தூத்துக்குடி மன்ஜிலில் கந்தூரி விழா!

தூத்துக்குடி மன்ஜிலில் கந்தூரி விழா!

By Sufi Manzil 0 Comment February 3, 2012

Print Friendly, PDF & Email

தமிழ்நாடு தூத்துக்குடி நகரில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் கடந்த 28-01-2012 புதன் கிழமை அன்று  மகான்களான சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷெய்கு அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹைதராபாதி அன்னாரின் கலீபாவான அஷ்ஷெய்குல் காமில் அஷ்ஷாஹ் அஷ்ஷெய்கு செய்கு அப்துல் காதிர் ஸூபி காஹிரி மற்றும் அன்னாரின் கலீபாவான ஸெய்யிது ஸாதாத் அஸ்ஸெய்யிது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி ஸூபி அந்தரத் தீவு ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் கந்தூரி விழாநடைபெற்றது.

காலையில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டடு, மாலையில் மௌலிது ஷரீபும், மஃரிபிற்குப் பின் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸும் அதைத் தொடர்ந்து மார்க்க உபன்னியாசமும் நடைபெற்றது. இவை அனைத்திற்கும் தலைமை தாங்கி நடத்தி தந்தவர்கள் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் நேர்ச்சை வழங்கப்பட்டது. ஏராளமான முரீதீன்களும், முஹிப்பீன்களும் கலந்த சிறப்பித்தனர்.