிக் கொண்டு இனி வருபவற்றைப் பார்ப்போம்.

எங்கள் இணையதளம் எக்காலமும் பொய்யையும், கற்பனையையும் எழுதியதில்லை. எவர் மீதும் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு எதையும் எழுதுவதில்லை. அதே சமயம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரக்குறைவாக எழுதியவர்களையும், பேசியவர்களையும், இமாம்கள், இறைநேசர்கள், செய்குமார்கள், குறிப்பாக எமது செய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களையும் அவர்களின் ஸில்சிலா செய்குமார்களையும் குறை காண்பவர்களையும், மரியாதைக்குறைவாகப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட எவரையும் இத்தளம் விட்டு வைக்காது. அவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும். அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி.

அந்த அடிப்படையில்தான் காத்தான்குடியைச் சார்ந்த மௌலவி அப்துர் ரவூப் உடைய விசயங்களை இதில் தெரியப்படுத்தினோம். அதுவும் ஆதாரங்களுடன் தெரிவித்தோம். இதைப் பொறுக்க முடியாமல் அவரது அடிவருடிகள் தற்போது உளற ஆரம்பித்துள்ளனர்.

இதில் இவர்கள் சொல்லும் முக்கிய குற்றச்சாட்டு, நீங்கள் வெளியிட்டிருக்கும் கடிதங்கள் வாசிக்க முடியாதவாறு துலக்கமற்று உள்ளது. ஒரு சிலவற்றை மாத்திரம் எடுத்து டிரான்ஸ்லேட் பண்ணி மற்றதை ஏன் விட்டு விட்டீர்கள்? இது உங்கள் நேர்மையற்ற தன்மையைக் காட்டுகிறது என்பது.

நாங்கள் பதிவேற்றம் செய்த கட்டுரையில் அந்தக் கடிதத்தின் தேவை இல்லாமலிருந்தது. அதுவும் சில எழுத்துக்கள் மிக சந்தேகமாக இருந்தது. அதனால் அதை டிரான்ஸ்லேட் பண்ணவில்லை. தற்போது அதையே தாங்கள் தப்பிப்பதற்கு ஆதாரமாக சொல்வதால், அதை அப்படியே டிரான்ஸ்லேட் பண்ணியிருக்கிறோம். சந்தேகமுள்ள எழுத்துக்களை அப்படியே ஸ்கேன் பண்ணி பதிவேற்றம் செய்துள்ளோம்.  ரவூப் மௌலவி செய்குனாவிற்கு எழுதிய கடிதத்தின் நகலை பாருங்கள்.

ரவூப் மௌலவி செய்கனாவிற்கு எழுதிய கடிதத்தின் நகல்:

மௌலவி ஏ. றவூப்

காத்தான்குடி-5

பெருமதிப்புக்கும், கண்ணியத்துக்கும் உரிய ஞானபிதா ஷெய்கு நாயகம்(ரஹ்) அவர்களின் மேலான திருச்சமுகத்துக்கு அடியேன் அப்துல் றவூப் எழுதுவது- நானும், நமது தரீகாப் பிள்ளைகளும் நலமாக இருக்கிறோம். தங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும், நிறைந்த ஆரோக்கியத்தையும் தர இறைவனை இறைஞ்சுகிறோம்.

தகப்பனாருடைய வபாத்துக்கு பின்னர் ஒருதடவை மட்டும் தங்களின் திருமுகம் தரிசிக்க கிடைத்தது. அதன்பின் தங்களைக் காணும் பாக்கியம் கிடைக்கவோ அல்லது அதை நான் ஏற்படுத்திக் கொள்ளவோ இல்லை. அது எனது தவறுதான். ஆயினும் عند كرام الناس مقبول لوالعفو என்ற நம்பிக்கையில் காலம் கடந்து விட்டது.

தகப்பனாருடைய வபாத்துக்குப் பின் பதுரிய்யா தைக்காவை நான் பொறுப்பெடுக்கமுன் எனது உள்ளத்தில் பல உயர்ந்த எண்ணங்கள் இருந்தன. நமது தரீகாவில் உள்ள சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனியாமல் நடந்து கொள்வதனால் பல மனவேதனைகளும், பிரச்சனைகளையும் உருவாகி அவ்வெண்ணங்கள் தடைப்படுகின்றன.

மத்ரஸாவுடன் சேர்த்து ஒரு அறை அமைத்து, தாங்கள் காத்தான்குடியில் இருக்கும் காலத்தில் மத்ரசாவில் வெள்ளிக்கிழமைதோறும் முரீதுப்பிள்ளைகளை அழைத்து நமது (ராதிபு) நடத்துவதற்கும் முடிவு செய்திருந்தேன். மேற்கூறிய காரணத்தால் அவை தடைப்பட்டு விட்டன. இன்ஷாஅல்லாஹ் மிகவிரைவில் எனதெண்ணம் நிறைவேற தாங்கள் துஆ செய்து கொள்ளவும்,

நான் பல மத்ரஸாக்களில் கல்வி பயின்றேன். மவ்லவியான பின் எனக்கு ஞானாசிரியர் ஒருவர் தேவைப்பட்டது. நீண்டகால முயற்சியின் பின் எனக்கு ஷெய்காக தங்களை அல்லாஹ் தந்தான். பாலமுனையில் வைத்து பைஅத் பெற்று தங்களின் முரீதான பின் ஆரிபீன்களின் நூல்களைப் பார்த்து விளங்கும் ஆற்றலைப் பெற்றேன். அதற்குமுன் அவ்வாhற்றல் எனக்கு இருக்கவில்லை. அதன்மூலம் பல நூல்களையும்  

فصولص الحكم الفتوحات المكية تفسير روح البيان الانسان الكامل التحفة المرسلة جامع الصول تقريب الأصول

போன்றவற்றையும் பார்வையிட்டேன். தங்களுடன் இருந்து தங்கள் மூலம் எத்தனையோ அறிவுகளையும் பெற்றிருக்கிறேன். தாங்களின் மூலம் பெற்ற அறிவையும், மேற்கூறப்பட்ட கிதாபுகளில் நான் பெற்ற அறிவையும் நான் ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டும் சரியாகவே இருந்தது. காத்தான்குடிக்கு வரும் தைக்கா மௌலானாவிடம் நான் பைஅத் பெறவில்லை. இருந்தாலும் ஓரளவு நெருங்கிப் பழகினேன். அந்த வகையில் அவர்களிடம் இருந்து கிடைத்த அறிவும் சரியாக இருந்தது. நான் பொதுவாக பெற்ற அறிவு அனைத்தையும் இரண்டு உரைகல்லில் உரைத்துப் பார்த்தேன். அதைச் சரியெனக் கண்டேன். அவர்களில் தாங்கள் ஒன்று, தைக்கா மௌலானா ஒன்று. எனது ஞானவழிகாட்டி, எனது ஷெய்காகிய தாங்களும், தைக்கா மௌலானாவும்தான்.

இப்பொழது எழுந்துள்ள பிரச்சினை பற்றி தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஆயினும் எனதுகுரு என்ற ரீதியில் தங்களுக்கு இதை எழுதுவது என் கடமை ஆதலால் இதை விவரமாக எழுதுகிறேன்.

காத்தான்குடியில் ஐ.தே.கட்சியினரால் நடத்தப்பட்ட மீலாது விழா ஒன்றில் நான் பேசினேன். அதில் எம்.பீ.பரீத் அவர்களும் கலந்து கொண்டார்கள். அதில் قل انما انا بشر مثلكم என்ற ஆயத்துக்கு விளக்கம் சொல்லும்போது சில ஞானக் கருத்துக்களையும் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவைகளாவனانا احمد بلا ميم >اناعرب بلا عينஇந்த ஹதீஸ்களுக்கு விளக்கம் சொல்லும்போது ஹக்குடைய தாத்துக்கு இரண்டு நிலை என்றும், அவை தன்ஸீஹ்-தஷ்பீஹ் என்பனவாகும் என்றும், அவ்விரண்டுக்கும் குர்ஆனில் இருந்து ان تقرضوا الله قرضا حسنا – ومارميت اذ رميت ولكن الله رمىபோன்ற ஆயத்துக்களையும், ஹதீஸில் இருந்து لا يزال العبد மற்றும் இவை போன்ற ஒரு சில ஹதீஸ்களையும் கூறி மக்களை ஹக்களவில் சேர்ப்பதற்காக அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களின் சூறத்தில் தோன்றினான் என்று கூறி அதற்காக தாங்கள் முதலில் கூறிக் காட்டிய நரிக்குறவன் உதாரணத்தையும் கூறினேன். அதைத் தொடர்ந்து பேசும்போது   rawoof ml1 001என்ற நூலில் நான் பாக்கியாத்தில் இருந்தநேரம் பார்த்த ஒரு சம்பவத்தையும் கூறினேன். அது ஸஹீஹானதா? அல்லது ளயீபானதா என்பது எனக்குத் தெரியாது. ஹிறாக் குகைக்கு ஜிப்ரீல் (அலை) வஹீ கொண்டு வந்தபோது அங்கு முகம்மதென்ற ஒருவரை காணவில்லை. யாரைப் பார்த்து விட்டு ஜிப்ரீல் வந்தாரோ அவரேதான் குகையில் இருப்பதைக் கண்டார்கள். இந்தச் சரித்திரத்தையும் கூறினேன்.

இவைகளில் நான்கு விசயங்கள் அகீதாவுக்கும் ஈமானுக்கும் முற்றிலும் முரணானவை என்பது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவிலுள்ள அனேகமானவர்களின் கருத்து. நான் பேசியதைச் சரி காண்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் என்னிடம் வந்து சரிகண்டார்கள். ஆயினும் மேடைகளில் ஏறிப் பேசுமளவுக்கு தைரியமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

அவர்கள் பிழை என்று கூறும் நான்கு கருத்துக்களும் இவை.

  1. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு.
  2. முகம்மது (ஸல்) அவர்களின் தோற்றத்தில் இறைவன்தான் வந்தான்.
  3. மக்களை நல்வழிப்படுத்துவதற்கு முகம்மது (ஸல்) அவர்களின் வேஷம் போட வேண்டிய நிலை அல்லாஹ்வுக்கு ஏற்பட்டது.
  4. ஜிப்ரீல் வஹீ கொண்டு வந்த நேரம் ஹிறாக்குகையில் அல்லாஹ் கன்னத்தில் கைவைத்துப் படுத்திருந்தான்.

இவை சரியானவையா? பிழையானவையா என்று விவாதிப்பதற்கு( என்னைக் கலந்தாலோசியாமல்) கடந்த 31-03-79இல் கொழும்பில் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்து எல்லா ஏற்பாடும் முடிவானபின் எனக்கு ஒரு தபால் எழுதியிருந்தார்கள். அதில் 31 ம் திகதி கொழும்பில் நடைபெறும் விவாத மானாட்டுக்கு வரவும் என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு நான் ஒரு பதிலை எழுதியனுப்பினேன். அவர்கள் எனக்கு எழுதிய இரு கடிதமும், அதற்கு நான் அனுப்பிய இரண்டு பதிலும் நோட்டிஸாகப் பிரசுரித்து வெளியிடப்பட்டது. மத்ரசதுல் பலாஹ் அதிபர் அப்துல்லா ஹஸ்ரத் -காலி அஜ்வாத் ஆலிம், அப்துஸ் ஸமது ஆலிம் -றூஹுல் ஹக்- ரியால் ஆகியோர்தான் இவ்விசயத்தில் கடும்பாடுபட்டு அந்த மாநாட்டை ஒழுங்கு செய்தார்கள். அதில் என்னை ‘முர்தத்’ என்று தீர்ப்பு வழங்கி அந்தத் தீர்ப்பை காத்தான்குடியின் மூன்று ஜும்மாப் பள்ளிக்கும் அனுப்பி வைப்பதாக கூறி அதன்படி இன்று 3-4-79இல் எனக்கும் அறிவித்திருந்தார்கள். மூன்று பள்ளிகளில் மார்கட் பள்ளி (மீராபள்ளி) இவர்களின் பத்வாவை ஏற்றுக் கொள்ளாது. ஏற்றுக் கொண்டால் இங்கு பெரும் பிரச்சனையும், குளப்பங்களும் உருவாகும். இது மார்க்கப் பிரச்சினையாக இருந்தாலும் இன்று பாட்டி என்ற ரீதியில் M.P. அவர்களுக்கு சப்போர்ட் பண்ணிய ஐ.தே.க. அபிமானிகள் அனைவரும் எனது கருத்தை முழுக்க முழுக்க ஆதரிக்கின்றனர். மற்றப் பாட்டியில் நின்றவர்களில் அரைப் பகுதி ஆதரிக்கின்றது. பொதுவாக நூற்றுக்கு 75 வீதம் என்னை ஆதரிக்கிறார்கள். M.P. அவர்களும், மார்கட் பள்ளி றெஸ்டிபோட்டிலுள்ளவர்களும் என்னை முக்கியமாக ஆதரிப்பதால், இப்பிரச்சினை வலுவடையுமிடத்து ‘உலமாக்கள்’ (காத்தான்குடி உலமாக்களில் என்னை ஆதரிக்காதவர்கள்) பொதுமக்களால் பல இன்னல்களுக்குள்ளாக வேண்ய சூழ்நிலை ஏற்படும்.

நான் இதுவரை போதித்து வந்த அறிவு மேற்குறிப்பிட்ட நூல்களில் இருந்தும், தங்களுடைய திருவாய் மூலமும் இருந்து கேட்டவைகள்தான். அதோடு தைக்கா மௌலானாவிடம் இருந்தும் பெற்றவைகள்தான். ஆனால் மௌலானா என்னுடைய ஞானவழிகாட்டியான ஷெய்கு அல்ல. தாங்கள்தான் எனது ஷெய்கும் ஞானபிதாவுமாகும். ஆதலால்

rawoof2 001

நான் ஒரு பத்வா எழுதி குறிப்பாக காத்தான்குடியில் எனது கருத்தை الوجودஆதரிப்பவர்களான உலமாக்களிடமும், இலங்கையில் உள்ள وحد الوجود  சம்பந்தப்பட்ட உலமாக்களிடமும், இந்தியாவில் உள்ள உலமாக்களிடமும் ஒப்பம் எடுத்து அதை தமிழில் மொழி பெயர்த்து குறிப்பாக தங்களிடமும் தைக்காமௌலானாவிடமும் ஒப்பம் எடுத்து வெளியிட விரும்புகின்றேன். இது நல்லதா? அல்லது வேறு வழிகளைக் கையாள வேண்டுமா? அவசரமாக தங்களை சந்திக்க விரும்புகிறேன். அதேநேரம் ஆப்தீன் ஹாஜியாரையும் ஹனீபா மௌலவியையும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தாங்கள் ஏறாவூர் வரவிருப்பதாக கூறினார்கள். நமது தரீகா பிள்ளைகள் முன்னையதை விடக் கூடுதலாக தங்களை எதிர்பார்க்கிறார்கள். நூறுத்தீன்-ஜஃபர் புறக்டர்களின் அழைப்பில் சாய்ந்தமருதுக்குப் போய் மீலாத் விழாக்களில் வஹாபிகளுக்கு எதிர்ப்பாக பேசிய வகையில் அங்கேயும் உலமாக்கள் என்னுடன் கோபம். யார் எனக்கு எப்படி பத்வாக் கொடுத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் அறிந்த அளவு وحدة الوجودஐப் பற்றித்தான் பேசியிருக்கிறேன்.

நான் கூறிய கருத்துக்கள் பிழையானதென்றும், ஈமானுக்கும், அகீதாவுக்கும் மாற்றமானதென்றும் இருந்தால் மேலே நான் எழுதிய கிதாபுகளை பின்பற்றவோ, தரீகாவழி நடக்கவோ மாட்டேன். கிதாபுகளை எரித்துச் சாம்பலாக்குவதுடன் தரீகாவிலிருந்தும் நீங்கிக் கொள்வேன். எதற்கும் எந்த அல்லாமா வந்து எனது கருத்தைப் பிழை என்றாலும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஆனால் தாங்களும் தைக்கா மௌலானாவும் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்வேன். கருத்துக்களும், தத்துவமும் சரிதான். பகிரங்க மேடையில் பலர் மத்தியில் பரவலாகப் பேசுவது கூடாது என்று சொன்னால் மட்டும் அதை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். தாங்கள் ஒருநாள் – ‘தஷ்பீஹ்’ பற்றிப் பேசும்போது (றப்பானி ஹாஜியார் வீட்டில்) அல்லாஹ்-அல்லாஹ் என்று மட்டும் திக்று செய்யும்போது அதை கபறாகவும், ‘அன’ என்பதை மறைந்த முப்ததாவாகவும் வைக்க வேண்டும் என்று சொன்ன விவரம் இப்பவும் எனது காதில் கேட்பது போன்றுதான் இருக்கிறது.

எதற்கும் தங்களின் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன். தாங்கள் வந்ததும் சந்திக்க வருவேன்.

rawoof 3 001 - Copy (2)

போன்ற பைத்துகளுக்கு விளக்கம் சொன்னதையும் இங்குள்ள ظاهرஉலமாக்கள் மறுப்பதுடன், அது குப்ரான வார்த்தை என்றும், அதைச் சொன்னவர்கள் காபிர் என்றும் கூறுகிறார்கள்.

rawoof 3 001 - Copy

அதிகம் எழுதிவிட்டேன். குறை இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

rawoof 3 001

இதில் அவர் நீங்கள் சொன்னவிவரம் இன்னஇன்ன கிதாபுகளில் காணக்கிடக்கிறது. அதையேத்தான் நானும் மீலாது விழாவில் பேசினேன் என்று சொல்லியிருக்கிறார். செய்குனா அவர்கள் எங்களுக்கு போதித்த ஞானம் அந்த கிதாபுகளில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ரவூப் மௌலவி பேசியதுபோல், செயல்பட்டதுபோல் இல்லை. அவர் தான் கொண்ட கொள்கையை அதில் எழுதியிருக்கவில்லை. மிகத் தந்திரத்தை அதில் கையாண்டிருந்தார்.

அந்த பிரசுரத்தில் செய்குனா அவர்கள், உண்மை ஸூபியாக்களின் ஞானத்தை தெளிவாக விளக்கியிருந்தார்கள். அல்லாஹ் குன்ஹு தாத்தின் புறத்தினால் சிருஷ்டியாக வெளியாவதில்லை என்றும், நாய் அல்லாஹ், பன்றி அல்லாஹ், மலம் அல்லாஹ் என்று சிருஷ்டிகளில் அல்லாஹ்வை கட்டுப்படுத்தி சொல்லக் கூடாது என்றல்லவா கண்டித்திருக்கிறார்கள். அவ்வாறு சொல்பவனின் நிலையைப் பற்றியும் தெரிவித்திருந்தார்கள். இதை நீங்கள் பார்க்கவில்லை போலும். என்ன அருமையான விளக்கமான பிரசுரம் அது. அதில் எங்கு செய்குனா அவர்கள் ரவூப் மௌலவியின் கருத்தை ஆதரித்திருக்கிறார்கள்?

சங்கராச்சாரியர் சொன்னதற்கு தாதாபீர் செய்குனா ஸூபி ஹழ்ரத் ஹைதராபாதி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் அல்ஹக்கு என்ற நூலில் விவரித்ததுபோல், ரஊப் மௌலவி சொல்லிய சில வார்த்தைகள் வஹ்தத்துல் உஜூது கொள்கைக்கு நேர்பாடானதாக இருப்பதால் அதை மட்டும் சரிகண்டு சொன்னார்கள். அதனால் ரஊப் மௌலவியை சரிகண்டார்கள் என்று சொல்வது மடத்தனத்திலும் மடத்தனம்.
அவ்வாறு அவர்கள் சரிகண்டிருப்பார்களாயின் தமது முரீதீன்களை அவரோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கடிதம் எழுதியிருக்கமாட்டார்கள்.(இந்தக் கடிதம் நமது வெப்தளத்தில் முன்னரே பதிவேற்றம் செய்யப்ட்டுள்ளது)

ஆக அந்தப் பிரசுரம் உண்மை ஸூபியாக்களின் கொள்கையை விளக்கியதோடு ஸூபியாக்களின் நூல்களில் இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கும் மறுப்பும் தெரிவித்திருந்தது. அதில் இந்த ரவூப் மௌலவி தப்பித்துக் கொண்டார்.

இதைப் பார்த்தாவாது ரவூப் மௌலவி திருந்தினாரா? மேலும் ரவூப் மௌலவியை அழைத்து இனி இவ்வாறு பேசக் கூடாது என்று கண்டித்தார்கள். அப்போதாவது அவர் செய்குவின் சொல்லை மதித்தாரா?

அதன்பிறகுதான் ரவூப் தந்திரத்தை கையாண்டார். அதன்பிறகு அவர் செய்குனாவிற்கு எழுதிய கடிதத்தில் கூறப்படாததையும் மேடைகளில் பேசவாரம்பித்தார். செய்குநாயகம் அவர்கள் ஏறாவூரில் இருக்கும்போது அவரின் பேச்சின்  ஒலிப்பதிவை போட்டுக் கேட்டார்கள். அதில் அவர் அல்லாஹ் தாத்தின் புறத்தில் வெளியாகிறான் என்றும், நாயும் அல்லாஹ்தான், பன்றியும் அல்லாஹ்தான், மலமும் அல்லாஹ்தான் என்றும் பேசியதைக் கேட்ட செய்குனா அவர்கள் ரவூப் மௌலவியை அழைத்து இவ்வாறு பேசுவது தவறு. இனி இவ்வாறு பேசக்கூடாது என்று தடுத்து கண்டித்து கட்டளையிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான முரீதீன்களை பக்குவப்படுத்தி ஞானப் பயிற்சி கொடுத்தவர்கள் செய்குனா அவர்கள். அவர்களிடம் ஞானப் பயிற்சி பெற்ற முரீதீன்கள், கலீபாக்கள் எவரும் ரஊப் மௌலவி சொல்வது போல் சொல்லவில்லை. இவருக்கு மட்டும்தான் இந்த புதிய வஹ்தத்துல்(?) உஜூது என்ற ஞானம் தோன்றியிருக்கிறது. இவர் இதை எங்கிருந்து எடுத்தார் என்று பார்க்கும்போது இந்துக்களின் ஞானங்களிலிருந்து எடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது. இப்போது இவர்கள் கேட்கக் கூடும் அப்படியென்றால் இந்துக்களின் ஞானம் என்ன என்று சொல்லுங்கள் என்று. அதற்கு பதில் அவர் சொல்வதுதான் இந்துக்களின் ஞானம்.

ரவூப் மல்வியும் அவரின் கூட்டத்தைத் தவிர, ஏனைய முரீதீன்கள் அனைவர்களும் செய்குனா ஸூபி ஹழ்ரத் அவர்களின் வழியைத்தான் பின்பற்றினார்கள், பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரவூப் மௌலவிதான் இந்து ஞானத்தை இஸ்லாமிய ஞானமாக சொல்லித் திரிகிறார். அவர் சொல்லும் கருத்து அது வஹ்தத்துல் வுஜூது அல்ல. அது முற்றிலும் இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல. குப்ர் ஷிர்க்கை பேசித் திரிகிறார். இவரையும் பின்பற்றுகின்றனர் சில மடையர்கள். செய்குவிற்கு மாற்றம் செய்து தம்முடைய பைஅத்தை தானாக முறித்துக் கொண்டார்.

இவரின் இந்தப் பேச்சுக்களை அறிந்த செய்குநாயகம் அவர்கள் ரஊப் மௌலவி குபிர்-ஷிர்க் என்ற சகதியைத் தன் முகத்தில் தானே அள்ளிப் பூசிக் கொண்டு அதையிட்டுப் பெருமையடித்துக் கொள்கிறார். முரீதுகளாகிய நீங்கள் அவரோடு எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. அவரைச் சரி காண்பவரைக்கூடச் சரிகாணக் கூடாது என்று சொல்லப்பட்டு சமூகத்திலிருந்து விரட்டப்பட்டவர். இதற்கு செய்குனா எழுதிய கடிதமே சாட்சி. அதை முந்தைய பதிவில் வெளியிட்டிருக்கிறோம்.

ஒரு செய்குவால் தன் சமூகத்திலிருந்து விரட்டிஅடிக்கப்பட்டவர், வெறுத்து ஒதுக்கப்பட்டவர் வேறு எந்த செய்காலும் கரையேற்றி வைக்க முடியாது. (ஆதாரம்: இர்ஷாதே ஹபீப்)

இந்த நேரத்தில் தைக்கா மௌலானாவும் செய்குனாவும் என் கருத்தை ஆதரிக்கிறார்கள் என்று வேறு பொய்யும் புரட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால் தைக்கா மௌலானா ரஊப் மௌலவியின் கருத்தை ஆதரிக்கவில்லை என்பது ‘மௌலானா அவர்களுக்கும் எமது தூதுக்குழுவுக்குமிடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய முழு விபரம்’ என்ற பிரசுரத்தைப் பார்த்தாலே தெரியும். தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக தைக்கா மௌலானா தன் கருத்தை ஆதரிக்கிறார்கள் என்று பொய் சொல்லியிருக்கிறார்.

அந்த நோட்டீஸின் பிரதி இது:

rawoof 13 001rawoof 13 005rawoof 13 004 rawoof 13 003 rawoof 13 002 rawoof 13 006

ஜம்இய்யத்துல் உலமா

ரஊப் மௌலவி விவகாரம்

மௌலானா அவர்களுக்கும் எமது தூதுக்குழுவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் பற்றிய முழு விபரம்.

அன்புப் பொதுமக்களே,

அஸ்ஸலாமு அலைக்கும்.

றஊப் மௌலவி பகிரங்கக் கூட்டமொன்றில் பேசும்போது, தாம் பேசிய பிரச்சினைக்குரிய கருத்துக்களை, நமதூரிலுள்ள முஹ்யித்தீன் தைக்காவுக்கு வருகைதரும் மௌலானா அவர்கள் ஆதரித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டதையடுத்து மௌலானா அவர்களது உண்மைநிலையை அறிந்து கொள்ள வேண்டுமென்று நமதூர் மக்கள் ஆவலாயிருந்தமை தெரிந்ததே.

மௌலானா அவர்கள் காத்தான்குடிக்கு வந்ததும், அவர்களது நிலைமையை அறிந்து கொள்ள பல இயக்கங்களும் தனிப்பட்டவர்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அத்துடன் அவர்களது உண்மை நிலையை அறிந்து மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு பலர் எமது சபையையும் கேட்டுக் கொண்டனர்.

இதற்கிணங்க எமது சபை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு, கடந்த 26.11.79ல் மௌலானா அவர்களைச் சந்தித்தது. இச்சந்திப்பின் நோக்கம், மௌலானா அவர்கள், றஊப் மௌலவியின் மார்க்க விரோதக் கருத்துக்களை ஆதரிப்பதாகக் கூறப்படுவது உண்மையா? என்பதை மௌலானா அவர்களிடமிருந்து அறிவதேயாகும். மாறாக, உலமாக்களால் வழங்கப்பட்ட ‘பத்வா’ குறித்து மௌலானா அவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்பதோ, பத்வாவை மறு பரிசீலனை செய்வதோஅல்ல.

26.11.79ல் மௌலானா அவர்களைச் சந்தித்த எமது குழுவினர் றஊப் மௌலவி பேசிய மார்க்கத்திற்கு முரணான கீழ்க்காணும் கருத்துக்களை அவர்களிடம் சுட்டிக் காட்டினர்.

  1. ஹிறாக்குகையில் அல்லாஹ், நெற்றியில் கையைக் குத்திக் கொண்டு படுத்திருந்தான்.
  2. அல்லாஹ் முஹம்மதின் உருவத்தில் உலகத்தில் தோன்றினான்.
  3. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு.
  4. மக்களை நல்வழிப்படுத்த வேஷம் போடவேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு ஏற்பட்டது.
  5. அல்லாஹ் ஆணும்தான் பெண்ணும்தான்.
  6. அல்லாஹ் கையிலும், காலிலும் காப்பும் தண்டையும் போட்டிருந்தான்.
  7. அல்லாஹ்வுக்கு ஏழு வயது.

மேலும், றஊப் மௌலவியின் கருத்துக்கள் போன்றவை, உள்ளர்த்தத்துக்குரியவை. அக்கருத்துக்கள் நமது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவைதான். அவற்றைப் பகிரங்கமாகப் பேசுவதுதான் தவறே தவிர, அக்கருத்துக்கள் தவறாகமாட்டா’ என்று தற்போது சிலர் கருதுவதாகத் தெரிகிறது. இக்கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அவ்வாறாயின், அவற்றை ஒருசிலர் மட்டுமே தெரிந்து கொண்டு சுவர்க்கம் செல்லவும், அவற்றைப் புரிநது கொள்ளாத பெரும்பாலோர் நரகம் செல்லவுமத் நமது மார்க்கம் வழிவகுக்கிறதா? இவ்வாறான ஓர் அறிவு உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனை எல்லோரும் படித்துக் கொள்ள நாமெல்லாம் வழிவகுக்கலாமே. நமது நாட்டிலுள்ள மத்ரஸாக்களில் கடமையாற்றும் உஸ்தாதுமார்களெல்லாம் இத்தகைய அறிவைப் படித்துக் கொள்ள வழிசெய்து, எல்லா மத்ரஸாக்களினதும் பாடத்திட்டங்களில் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?’ என்று எமது குழுவினர் கூறி, றஊப் மௌலவியின் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்பதைக் கூறும் ஆதார பூர்வமான பல அறபு கிதாபுகளிலுள்ள கருத்துக்களை மௌலானா அவர்களிடம் வாசித்து விளக்கினர்.

இவற்றை மிக அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த மௌலானா அவர்கள், ‘றஊப் மௌலவியின் கருத்துக்கள் பிழையானவை என்பதை நிரூபிப்பதற்கு அதிக ஆதாரங்கள் தேவையில்லை. ‘முகாலபதுஹு தஆலா லில்ஹவாதிதி – அல்லாஹுதஆலா சிருஷ்டிப் பொருட்களுக்கு மாற்றமானவன், எவ்வகையிலும், எப்பொருட்களுக்கும் ஒப்பில்லாதவன்'(இது அல்லாஹ்வுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று) என்றுதானே நாம் ஈமான் கொண்டிருக்கிறோம்’ என்று கூறி, எமது குழுவினர் காட்டிய ஆதாரங்களைச் சரிகண்டபின், ‘எதற்கும் றஊப் மௌலவியை அழைத்து இவ்வாறான கருத்துக்களை அவர் பேசியதுதானா? என்பதை அவரிடம் விசாரித்தபின் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்’ என்று எமது குழுவிடம் தெரிவித்தார்கள்.

பின்னர் 29.11.79ந் திகதி காலையில், மௌலானா அவர்களின் அழைப்பின் பேரில் எமது குழு, அவர்களைச் சந்தித்தது. அப்போது மௌலானா அவர்கள், ‘றஊப் மௌலவி, தான் பேசிய கருத்துக்கள் தவறானவை என்று என்னிடம் எழுதித் தந்துள்ளார். எனவே இவ்விடயத்தில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இணங்குவதாக நீங்கள் எழுதித் தரவேண்டும். அத்துடன் இனிமேல் அவரை ‘முர்தத்’ என்று அழைக்கக் கூடாது. அதன்பின்னர் உங்களுக்கும் அவருக்குமிடையே உடன்படிக்கை ஒன்று எழுத வேண்டும். பின்னர் எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து, முதலில் உங்கள் சார்பில் ஒருவர் எழுந்து, நான் மேற்கொள்ளும் முயற்சிகளை ஏற்றுக் கொள்வதாக மக்கள் மத்தியில் கூறவேண்டும். றஊப் மௌலவியும் அவ்வாறு கூற வேண்டும். அதன்பின்னர் பொதுமக்களுக்கு எனது கருத்தை அறிவிப்பேன்’ என்று கூறி எமது குழுவின் முடிவைக் கேட்டார்கள்.

‘இதுபற்றி உடனடியாக எம்மால் ஒரு முடிவு கூற முடியாது. எமது சபையின் செயற்குழுவைக் கூட்டி, ஆலோசித்த பின்பே இதுபற்றி முடிவு கூற இயலும்’ என்று எமது குழுவினர் மௌலானாவிடம் தெரிவித்தனர். தாமதிக்காது முடிவைத் தெரிவிக்குமாறு மௌலானா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

இதற்கிணங்க, 29.11.79ந் திகதி மாலையில் எமது செயற்குழுவைக் கூட்டி இதுபற்றி ஆலோசித்தோம். ‘றஊப் மௌலவி, தான் பேசிய கருத்துக்கள் தவறானவையென்று மௌலானா அவர்களிடம் எழுதிக் கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். நாம் பலம் வாய்ந்த ஓர் இயக்கத்தினராயிருப்பதாலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாலும் றஊப் மௌலவி, தான் பேசியவை தவறானவையென்று நமது சபைக்கு எழுத்துமூலம் தெரிவிக்க வேண்டும். எழுத்தில் தராதவரை, மௌலானா அவர்கள் மேற்கொள்ளும் எத்தகைய முயற்சிகளுக்கும் இணங்க முடியாது’ என்று எமது செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்தது. எனவே அந்த முடிவை 29.11.79ந் திகதியிடப்பட்ட கீழ்க்காணும் கடிதத்தின் மூலம் மௌலானா அவர்களுக்கு அறிவித்தோம்.

சங்கைக்குரிய P.P.S.S. கோயா தங்கள் மௌலானா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்,

26.11.79ந் திகதியும், 29.11.79ந் திகதியும் தங்களுடன் எங்கள் குழு நேரில் பேசியதிலிருந்து, றஊப் மௌலவி, தான் பேசிய கருத்துக்கள் பிழையானவை என ஏற்றுக் கொள்ள தயாராயிருப்பதாக அறிகிறோம். அவர், தான் பேசியவை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானவை என்று எமக்கு எழுத்துமூலம் தந்தால், அதன்பின் இவ்விடயத்தில் தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இணங்குவோம் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்குரிய முடிவை 5.12.79க்கு முன் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: இது 29.11.79ல் நடைபெற்ற எமது செயற்குழுக்கூட்டத்தின் ஏகமனதான முடிவாகும்.

இக்கடிதத்துக்கு மௌலானா அவர்கள் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. எனினும் 15.12.79ந் திகதியிட்டு அவர்கள் வெளியிட்டிருந்த துண்டுப் பிரசுரத்தில், ‘றஊப் மௌலவி அவரது பேச்சுக்களின்போது, எனது பெயரையும் சம்பந்தப்படுத்தியுள்ளார். அவரது கருத்துக்களுக்கு நான் பொறுப்பாளியல்ல’ என்று தெரிவித்துள்ளார்கள்.

மௌலானா அவர்களுடன் இரண்டு தடவைகளில் நாம் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் போதும், காத்தான்குடி 4ம் குறிச்சி முஹ்யித்தீன் தைக்காவின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களான ஜனாப்.ஆ.ஐ.ர்.நூறுமுகம்மது ஹாஜியார் அவர்களும், ஜனாப் ஆ.டீ. அப்துல் மஜீது ஹாஜியார் அவர்களும் பிரசன்னமாயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புப் பொதுமக்களே,

இப்பிரச்சனை ஒரு சாதாரண பிரச்சினையல்ல. ஈமான் சம்பந்தமான பிரச்சினை. பொதுமக்களின் ஈமானைப் பாதுகாப்பது உலமாக்களான எமது கடமையானதால், பல சிரமங்களுக்கும், அதிக பணச்செலவுகளுக்கும் மத்தியில் இவ்விடயத்தில் கூடிய முயற்சியெடுத்தோம். எவரையும் இழிவுபடுத்துவது எமது நோக்கமல்ல. இதுவரை போதிய விளக்கங்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள்.

காத்தான்குடி உலமாக்கள் மட்டுமல்ல. அகில இலங்கை உலமாக்கள், தென்னிந்திய உலமாக்கள் ஆகியோர் அளித்த போதிய விளக்கங்களையும் நீங்கள் நன்றாகத் தெரிந்திருப்பீர்கள். எனவே உங்களது ஈமானைப் பாதுகாத்து, அல்லாஹ்வுக்கும், அவனது றஸூலுக்கும் பொருத்தமான முறையில் வாழுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

முக்கிய குறிப்பு: ஊரின் நன்மை கருதி, இரு சாராரையும் ஒன்றிணைத்து தீர்க்கமான ஒரு முடிவு காண்பதற்காக மௌலானா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எமது சபை தடையாயிருக்கவில்லை என்பதைப் பொதுமக்களுக்குத் தெளிபடுத்தும் நோக்கத்தோடுதான் இப்பிரசுரத்தை வெளியிடுகிறோம்.

-ஜம்இய்யதுல் உலமா

காத்தான்குடி,

22.12.1979

ஆக எந்த செய்குவும், எந்த மௌலானாக்களும் இந்த ரவூப் மௌலவியை ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்ததாக சொல்வதெல்லாம் பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட ரவூபின் அடாவடித்தனம்.

யாராவது இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களாயின் இவரின் கூட்டத்தினர் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள். தங்கள் பகுதிக்கு வரவழைத்து விளக்கம் சொல்கிறேன் என்று சொல்லி அவரை படாதபாடு படுத்திவிடுவார்கள் இவரின் ஆதரவாளர்கள். .

தம்மை செய்குனா அவர்கள் விரட்டிவிட்டபின் அப்துல்லாஹ் பயில்வான் என்ற வழிகேடரிடம் தம் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டார். இந்த அப்துல்லாஹ் பயில்வான் ஈமானின் உண்மையை நீ அறிவாயா? என்ற நூலில் இமாம்களையும், இறைநேசர்களையும் மிகத் தரக்குறைவாக எழுதியுள்ளார். மேலும் ஞானவிளக்கங்களை தன் சுயவிருப்பப்படி எழுதியுள்ளார். ஆனால் ரவூப் மௌலவி அவரை வைத்தே ஒரு சபையை திறக்க வைத்தார். அவரைப் புகழ்ந்து ‘அல்லாஹ் எங்கே இருக்கிறான்?’ என்ற நூலில் என்ற நூலிலும், செய்குனாவிற்கு எழுதிய மரியாதைக் குறைவான கடிதத்திலும் அப்துல்லாஹ் பயில்வானை ஆதரித்து எழுதியுள்ளார்.

மேலும் இதில் தப்லீக் ஜமாஅத்தினர்கள் நமது ஈமானில் கைவைக்கவில்லை என்று என்று எழுதி தப்லீக் ஜமாஅத்திற்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

தப்லீக் ஜமாஅத்தின் பொன்னான போதனை என்ற நூலையும் வெளியிட்டார்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருக்கும் மறைவான ஞானம் பேயன், பைத்தியக்காரன், ஏன் மதளைக்கும் கூடத்தான் இருக்கிறது என்று ஹிப்ளுல் ஈமான் என்ற நூலில் எழுதியிருப்பதும்,

அல்லாஹ் பொய் சொல்ல சக்தியுடையவன் என்று ரஷீத் அஹ்மது கங்கோஹி பதாவா ரஷீதிய்யா என்ற நூலில் எழுதியிருப்பதும்,

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாது விழா கொண்டாடுவது கிருஷண ஜெயந்திக்கு ஒப்பானது என்றும்,

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது ஆடு, மாடு, கழுதை ஏன் ஜினா செய்யும் நினைப்பில் மூழ்குவதை விட கெட்டதாகும் என்றும்,

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் என்றும், இன்னும் பிற அருவருக்கத்தக்க கொள்கைகளை தமது நூல்களில் எழுதிய தப்லீக் தலைவர்கள், அவரைப் பின்பற்றும் மடையர்கள் முஸ்லிம்களின் ஈமானில் கைவைக்காமல் எதில் கைவைத்திருக்கிறார்கள்.? சொல்லுங்கள்.

செய்குனா அவர்களின் கொள்கையும் அவரின் கொள்கையும் ஒன்றுதானே! ஏன் அவரை எதிர்க்கிறீர்கள்? என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு.

செய்குனா வெளியிட்ட நூற்களையும், பிரசுரத்தையும் படித்துப் பார்த்தாலே ரவூப் மௌலவிக்கும், செய்குனாவிற்கும் உள்ள கொள்கை வேறுபாடு விளங்க வரும். ஜமாஅத்துல் உலமாவுக்கு எதிராக செய்குனா அவர்களால் வெளியிடச் செய்யப்பட்ட பிரசுரம் ஒன்றே போதும் ரவூபின் கொள்கையும், செய்கனாவின் கொள்கையும் வேறு என்று ஆதாரம் காட்ட. அடிப்படைக் கொள்கையிலேயே ரவூப் வேறுபடுகிறார்.

முதலில் ரவூப் மௌலவி தனஸ்ஸுலாத்தையும், தன்ஸீஹ், தஸ்பீஹையும் நன்கு விளங்கி நன்றாக விளங்கிக் கொண்டு பேசட்டும். அடிப்படை ஞானமே தெரியாமல் தான் சொல்வதுதான் சரி என்று சொல்லும் இவரையும் நம்பி….

செய்குனா அவர்கள் தகுதியுள்ளவரான ரஊப் மௌலவியை தேர்ந்தெடுத்துதான் கிலாபத் கொடுத்தார்கள் என்கிறார்கள். செய்குனா கிலாபத் கொடுத்தது நம்பிக்கையின் அடிப்படையில்தான். அவர் ஷரீஅத், தரீகத்படி மக்களை வழிநடத்திச் செல்வார் என்று நம்பித்தான் கிலாபத் கொடுத்தனர்.

என்ன செய்வது? அவர் செய்குவுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். அதனால் செய்கை விட்டும் முற்றிலும் நீங்கி விட்டார்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஹீயை எழுதிக் கொண்டிருந்த சஹாபி ஒருவர் தமக்கும் வஹீ வருவதாக சொன்னதால் எவ்வாறு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமத் அவர்களின் தோழமையை விட்டும், ஏன் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டாரோ அப்படித்தான் ரவூப்மௌலவியும்.

ஆக ரஊப் மௌலவி ஒன்றைத் தவறாக சொல்லிவிட்டார். அதை செய்குனா அவர்கள் திருத்தினார்கள். ஆனால் அவர் திருந்தவில்லை. அவரை சரிகாணும் ஒரு கூட்டத்தை உருவாக்கி விட்டார். அவர் விலகினாலும் அவர்கள் விடுவதாயில்லை. அந்த கூட்டத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டார். அதிலிருந்து அவர் மீள முடியாமல் தவிக்கிறார். ஷிர்க், குப்ரை போதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். அவர் சொல்வது, வஹ்தத்துல் வுஜூது கொள்கைக்கு முரணானது. அவர் சொல்வது இந்து ஞானம்.

எதற்கெடுத்தாலும் அவர்கள் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கின்றனர். ரஊப் மௌலவியின் புகழை அவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவரை எதிர்க்கிறார்கள் என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு.

தாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். எவ்வித மறுப்புரையும், கேள்வியும் கேட்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் எதிர் கேள்வி கேட்பார்களானால் அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டு, எனது புகழைக் கெடுக்க சதி செய்கிறார்கள் என்று கூப்பாடு போடுவார். இதுதான் அவரின் நடைமுறை. தம் செய்கானாலும் சரி. அவர் பேச்சை இவர் கேட்க மாட்டார். இன்றுவரை அதுதான் நடந்து வருகிறது.

பாருங்கள்! செய்குநாயகம் அவர்களுக்கு வேண்டுதல் கடிதம் எழுதும்போது மட்டும் மரியாதையோடு எழுதிய இந்த மரியாதை தெரியாத, வடிகட்டிய புத்திபேதலித்த ரவூப் மௌலவி, செய்குநாயகம் அவர்கள், அப்துர் ரவூப் மௌலவியிடம் நீ சொல்வது தவறு என்றும் இன்னும் அவர் செய்யும் சில தவறான விசயங்களை சுட்டிக்காட்டியதும், அவர் தலைவராயிருக்கும் இஸ்லாமிய மெய்ஞான சபையின் லெட்டர் பேடில் செய்குனாவை மரியாதைக் குறைவாக விளித்து, அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் கேட்கிறார் பாருங்கள்.

RAWOOF 001

செய்குனாவிற்கு ரவூப் மௌலவியின் மரியாதைக் குறைவான கடித நகல்:

அகில இலங்கை தலைவர்: மௌலவி அல்ஹாஜ்ஏ. அப்துர் ரவூப் (மிஸ்பாஹி-பஹ்ஜி),

தலைவர்: மௌலவி எம்.சி.எம். முஹம்மது (பஹ்ஜி),

செயலர்: மௌலவி என்.எம்.எம். இப்றாஹீம் (நத்வீ),

பொருளாளர்: மௌலவி எம்.எம்.முனாஸ் (கியாதி)

இஸ்லாமிய மெய்ஞ்ஞானப் பேரவை

கனம் மௌலவி ஷேக் அப்துல் காதிர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

மருதமுனையைச் சேர்ந்த M.S. அப்துல்லாஹ்(பயில்வான்) அவர்கள் எழுதிய ஈமானின் உண்மையை நீ அறிவாயா? என்ற ஞானநூலில் பல இடங்களில் இஸ்லாத்திற்கு மாறான கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளதால், அந்த நூலைப் பார்க்க வேண்டாம் என தாங்கள் கூறி தங்களின் முரீதீன்களை தடை செய்ததாக அவர்கள் மூலம் நாங்கள் அறிந்தோம்.

மேலும், காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளி வாயலில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகை நிறைவேறாததாகையால் அங்கு ஜும்ஆத் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தங்களின் முரீதீன்களைத் தடை செய்ததாகவும் அறிந்தோம்.

அத்துடன், ஏகத்துவ இறைஞானத்தை இலங்கையிலும், இந்தியாவிலும் பிரகாசிக்கச் செய்துவரும் எமது இஸ்லாமிய மெய்ஞ்ஞானப்பேரவையின் வெளியீடான ‘ஞானச்சுரங்கம்’ எனும் தத்துப் பெட்டகத்தை திறந்து பார்க்க வேண்டாம் என்றும் தங்களின் சிஷ்யர்களிடம் கூறியதாக அறிந்தோம்.

எனவே தயவுசெய்து மேற்கூறிய மூன்று விசயங்களுக்கும் தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் தருமாறும் செய்வது தவறாக இருந்தால் அதை விட்டு நடக்க வழி செய்யுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்,

சன்மார்க்க சேவையிலுள்ள,

……………..

 ஆக முஸ்லிம் கனவான்களே! வழிகேட்டிலிருக்கும் ரஊப் மௌலவியைப் பின்பற்றாதீர்கள். அவரின் கருத்து உங்களை குப்ர், ஷிர்க்கில் கொண்டுபோய் சேர்க்கும். அவரிடம் இருக்கும் சகோதரர்களே! தவ்பா செய்து மீண்டு வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிக் காட்ட வல்லவன். அவரிடம் பெற்ற பைஅத் செல்லாது. ஏனெனில் அவருக்கு செய்குவின் தொடர்பு சங்கிலி அறுந்து போனது. அவரைத் தொடர்பு கொண்டால் எங்கள் செய்குநாயகத்தின் பைளு கிடைக்காது. அதனால் அல்லாஹ் ரசூலின் தொடர்பும் உங்களுக்கு அற்றுப் போகும்.

ரஊப் மௌலவி,எங்கள் செய்குநாயகத்தின் பெயரையும்,  சில்சிலாவையும் அவர் பயன்படுத்தி மக்களை வழிகெடுப்பதை அவர் நிறுத்த வேண்டும்.

உண்மையான ஞானநாதாக்களான ஸூபியாக்கள் போதித்த கொள்கையையே எங்கள் செய்குனா அவர்கள் போதித்தார்கள். அதைத்தான் அவர்களின் உண்மையான கலீபாக்களும் போதிக்கிறார்கள். அந்தக் கொள்கையே, அந்த ஞானமே எங்களுக்குப் போதும். ரஊப் மௌலவியின் வழிகெட்ட ஞானமும், கொள்கையும் எங்களுக்குத் தேவையில்லை.

இந்தக் கேடுகெட்ட நயவஞ்சகர்களின் உளறல்களுக்கு முத்தாய்ப்பான இறுதி பதில் இதுவே. இனியாவது திருந்தட்டும்.

யாஅல்லாஹ்! எங்கள் ஞானத்தந்தை செய்குனா ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மற்றும் அன்னாரின் உண்மையான கலீபாக்கள் பொருட்டால் இந்த வழிகேடன் காத்தான்குடி அப்துர் ரவூப் மௌலவியிடமிருந்து எங்களையும், முஃமின்களையும் காப்பாற்றுவாயாக! எங்களை ஜெயம் பெறச் செய்வாயாக! ஆமீன். ஆமீன். யாரப்பல் ஆலமீன்.!!!

Add Comment

Your email address will not be published.