எல்லாம் வல்ல இறையோன்…

எல்லாம் வல்ல இறையோன்…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

Print Friendly, PDF & Email

எல்லாம் வல்ல இறையோன்

       தன் கொடை யாகவே

இவ்வுலகோர்க்கு தந்தானே

       பரிசாகவே

சொல்லால் சொல்லி முடியாதச்

       சிறப்பானவர் – நம்

பயகம்பர் புகழோதி

       மாண் பெய்துவோம்!

அன்னை ஆமினார்

       ரப்துல்லாஹ் செல்வமாய்

மின்னும் பொன்னின்

       ஒளிப் போன்று புவி மீதிலே

மக்கம் தன்னில் எழிலான

       மதி வாளராய்

ஹக்கன் போற்றும் அருளாகப்

       பிறந்தார்களே!

இறைச் சொன்ன முறை யாவும்

       எடுத்தோதி னார்

வான் மறை மூலம் மகி தன்னை

       உயர்வாக்கினார்

தன் வழி மூலம் உலகோர்க்கு

       தெளி வூட்டினார்

நன் -னெறி யோங்கும் உரை மூலம்

       அறிவூட்டினார்!

பங்கம் ஏது மில்லாச்

       செங்கதி ரோனுமே

மங்கும் நாதர் முக

       எழிலின் முன்பாகவே!

மங்கா தீனின் சுடரான

       மாண்பாளரே

மதீனாவில் வாழ்கின்ற

       மஹ்மூதரே!

நாளை மஹ்ஷரில் நாங்கள்

       தடுமாறிடும்

நாளில் நாயன் முன் னின்று

       எமக்காகவே

மன்றாடும் முஹம்மதே

       யா முஸ்தஃபா!

எந் நாளும் அருள் நல்கும்

மேதாதிபா!

(எல்லாம் வல்ல…)

(நிறைவு)

Add Comment

Your email address will not be published.