ஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment March 19, 2015

Print Friendly, PDF & Email

ஹழ்ரத் நபி  யாகூப் அலைஹிஸ்ஸலாம் பற்றி அல்லாஹ்  அதிகமாக சிலாகித்து  தனது திருமறையில் குறிப்பிட்டிருக்கிறான்.

மேலும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவரின்  பெயரை வைத்துதான் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இஸ்ராயில் என்ற பெயரும் உள்ளதாக அல்லாஹ்  திருமறையில் சாட்சி கூறுகிறான்.

நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  இரண்டு பிள்ளைகளை அல்லாஹ் அருளினான் அதில்  மூத்தவர்  ஈசு. இரண்டாவது பிள்ளை நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள். மேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் தனது மூத்த மகன் ஈசுவின் மீது அதிக பிரியமாக இருந்தார்கள் என்று மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி “ரிப்கா”. அந்த அம்மையார்  நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் யாகூபே நீ தந்தையுடன் இணக்கமாக  இருந்துகொள். அவரின் துஆவை நாடு என்று அறிவுரை  கூறுகிறார்கள். இவ்வாறு இருக்க நாட்கள் ஆக ஆக நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பார்வை மங்கிவிடுகிறது.

நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மூத்த மகனிடம் ஒரு உணவை கேட்டார்கள். அதனை  ஈசு அவர்கள் கொண்டுவருவதற்கு முன்  அவர்களின் தாயார் தனது இரண்டாவது மகன் யாகூபிடம் அந்த பொருளை கொடுத்து மேலும் தனது மூத்த மகனின் சட்டையை போட்டு அனுப்பினார்கள்.

மேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவரால் யார் என்று கணிக்க முடியாத நிலையில் அவர் நீ யார் என்று கேட்க, நபி யாகூப்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நான் உங்களது மகன்’ என்று பதில் கொடுக்க அந்த உணவை வாங்கி  உண்டுவிட்டு  அந்த மகனுக்காக உருக்கமாக  நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  துஆ செய்தார்கள்.

இவ்விஷயம் அறிந்த ஈசு நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வெறுக்க  தொடங்கினார்கள். எந்த அளவிற்கு என்றால் தனது தம்பியை கொன்றுவிடும் அளவிற்கு வெறுத்தார்கள். இதை அறிந்து கொண்ட யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரவோடிரவாக தங்கள் மாமன் வீட்டிற்கு ஓடினார்கள். இதனால் இவர்களுக்கு இரவில் சென்றவர் என்று பொருள்படும் ‘இஸ்ராயீல்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இவர்களின் வழித்தோன்றல்களே பனீ இஸ்ராயீல் என்று வழங்கப் பெற்றார்கள்.

இவ்வாறு நாட்கள் கழிய கழிய தனது  தாய் தனது சகோதரன் லாபான் என்றவரிடம்   நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி வைத்தார். போகும் வழியில் ஒரு இடத்தில் உறங்கும் வேளையில் அவர்  ஒரு கனவை காண்கிறார் அதில் மலக்குகள் வானத்தின்  பக்கம்  போவதையும் கீழே இறங்குவதையும்  காண்கிறார்கள். மேலும் அல்லாஹ்  அவருக்கு   சுபசெய்தியையும் அறிவிக்கிறான். அல்லாஹ்  உங்களுக்கு ஒரு பொக்கிசத்தை மிக விரைவில் அருளவிருக்கிறான் என்று. இதனை கேட்டதும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் திருப்தி கொண்டவராக இருக்கிறார்கள்.

பிறகு நிம்மதியாக தனது தாய் மாமன் வீட்டிற்கு சென்றார் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.  அந்த லாபான் அவர்களுக்கு இரு மகள்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தபெண் ரய்யா இரண்டாவது பெண்  ராஹீல். நபி யாகூப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தாய்மாமன் லாபான் தனது இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து இரு அடிமை பெண்களையும் குறிப்பிட்ட ஆடுகளையும்  அவர்களுக்கு  கொடுக்கிறார்.

நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தனது குடும்பம் நினைவுக்கு வந்தவுடன் தனது சகோதரர்  தன் மீது கோபத்துடன் இருப்பதால், நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அதில் ஒரு அடிமையையும் தனது ஆடுகளில் சிலவற்றையும் தனது சகோதரர்  ஈசுவிடம் கொண்டு செல்லுமாறு கூறினார்.

மேலும் அவர் உன்னை யார் என்று கேட்டால் நான் உங்களது அடிமை என்று கூறு. மேலும் உன்னை யார் அனுப்பியது என்று கேட்டால் உங்களுடைய அடிமை யாகூப் அனுப்பி வைத்தார்கள் என்று கூறு என்று அந்த அடிமையை அனுப்பினார்கள். இவ்வாறு ஈசு கேட்க தனது தம்பி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேல் உள்ள கோபம் தணிய யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சகோதரரை காண வந்து அவரை கட்டியணைத்து ஏழு முறை மன்னிப்பு கேட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.

மேலும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு  மற்ற மனைவி மூலம் 10 குழந்தைகள் பிறந்தார்கள். ராகில் என்ற அம்மையாரின் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அதில் மூத்தவர்   நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டாவதாக புன்யாமின் என்பவர். இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில்   ராஹீல் அம்மையார் பிரசவத்தில் இறந்துவிடுகிறார்   புன்யாமீன் மீதும் மிகவும் பாசமாக இருந்தார். .

தனது மரண தருவாயில் தனது   மகன்களிடம்,

أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَٰهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.

மேலும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் மஸ்ஜிதுல் அல் அக்ஸா (ஜெருசுலம்) என்ற புனிதமிகு பள்ளியை கட்டியுள்ளார்கள். நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அடக்கஸ்தலம் பலஸ்தீனத்தில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் .

Add Comment

Your email address will not be published.