உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு

உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 21, 2014

Print Friendly, PDF & Email

உபைஇப்னு கஅப் மதீனாவின் கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவர். யத்ரிபில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பத் தருணங்களிலேயே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

பின்னர் அகபா உடன்படிக்கையில் பங்கேற்றவர்களுள் ஒருவர், நபியவர்களின் புனிதக்கரம்  பற்றிப் பிரமாணம் அளித்தவர் என்றுஇஸ்லாத்துடனான உறவு துவங்கியது. பத்ரு யுத்தத்தில்பங்கு பெறும் அடுத்த பாக்கியமும் பெற்றார் உபை இப்னு கஅப். அதைத் தொடர்ந்துநிகழ்ந்த யுத்தங்களிலெல்லாம் நபியவர்களின் படையணியில் உபை ஒரு முக்கிய வீரர்.

குர்ஆன்முழுவதும் மனனம் செவியுறுவோர் மகிழ்வுறும் குரல் வளத்தில் பாராயணம் என்றுஉருவானார் உபை. அழகுற ஓதுவது என்பதுடன் நின்று போகாமல் குர்ஆனைப் பற்றியஅவரது ஞானம்தான் அவருக்கு இறைவன் அளித்த தனிச் சிறப்பு.

‘குர்ஆன் கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த நால்வரிடம் செல்லுங்கள்’ என்று நபியவர்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பரிந்துரைத்த அந்த நால்வருள் ஒருவர் உபை இப்னு கஅப். மற்ற மூவர், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அபூஹுதைஃபாவினால் விடுவிக்கப்பட்ட அடிமை ஸாலிம், முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹும்.

அத்தகுபரிந்துரைக்கு உரிய தகுதிகள் அவருக்கு அமைந்திருந்தன என்பதற்குச் சிலநிகழ்வுகளும் சாட்சி. ஒருநாள் நபியவர்கள் உபையிடம் “ஓ அபூமுன்திர்!அல்லாஹ்வின் அருள்மறையில் எந்த வசனம் உயர்வானது?” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வும்அவனுடைய தூதரும் அதைச் சிறப்பாக அறிந்தவர்கள்” என்று பதில் வந்தது.மீண்டும் அதே கேள்வியைக்கேட்டார்கள் நபியவர்கள்.

வணங்குதற்குரியவன் அவனையன்றி வேறில்லை; அவனே அல்லாஹ்! அவன் என்றும் வாழ்பவன். என்றென்றும் நிலைத்திருப்பவன்.(சிறு)கண்ணயர்வோ(ஆழ்ந்த)உறக்கமோ அவனை அணுகா. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கேஉரியன. அவன் அனுமதியின்றி அவனிடம் பரிந்துரைக்க எவனால் இயலும்? படைப்பினங்களின் அகத்தையும் புறத்தையும் அவன் நன்கறிவான். அவனுடையஅனுமதியின்றி எவரும் அவனுடைய அறிவின் விளிம்பைக்கூட நெருங்க இயலாது.அவனுடைய அரசாட்சி, வானங்களிலும் பூமியிலும் விரிந்து பரந்து நிற்கின்றது.அவ்விரண்டையும் ஆள்வதும் காப்பதும் அவனுக்கு ஒரு பொருட்டன்று. அவன்மிக்குயர்ந்தவன்; கண்ணியமிக்கவன்”

சூராஅல் பகராவின் 255ஆம் வசனமான ஆயத்துல் குர்ஸீயை நபியவர்களிடம் தெரிவித்தார்உபை. அதைக்கேட்டு நபியவர்களின் முகம் மகிழ்வால் மிளிர்ந்தது. உபையின்மார்பைத் தமது வலக் கரத்தால் தட்டித் தந்தார்கள். ‘சரியான பதிலைச் சொன்னாய்உபை’ என்ற அங்கீகாரம் அது.

”உபை! நான் உமக்காக குர்ஆனை விரித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளேன்” என்றார்கள் நபியவர்கள்.

‘குப்’பெனஅவரைக் குதூகலம் தாக்கியது. தம்முடைய ஆர்வத்தைக் கட்டுப்படுத்தவில்லை. கேட்டுவிட்டார்.

“அல்லாஹ்வின் தூதரே. தங்களிடம் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டதா?”

“ஆம்” என்று பதிலளித்தார்கள் நபியவர்கள். “உம்முடைய பெயர், வம்சாவளி ஆகியவற்றுடன் விண்ணிலிருந்து குறிப்பிடப்பட்டீர் உபை.”

நபியவர்களின்தோழர்களுள் மிக முக்கியமான ஒருவராகப் பரிணமித்தார் உபை இப்னு கஅப்.அவருடைய எழுத்தறிவு நபியவர்களுக்குச் சேவகம் புரிந்தது.

குர்ஆன் வசனங்கள்அருளப்படும்போது அதை எழுதப் பணிக்கப்பட்ட தோழர்கள் சிலர் இருந்தனர். அந்தச்சிலருள் உபையும் ஒருவர். அது மட்டுமின்றி நபியவர்களின் கடிதப்பரிமாற்றங்களில் உதவுவதும் உபையின் பணியாக இருந்தது.

உஹதுப் போருக்குமக்காவிலிருந்து குரைஷிப் படைகள் புறப்பட்டவுடன், படையின் முழுவிவரங்களையும் அவசர அவசரமாக ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு அதைநபியவர்களுக்கு அனுப்பி வைத்தார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்ரலியல்லாஹு அன்ஹு. அக்கடிதம் வந்து சேர்ந்தபோது நபியவர்கள் குபாவிலுள்ளபள்ளிவாசலில் இருந்தார்கள். அதை நபியவர்களுக்குப் படித்துக் காண்பித்தவர்உபை. பிற்காலத்தில் பொய்யன் முஸைலமாவின் தூதுவர்கள் நபியவர்களிடம் வந்தபோதுஅவனுக்கு நபியவர்கள் தெரிவித்த பதிலை எழுதித் தந்தவரும் உபை.

நபியவர்களின்மறைவிற்குப்பின் உபையின் வாழ்க்கையில் இறையச்சம் – தக்வா – வழிசெலுத்தும்விசையாய் அமைந்து போனது. இஷாத்தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலில் தங்கி, இறை வழிபாட்டிலோ, மக்களுக்குப்பாடம் எடுப்பதிலோ அவரது நேரம் கழியும். கல்வி கற்கவும் ஆலோசனை வேண்டியும்பலர் அவரிடம் வருவார்கள்.
ஒருவருக்குவழங்கிய ஆலோசனையில், “இறை நம்பிக்கையாளனுக்கு நான்கு அம்சங்கள். ஏதேனும்துயர் நிகழ்ந்தால் அவன் பொறுமை காத்து உறுதியுடன் இருப்பான். தனக்குக்கிடைக்கப் பெறுவதற்கு இறைவனுக்கு நன்றி உரைப்பான். அவன் பேசுவது உண்மைமட்டுமே. அவன் வழங்கும் தீர்ப்பு நீதி வழுவாது.”

தோழர்கள்மத்தியில் உபைக்கு நல்ல மதிப்பு, மரியாதை. “முஸ்லிம்களின் தலைவர் என்றுஅவரை அழைப்பார் உமர். அந்த அடைமொழி மக்களிடம் மிகவும் பிரபல்யம். “நபியவர்களின் காலத்தின்போது குர்ஆனைத் தொகுத்தவர்கள் நால்வர். உபை இப்னுகஅப், முஆத் பின் ஜபல், ஸைது இப்னு ஹாரிதா, அபூஸைது எனும் அந்த நால்வருமே அன்ஸார்கள்” என்று அனஸ் பின் மாலிக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் தமக்கே தமக்கெனத் தம் கைப்பட எழுதிய குர்ஆன் பிரதியொன்று உபை இப்னு கஅபின் வசம் இருந்தது.

அபூபக்ருரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் தமக்கென ஓர் ஆலோசனைக்குழுவை உருவாக்கினார். சிறந்த ஞானமும் துணிவும் மார்க்கச் சட்ட நுண்ணறிவும்பொருந்திய முஹாஜிரீன், அன்ஸார் தோழர்கள் உள்ளடங்கிய அந்தக் குழு “அஹ்லர்ரஅயீ” என்று அழைக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்தவர்கள் மிக முக்கியத்தோழர்களான உமர், உதுமான், அலீ, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், முஆத் பின்ஜபல், ஸைது இப்னு ஹாரிதா. இவர்களுடன் உபை இப்னு கஅப். ரலியல்லாஹு அன்ஹும்.

அபூபக்ரு தமது ஆட்சிக் காலத்தில் பல விஷயங்களில் உபை இப்னு கஅபிடம் ஆலோசனைகேட்குமளவிற்கு அவர்மீது அபூபக்ருக்கு நம்பிக்கையும் மதிப்பும் இருந்தது.

அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுக்குப் பிறகு உமர் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரது ஆலோசனைக் குழுவிலும் மேற்சொன்ன தோழர்களும் இடம் பிடித்தனர்.

ஸிரியாவிலும் இராக்கிலும் இஸ்லாமிய ஆட்சி பரவி அங்குள்ள மக்களுக்குக் கல்வி கற்பிக்கமார்க்க ஞானம் மிக்க தோழர்களை உமர் அனுப்பி வைத்தபோதும் தமக்கென மதீனாவில் அவர் தங்க வைத்துக்கொண்ட தோழர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர். தம்அருகிலேயே தமக்கு உதவியாக உபை இருக்க வேண்டும் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு திடமாக எண்ணியதால், அவருக்கு ஆட்சிப் பொறுப்பு, ஆளுநர் பதவி என்று அளித்துத்தொலைவில் வைக்காமல், ‘இங்கேயே இருங்கள்’ என்று தம்மருகில் வைத்துக் கொண்டார்.

லீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு மதீனாவின் வீதிகளில் உலாச் சென்றிருந்தார்.

அப்போது இறை வசனம் ஒன்று அவரது நினைவிற்கு வந்தது.ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றை(செய்ததாக)க் கூறி நோவினை செய்பவர்கள்… – சூரா அல் அஹ்ஸாபின் 58 ஆவது வசனம் அது.

இந்த வசனத்திற்கு விளக்கம் பெற நினைத்தார்.

தோழர் அபூமுன்திருடைய இல்லத்திற்கு விரைந்தார். அங்கே தமதுவீட்டில் ஒரு திண்டில் அமர்ந்திருந்த அந்தத் தோழர், கலீஃபா உமரைக் கண்டதும்வரவேற்றார். தமது திண்டை அவருக்கு அளித்து, “அமருங்கள் அமீருல் மூஃமினீன்” என்று உபசரித்தார்.

‘எவ்வளவுகவலையுடன் வந்திருக்கிறேன், இதென்ன திண்டும் உபசரிப்பும்’ என்பதைப்போல்அதைத் தமது காலால் தள்ளி அகற்றி விட்டுத் தரையில் அமர்ந்து கொண்டார் உமர்இப்னுல் கத்தாப். மேற்சொன்ன வசனத்தை ஓதி, “இந்த வசனம் குறிப்பிடும் நபர்நானோ என்று எனக்கு அச்சமேற்படுகிறது. நான் இறை நம்பிக்கையாளர்களுக்குத் தீங்கிழைக்கிறேனோ?”

அபூமுன்திர் பதில் அளித்தார்: “ஆட்சியாளராகிய நீர் மக்களின்மீது அக்கறை கொள்ளாமல்இருக்க முடியாது. எனும்போது அவர்களது நலனுக்கான விதிகளும் கட்டளைகளும்விலக்கப்பட வேண்டிய செயல்களுக்கான தடைகளும் ஏற்படுத்தத்தானே வேண்டும்.” அவையெல்லாம் இறை நம்பிக்கையாளர்களுக்குச் செய்யப்படும் தீவினை அல்ல என்று விளக்கமளித்தார் உபை ரலியல்லாஹு அன்ஹு.

“நீர் சொல்வது புரிகிறது. எனினும் அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்” என்று விடைபெற்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

கலீஃபாவேதேடி வந்து ஆலோசனை பெறும் அளவிற்கு அந்தத் தோழருக்கு மெச்சத்தகுந்தகுர்ஆன் ஞானம் அமையப் பெற்றிருந்தது.
“மக்களே!யாரெல்லாம் குர்ஆனைப் பற்றி அறிய விரும்புகிறீர்களோ அவர்கள் உபை இப்னுகஅபிடம் செல்லவும். வாரிசுரிமை பற்றி அறிய ஸைது இப்னு தாபித்திடமும்சட்டதிட்டங்கள் பற்றி அறிய முஆத் பின் ஜபலிடமும் பணப் பரிமாற்றம்குறித்தவற்றை என்னிடமும் கேளுங்கள்” என்று அறிவித்துள்ளார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

ஆட்சித்தலைவராக உமர் இருந்தாலும் அவரிடம் உபை நேர்மையாகவும் வெளிப்படையாகவும்பேசக்கூடியவர். அச்சம் என்பது இறைவனுக்கே என்றிருந்தவர்.

ஒருமுறை உபை இப்னுகஅப் ஒரு வசனத்தை ஓதும்போது, அதைச் சரியாக நினைவில் வைத்திராத உமர்குறுக்கிட்டு, “நீர் தவறாகச் சொல்கின்றீர்” என்றார்.

உடனே பதில் வந்தது. “இல்லை. நீர்தான் தவறிழைக்கின்றீர்.”

இதைக் கவனித்துக் கொண்டிருந்தார் அங்கிருந்த ஒரு மனிதர். அவருக்குப் பெரும் திகைப்பு. “அமீருல் மூஃமினீனைப் பொய்யர் என்கின்றீரா?”

“அமீருல்மூஃமினீன் மீது எனக்கு அளவற்ற மதிப்பும் மரியாதையும் வெகு நிச்சயமாகஉண்டு. அதற்காக அல்லாஹ்வின் அருள்மறையிலுள்ள வசனத்தை அவர் தவறாக நினைவில்வைத்திருந்தால் அதைச் சரியென்று நான் சொல்ல முடியாது.”

“உபை சரியாகச் சொன்னார்” என்றார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

மற்றொருமுறைகலீஃபா உமருக்கும் உபை இப்னு கஅபுக்கும் இடையில் ஒரு தோப்பின் உரிமைசம்பந்தமாய் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பத்திரம், பதிவு அலுவலகம் பட்டாபோன்றவை தோன்றியிராத காலம் அது. ஒரு தோப்பு தமக்குச் சொந்தமானது என்றுஉரிமை கோரினார் உபை இப்னு கஅப். கலீஃபா உமர் அதை மறுத்தார். இருவரும்தங்களுக்கு இடையே நீதிபதியாக ஸைது இப்னு தாபித்தை நியமித்துக் கொண்டார்கள்.

ஸைது இருவரின்வாதங்களையும் கேட்டார். அந்தத் தோப்பு உமருக்கு உரிமையானது எனத் தெரிந்துதீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு, தோப்பை உபை இப்னு கஅபுக்கே அன்பளிப்பாக வழங்கிவிட்டார் உமர் ரலியல்லாஹு அன்ஹு.

பிறகுஉதுமான் ரலியல்லாஹு அன்ஹு தமது ஆட்சியின்போது, குர்ஆன் பிரதிகளை எழுதப்பன்னிரண்டு தோழர்களை நியமித்தார். அவர்களுள் உபை இப்னு கஅபும் ஒருவர்.

ஹிஜ்ரீ 29ஆம் ஆண்டு. மதீனாவில் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

Add Comment

Your email address will not be published.