இருமகான்களின் கந்தூரி வைபவங்கள்

இருமகான்களின் கந்தூரி வைபவங்கள்

By Sufi Manzil 0 Comment August 6, 2012

Print Friendly, PDF & Email

இமாமல் ஆரிபீன் ஸுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் (ஹைதராபாத்) ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 77 வது வருட கந்தூரி மற்றும் அன்னாரின் கலீபா அல் ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிற் றஸூல் அல் அல்லாமா அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸித்தீகி அல் காதிரி காயல்பட்டணம் ஸூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 31 வது வருட கந்தூரி ஆகிய இரு மகான்களின் கந்தூரி வைபவங்கள் காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 10 (29-08-2012) புதன் கிழமை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்தல்
மாலை 4.30 மணிக்கு மவ்லிது ஷரீபு ஓதுதல்.
மஃரிபிற்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ்

அதைத் தொடர்ந்து மகான்க்களின் வரலாற்றுக் சுருக்கம் உபன்னியாசம் நடைபெற்று நேர்ச்சையுடன் விழா இனிதே நிறைவுறும்.

மகான்களின் கந்தூரி காணிக்கை, நன்கொடைகளை அனுப்ப வேண்டிய

முகவரி: ம.கு. முஹம்மது ஹஸன் அவர்கள், ஸூபி மன்ஸில், 93 ஏ, குத்துக்கல் தெரு, காயல்பட்டினம்.-628204.

வல்ல இறைவன் மகான்களின் துஆ பொருட்டால் நம் அனைவர்களின் நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி தருவானாக! ஆமீன்.

காயல்பட்டணம் ஸூபி ஹழ்ரத் அவர்களின் கந்தூரி வைபவங்கள்:

இன்ஷாஅல்லாஹ் ரமலான் பிறை 24 ரமலான் பிறை 24 (13-08-2012) திங்கட் கிழமை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி மாலை 5 மணிக்கு தமாம் செய்யப்படும்.

இடம் காயல்பட்டணம் ஸூபி மன்ஜில்.

இன்ஷாஅல்லாஹ் ரமலான் பிறை 24 (12-08-2012) ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு 11 மணியளவில் காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் மாபெரும் குத்பிய்யா மஜ்லிஸ், மார்க்க உரை நடைபெறும்.

இன்ஷாஅல்லாஹ் ரமலான் பிறை 24 (12-08-2012) ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு 11 மணியளவில் கொழும்பு குப்பியாவத்தை மகான் அவர்களின் அடக்கஸ்தலத்தில் கத்முல் குர்ஆன் ஓதுதல், காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ, மற்றும் மார்க்க உரை நிகழ்த்தப்பட்டு ஸஹர் உணவு வழங்கபட்டு நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அனைவரும் கலந்து மகான் அவர்களின் துஆப் பேற்றினை பெற்றிட வேண்டுகிறோம்.