கல்முனையில் கந்தூரி விழா!

கல்முனையில் கந்தூரி விழா!

By Sufi Manzil 0 Comment March 29, 2011

Print Friendly, PDF & Email

இலங்கை கல்முனை செய்லான் வீதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் சபை, ஸூபி மன்ஸிலில் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஹிஜ்ரி 1432 ஜமாஅத்துல் அவ்வல் பிறை 4 (08-04-2011 வெள்ளிக் கிழமை)

இமாமுல் ஆரிபீன் சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அவர்கள், அல் ஆரிபுபில்லாஹ் அல் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷெய்குல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி அவர்கள், அன்னாரின் கலீபா அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய முப்பெரும் மகான்களின் கந்தூரி விழா கீழ்காணும் நிகழ்முறைப்படி நடைபெறவிருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

07-04-2011 இஷாத் தொழுகையைத் தொடர்ந்து காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ்
08-04-2011 காலை 7.00-1.00 மணிவரை நேர்ச்சை விநியோகம்.
08-04-2011 அஸர் தொழுகையைத் தொடர்ந்து விழா கொடியேற்றம்.
அதைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் ஓதி நிய்யத் நேர்ச்சை வழங்குவதுடன் ஆத்மீக சொற்பொழிவும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்துபவர்கள்:

தமிழ்நாடு அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவரும் காயல்பட்டணம் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவுமாகிய அல்லாமா அஷ்ஷெய்கு மௌலவி அல்ஹாஜ் S.M.H. முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி காஹிரி (ஸல்லமல்லாஹு தஆலா வமத்தலில்லாஹுல் ஆலி) அவர்கள்.

பிரதம அதிதியாக செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனிய்யி ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் சங்கைமிகு மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது P.A. முஹம்மது சைபுத்தீன் ஆலிம் ஹஸனி;ய்யி ஸகாபி காமிலி (அந்தர் தீவு, இந்தியா) அவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.

அனைவர்களும் கலந்து சிறப்பித்து ஷெய்குமார்களின் துஆ பேற்றினை பெற்றிட அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு:- வாரந்தோறும் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு இஷாத்தொழுகையைத் தொடர்ந்து புனித காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறும்.

ஹிஸ்புல்லாஹ் சபையிலிருந்து வெளியாகும் அனைத்து புத்தகங்களும், சொற்பொழிவுகள் அடங்கிய சி;.டி.கள் இங்கே கிடைக்கும்.

வேண்டுகோள்:

கல்முனை ஸூபி மன்ஸிலுக்கு கட்டிடம் எழுப்புவதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. எனவே முரீதீன்களும், முஹிப்பீன்களும் தாராளமாய் உதவி செய்து அல்லாஹ்வின் நல்லருளையும் ஷெய்குமார்களின் துஆ பேற்றினையும் பெற்றிட வேண்டுகிறோம். தொடர்புக்கு: 0094-777570363.

இவண்,

ஹிஸ்புல்லாஹ் சபையினர்,
ஸூபி மன்ஸில், கல்முனை-சாய்ந்த மருது.
0672229598-0719075427.

இப்புனித கந்தூரி விழா நடைபெறும் இடங்களும், காலமும்:

03-04-2011 ஞாயிறு குப்பியாவத்தை ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்ஹா ஷரீஃப்.
06-04-2011 புதன் சாய்ந்த மருது ஸூபி மன்ஸில்.
10-04-2011 ஞாயிறு ஏறாவூர் ஸூபி மன்ஸில்.
16-04-2011 சனி அட்டாளைச்சேனை ஸூபி மன்ஸில்.
17-04-2011 ஞாயிறு அக்கறைப்பற்று ஸூபி மன்ஸில்.
20-04-2011 வியாழன் தென் இந்தியா கேரளா மாநிலம் பீமாபள்ளி ஸீபி மன்ஸில்.