நூரிஷாஹ் சில்சிலாவின் கலீபா பிலாலிஷாஹ் பற்றி விளக்கம் தேவை

நூரிஷாஹ் சில்சிலாவின் கலீபா பிலாலிஷாஹ் பற்றி விளக்கம் தேவை

By Sufi Manzil 0 Comment February 7, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி:
ஆஸ்ஸலாமு அலைக்கும்,

தங்கள் இணையதளம் சூபிமன்ஜிலை பார்வையிட்டேன் மிக்க மகிழ்ச்சி. சுன்னத் வல் ஜமாத்திற்காகவும் வலிமார்களின் பெருமைகளை பாதுகாப்பதற்காகவும் தாங்கள் எடுத்து கொண்ட சிறத்;தை மிகவும் போற்றத் தக்கது.

ஆனால் எனக்குள் இருந்த சில நெருடல்களை தங்கள் முன் தெரியப்படுத்த நான் ஆசைபடுகிறேன். கேள்வி பதில் பக்கத்தில் புதிய தரீக்கா என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய செய்திகள் உண்மையில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டாக்கியது. காரணம் தமிழகம் முழுவதும் பிரபமாக பேசப்பட்டு வரும் பிலாலி ஹஜ்ரத் அவர்களை தாங்கள் குறை கூறியது தான். தாங்கள் எழுதிய பகுதிகளில் குப்ரு என்று குறிப்பிடுகிற{ர்களே தவிர அதை ஆதாரப்பூர்வமாக நிருபிக்கின்ற எந்த சான்றையும் தராமல் இருந்தது தங்களின் பக்கம் இருந்த வாதத்தை பலகீனமடைய செய்திருக்கிறது.

மேலும் தாஙகள் ஆதாரம் என்ற பெயரில் காட்டிய தகவல்கள் தங்களின் ஞான குருவாக விளங்கும் சூபி ஹஜ்ரத் அவர்கள் தங்களுக்கு ஈமான் சார்ந்த போதிய பயிற்சி கொடுக்கவில்லை என்பதை ஆனித்தரமாக காட்டுகிறது. அபூரஹபையும் முனாபிக்கின் தலைவனையும் குறிப்பிட்டு இவர்களெல்லாம் என ஆஷிகுர் ரஸுலா என்று கேட்டு இதை போல் தான் பிலாலி ஹஜ்ரதும் என் குறிப்பிட்டிருப்பது தங்களை குறைகூற முடியாமல் தங்களின் ஞான குருவையும் அவர்களின் முறையற்ற தர்பிய்யத்தும் தான் இதற்கு காரணம் என நினைக்க தூண்டுகிறது. காரணம் ஹாரிஜிய்யாக்களின் பழக்கம் தான் காபிர்களுக்குறிய வசனங்களை முஃமின்களோடு சம்மந்தப்படுத்தி பார்ப்பது. அதை போல தாங்களும் செய்திருப்பது தாங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய கூட்டத்தை போன்று இருக்கிறீர்கள் என்பதை சொல்லாமலேயே அதை நினைக்க தூண்டுகிறது.

எதையும் தக்க சான்றுகள் இல்லாமல் பேசவேண்டாம். அவர்களின் மிகுதமான மஜ்லிஸில் நான் கலந்திருக்கிறேன். ஆனால் இது வரை அவர்கள் அனைத்து ஷைகுமார்கள் ஸில்ஸிலா தொடர்புள்ளவர்களையும் புகழ்ந்து கூறியிருக்கிறார்களே இது வரை அவர்கள் ஒருவரையும் இகழ்ந்து கூறியது இல்லை அஷ்ரப் அலி தானவியை அவர்கள் ஆதரித்ததும் இல்லை அவர்களின் கொள்கைகளை அவர்கள் பரப்பியதும் இல்லை.

அம்பா நாயகத்தை பல முறை புகழ நான் கேட்டிருக்கிறேன். புpலாலி ஹஜ்ரத் காபிர் என குறிப்பிட்டதற்கு தக்க சான்றுகளை சமர்பிக்கவேண்டும். அதை ஆடியோ அல்லது வ{டியோ கிளிப்பின் லின்கை எனக்கு இனைத்து ஆதாரம் காட்டவேண்டும். அல்லது புத்தக வடிவில் உள்ளதை எனக்கு ஸ்கான் செய்து போஸ்ட் செய்ய நீங்கள் கடமை பட்டிருக்கிறீர்கள். இது மார்க்கம் தனிப்பட்ட பிரச்;சனை அல்ல. உண்மை தெளிவாகும் வரை நான் போராடுவேன். நான் கேட்ட ஆதாரம் முழுக்க முழுக்க பிலாலி ஹஸ்ரத் அவர்களை பற்றித்தான். ஆதாரம் காட்ட முடியாதவர்களுக்கு என்ன ?????????? விரைவில் தெரி(ளி)யும்
On Mon, 1/30/12, Sadeeq Misbahi <sadeeqmisbahi@yahoo.com

பதில்:

அன்புடையீர்,                

 

                                                                                                                                    06-02-2012

தங்களுடைய மின்னஞ்சல் பார்வையிட்டேன். அதில் தாங்கள், 'தங்கள் இணையதளம் சூபிமன்ஜிலை பார்வையிட்டேன் மிக்க மகிழ்ச்சி. சுன்னத் வல் ஜமாத்திற்காகவும் வலிமார்களின் பெருமைகளை பாதுகாப்பதற்காகவும் தாங்கள் எடுத்து கொண்ட சிறத்தை மிகவும் போற்றத் தக்கது' என்று எழுதியிருந்தீர்கள்.

இந்த ஸூபி மன்ஜில் இணையதளம் சுன்னத் வல் ஜமாஅத்திற்காக உள்ளது என்றும், வலிமார்களை போற்றுவதற்குள்ளது என்றும் தாங்கள் அதிலிருந்து புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதைப் புரியாமல் தாங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் ஏன் என்று தெரியவில்லை. சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைக்கு மாற்றமானவர்களை சாடியிருப்பதால் தாங்கள் யாரைப் பற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்களோ அவர் சுன்னத் ஜமாஅத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பின் இந்தக் கேள்விகள் எழுந்திருக்காது. இருப்பினும் உங்கள் சந்தேகங்களை நீக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதியை மட்டும் பார்த்துக் கொண்டு இந்த அஞ்சலை அனுப்பியிருப்பீர்கள் போலும். தாங்கள் பிலாலி ஷாஹ்வைப் பற்றிக் கூறியிருப்பது பற்றி விளக்கம் கேட்கிறீர்கள். நாங்கள் பிலாலி ஷாஹ் பற்றி குறிப்பிட்டிருக்கும் வாசகங்களை உங்களுக்கு அப்படியே தருகிறோம். அதில் அவரை நாங்கள் காபிர் என்று எங்காவது சொல்லியிருக்கிறோமா? என்று பாருங்கள்.

'இந்த புத்தகத்தில் பிலாலிஷாஹ்வின் அணிந்துரை எழுதப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி தேங்கை சர்புத்தீன் அவர்களிடமும், அதை வெளியிட்ட சுலைமானியா பப்ளிஷர் நிறுவனர் சுலைமான் ஹாஜி அவர்களிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் ஆஷிகே ரஸூல் அல்லவா? என்றார்கள். பிலாலி ஷாஹ் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். அவரின் கொள்கையைப் பற்றித் தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கற்றறிந்த ஆலிம்களும் இதில் சிக்கி மாட்டித் தவிக்கின்றனரே எனும்போது வியப்பிற்குரியதாக இருக்கிறது.

அபூலஹப் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைக் கேள்வியுற்று ஒரு அடிமையை சுட்டுவிரல் காட்டி உரிமைவிட்டதினால் அவன் ஆஷிகே ரஸூல் ஆகிவிடுவானா? முனாபிக்குகளின் தலைவனான அப்துல்லாஹ் இப்னு உபை தன் மரண நேரத்தில் தம் மகனாரை அழைத்து (மகனார் ஒரு ஸஹாபி) நபிகளாரின் உடையை தனக்கு கபனாக போர்த்தும்படி சொன்னதினால், அவர் ஆஷிகே ரஸூலாகி விடுவாரா?இதேபோல்தான் பிலாலிஷாஹ்வும். அவர் தான் சேர்ந்திருக்கிற வழிகெட்ட தரீகாவை விட்டும், ரஸூல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்திய அஷ்ரப் அலி தானவியை போற்றும் ஷெய்குமார்களை விட்டும் தவ்பா செய்து வெளியில் வரட்டும். நான் ரஸூலையும் புகழ்வேன் அவர்களை இகழ்ந்தவர்களையும் புகழ்வேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீங்களே யோசியுங்கள்.'


தாங்கள் தமிழகம் முழுவதும் பிரபலமாக பேசப்பட்டு(?) வரும்  ஒரு நபரை (பிலாலி ஷாஹ்வை) தாங்களே காபிர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் போலும். அதனால்தான் நாங்கள் சொல்லாத ஒன்றை அவர் மீது சொல்லியதாக சொல்கிறீர்கள்.  அவரை காபிர் என்று சொல்ல வைப்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்? அவரை நாங்கள் ஏன் வழிகெட்டவர் என்று சொல்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தப்லீக் ஸ்தாபகர் மௌலானா இல்யாஸ் காந்தலவியின் குருமார்களில் ஒருவரான மௌலானா அஷ்ரப் அலி தானவி என்பவர் அல் இம்தாது என்னும் பத்திரிகையில், தன் முரீது ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக தன்னை ரஸூல் என்று தாவாச் செய்வதை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.

அதேபோல் ஹிப்ளுல் ஈமான் என்ற நூலில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பேயன், பைத்தியக்காரன், மதளையின் அறிவை விட குறைவாகத்தான் உள்ளது என்று உளறியிருக்கிறார்.
இதனால் மீரட் மௌலானா என்ற அப்துல் அலீம் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அஷ்ரப் அலி தானவியை விசாரிக்கச் சென்று அவர் தான் கூறிய கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்காமல் ஒத்துக் கொண்டதால் அவரை 'காபிர்' என்று பர்ரத் மின் கஸ்வரா என்ற தலைப்பில் பத்வா வெளியிட்டனர். இதை எங்கள் ஷெய்கு நாயகம் அவர்கள் புலியைக் கண்டு ஓட்டம் என்று தமிழில் மொழி பெயாத்திருக்கிறார்கள். அதைப் பார்க்க:https://sufimanzil.org/wp-content/uploads/downloads/2010/04/farrath-min-kaswarah.pdf

அதே போல் அவர் எழுதிய குப்ரான வாசகங்களை கண்டு மக்கா, மதீனா உலமாக்கள் அவரை காபிர் என்று பத்வா வெளியிட்டுள்ளனர். இதை அஃலா ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹுஸாமுல் ஹரமைன் என்ற நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

இதுபற்றி தாங்கள் அறிந்ததுதான். இப்பேர்பட்ட அஷ்ரப் அலி தானவியை பார்த்து மகான் என்றும், அவர் ஞானம்தான் எங்களுடையது என்றும் சொல்லும் கௌஸி ஷாஹ், நூரி ஷாஹ் போன்றோரை ஏற்றுக் கொண்டு அவர்களின் சில்சிலாவை பின்பற்றி நடக்கும் பிலாலிஷாஹ்வை என்னவென்று சொல்வது? இதற்கு ஆதாரங்கள் வேண்டுமாயின் உங்கள் தரீகாவினர் வெளியிட்ட புத்தகங்களிலிருந்தே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை எமது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறோம். அதைப் பார்க்க:
பிலாலிஷாஹ் அஷ்ரப் அலி தானவியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஆனால் அவரிடம் சென்று நீங்கள் கேட்டுப் பாருங்கள். அவர் சொல்வார் அஷ்ரப் அலி தானவி மகான் என்று (நவூதுபில்லாஹி). மேலும் அஷ்ரப் அலி தானவியை மகான் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் சில்சிலாவில் அவர் இணைந்திருப்பதே அவர் அஷ்ரப் அலி தானவியை ஏற்றுக் கொண்டதாகவே ஆகிறது. தங்கள் ஷெய்கைப் பற்றி அவர் பேசினால் அதில் அஷ்ரப் அலி தானவியை மகான் என்று சொன்னவர்களைப் பற்றிப் பேசியதாகவே ஆகிறது. இதில் அவர் அஷ்ரப் அலி தானவியை பற்றி பேசவே இல்லை என்று நீங்கள் சொல்வது எப்படி பொருந்தும்? அந்த வழிகேட்டின் குட்டையில் ஊறிய மட்டை தானே இவரும். இதிலிருந்து அவர் வெளி வரட்டும். அதற்குப் பிறகு நீங்கள் சொல்வதைப் பற்றி விசாரிக்கலாம்.

நாங்கள் எழுதிய கட்டுரையில் பக்க ஆதாரங்களோடு குறிப்பிட்டிருக்கிறோம். உங்கள் தரீகாவினர் வெளியிட்ட புத்தகங்களை வாங்கி அந்த புத்தகத்தில் நாங்கள் சொன்னது இருக்கிறதா? என்று பாருங்கள். https://sufimanzil.org/articles/fundamental/nooriesahrealfacts

அந்த புத்தகங்களில் பிலாலி ஷாஹ்வின் புகைப்படங்களும் உள்ளன. அதில் அஷ்ரப் அலி தானவியை புகழ்ந்தும் உள்ளது. அதற்கு அவர் இன்றுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

எல்லாவற்றிற்கும் ஆதாரங்களைக் கொண்டே நாங்கள் எழுதியிருக்கிறோம். அனைத்தும் உங்கள் தரீகாவின் புத்தகத்திலிருந்தே எடுக்கப்பட்ட ஆதாரங்கள். உங்கள் தரீகாவின் வெளியீட்டுப் புத்தகங்களை வாங்கி முதலில் அதை வாசித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

காயல்பட்டணம் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெரியாதவர்கள் தமிழ் பேசும் உலகில் யாரும் இருக்க முடியாது. தமிழகத்தில் வஹ்ஹாபியத் காலூன்றத் துவங்கிய காலத்தில் தனியொரு ஆளாக நின்று அதன் முகமூடியைத் தோலுரித்துக் காட்டியவர்கள் அவர்கள். அச்சமயத்தில் நூரிஷாஹ் தமிழகத்தில் காலூன்றி இருக்கவே இல்லை. அவர் காலூன்றிய போது கேரளாவில் நடத்திய தரீகத் மாநாட்டிற்கு எங்கள் ஷெய்கு நாயகமவர்களை அழைப்பு விடுத்தார். எங்கள் ஷெய்கு நாயகம் அவர்கள் நூரிஷாஹ்வின் கொள்கைகளை ஞானதிஷ்டி மூலம் அறிந்து கொண்டு அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது தமிழுலகு அறிந்த விசயம். உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதன்பிறகு கேரளாவிலிருந்து நூரிஷாஹ்வின் கொள்கைகளை அறிந்து கேரள உலமாக்கள் அவரை விரட்டி அடித்தது உங்களுக்குத் தெரியமாலிருக்கலாம். பெரியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரியும்.

வஹ்ஹாபிகளை தோலுரித்துக் காட்டிய எங்கள் ஷெய்கு நாயகம் அவர்கள் எங்களுக்கு ஈமான் பற்றி தர்பியத் செய்யவில்லை என்று கூறும் தங்களின் கூற்று மிகவும் நகைப்பிற்குரியதாக இருக்கிறது. எங்களின் ஷெய்கு நாயகம் அவர்கள் ஈமானைப் பலப்படுத்தவும், வழிகேடர்களை தோலுரித்துக் காட்டவும் எழுதிய புத்தகங்கள் எங்கள் இணையதளத்தைப் பார்த்தாலே தெரியும். அதேபோல் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நேர்ந்தாலும் சரி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபத்தியவர்களையும், அவர்களை சரி கண்டவர்களையும் எங்கள் ஷெய்கு நாயகம் எதிர்க்கத் தவறியதில்லை. மேலும் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாற்றமான எக்கொள்கையுடையவர்களையும் எங்கள் ஷெய்கு நாயகம் அவர்கள் தோலுரித்து மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்கள். இது கடந்த கால உண்மை. எங்கள் இணையதளத்தை நன்றாகப் பாருங்கள். எங்கள் ஷெய்கு நாயகம்  இல்லையெனில் தமிழகத்தில் மறைமுகப் போர்வையில் வஹ்ஹாபியத்தைப் போதிக்கும் தப்லீக் ஜமாஅத்தினர்களின் உண்மை சொரூபம் தெரியாமல் போயிருக்கும்.

அதன் அடிப்படையில், அவர்கள் சொல்லித் தந்த தர்பியத் முறையில் நாங்கள் இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றி மக்களுக்கு தெரிவிக்கிறோம். அது எவ்வளவு பிரபலமடைந்தவராக இருப்பினும், எவ்வளவு பெரிய தரீகாவாக, எவ்வளவு பெரிய ஷெய்காக, எவ்வளவு பெரிய ஆளாக இருப்பினும் நாங்கள் எதிர்க்க தவறுவதில்லை. அதில் இந்த நூரிஷாஹ் தரீகா என்ற வழிகேடான தரீகாவும் அடங்கும். அதையும் நாங்கள் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டுவோம். அந்தப் பணியை செவ்வனே எங்கள் ஷெய்கு நாயகம் வழியில் செய்து வருகிறோம். பிலாலி ஷாஹ்விற்கோ பைஜி ஷாஹ்விற்கோ, ஆமிரி ஷாஹ்விற்கோ இன்னும் பல ஷாஹ்களுக்கோ நாங்கள் எதிரி அல்ல. அவர்களுக்கும் எங்களுக்கும் குடும்பப் பகையோ, சொத்துத் தகராறோ இல்லை. அவர்கள் கொண்ட கொள்கை – நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தியவர்களை மகான் என்று சொல்லும் சொல், செயல். அதனால்தான் நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம்.

ஆஷிகே ரஸூல் என்பவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு கண்டவர்களை ஷெய்காகவோ, அவரை ஏற்றவரை ஷெய்காகவோ, மகானாகவோ எப்படி ஏற்றுக் கொள்வார்? அவ்வாறு ஏற்றுக் கொள்வாராயின் அவர்  எப்படி ஆஷிகாக ஆக முடியும்? ஏனெனில் ஆஷிக்கீன்களுக்கு நாயகம் ஸல்லல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வித குறைவுமற்ற பூரண – கமாலியத்தான சொரூபமாகத்தான் தெரிவார்கள். அவ்வாறுதான் அவர்களை நேசிப்பார்கள். ஆகையால் இவ்வாறு குறைவுபடுத்தியவர்களை ஏற்றுக் கொண்டவர் எப்படி ஆஷிகே ரஸூலாக ஆக முடியும்.?

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தியவர்களை ஆதரிப்பதும், மேலும் ரஸூலை புகழ்ந்து பேசுவதும் எப்படி சரியாகும்? எதிரும் புதிரும் எவ்வாறு ஒன்று சேரும்? நீங்கள் ஓதியிருப்பின் இதை தெரிந்திருப்பீர்கள். அதற்காகத்தான் அப்துல்லாஹ் இப்னு உபையின் உதாரணத்தைக் காட்டினோம். இப்படிப்பட்டவரை உங்களைப் போன்றவர்கள் ஆஷிகே ரஸூல் என்று புகழ்கின்றனரே அதற்காகத்தான் அபூலஹபை உதாரணத்திற்கு காட்டினோமே தவிர, காபிர்களுக்கு இறங்கிய வசனங்களை அதற்கு ஆதாரமாகக் காட்டவில்லை. நன்றாக இஸ்லாத்தை உணர்ந்து பதில் எழுதுங்கள்.

உங்களுக்கு உங்கள் ஷெய்கு மீது கொண்ட பாசம் உங்கள் கண்ணை மறைத்ததினால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தியது தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு எங்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாங்கள் கொண்ட நேசம்,  அன்னாரை குறைவு கண்டவர்களையும், அதற்கு ஆதரவானவர்களையும் எதிர்த்து எங்கள் பலமுள்ள ஈமானை இன்னும் பலமாக்கச் செய்கிறது.

எங்களின் நோக்கம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்தியவர்கள், அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் இன்னும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானவர்களை இனம் காட்டி மக்களை வழிகேட்டிலிருந்து தடுப்பதுதான். இதுதான் ஒவ்வொரு இஸ்லாமியரின் நோக்கமும். இதற்கு மாறுபட்டவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியுமா என்ன?. நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

இறுதியாக, பிலாலிஷாஹ் மேற்படி வழிகெட்ட தரீகாவை விட்டு வெளி வரட்டும். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பாதையில் முழுமையாக நடக்கத் துவங்கட்டும். அதன்பிறகுதான் அவரைப் பற்றி நல்ல முடிவுக்கு வர முடியும். அவர் கேட்காவிட்டால் நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அதற்குரிய நற்கூலியைத் தருவான்.

வல்ல அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.