மலேசிய ஷெய்கனா அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள்!

மலேசிய ஷெய்கனா அவர்களின் நல்லடக்கம் புகைப்படங்கள்!

By Sufi Manzil 0 Comment October 5, 2011

Print Friendly, PDF & Email

 

காயல்பட்டணம் ஷெய்குல் காமில், முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷாஹ் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் ஹைச். என். ஷெய்கு அப்துல் காதிர் (மலேசிய ஷெய்கனா) ஸூபி காதிரி அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று 03-10-2011 திங்கள் கிழமை அன்று காயல்பட்டணம் குருவித்துறை பள்ளியின் உள் வளாகத்தில் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

முன்னதாக ஷெய்கனா அவர்களின் வீட்டிலிருந்து ஜனாஸா எடுத்து வரப்பட்டு, பள்ளி மைதானத்தில் மௌலவி அஷ்ஷெய்கு ஊண்டி செய்யிது முகம்மது ஆலிம் ஸூபி காதிரி அவர்களால் ஜனாஜா தொழுகை நடத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் சலாம் கொடுக்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து வருகை தந்திருந்த முரீதீன்கள், முஹிப்பீன்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு ஷெய்குனா அவர்களின் வீட்டில் அன்னாருக்கு மூன்றாம் பாத்திஹா ஓதப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் காயல்பட்டணம் ஸூபி மன்ஸிலில் வருகிற வியாழன் காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன ஓதி தமாம் செய்யப்பட இருக்கிறது.

அன்னாரின் ஜனாஜா அடக்க நிகழ்வு புகைப்படங்கள்: