அப்துல் கரீம் அல் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு

அப்துல் கரீம் அல் ஜீலி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment December 20, 2014

Print Friendly, PDF & Email

கௌதுல் அஃலம் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெண் மக்கள் வழி வந்தவரான மாபெரும் ஞானமேதையாகிய இவர்கள் பக்தாது மாவட்டம் ஜீல் என்ற ஊரில் ஹிஜ்ரி 767(கி.பி.1365-66) ல் பிறந்தனர்.

தாபித் நகரில் வாழ்ந்த ஷைகு ஷரபுத்தீன் இஸ்மாயீல் பின் இப்றாஹீம் ஜபர்தீயிடம் இவர்கள் ஆத்மஞானக் கல்வி பயின்றனர். இவர்களை பெரிதும் உருவாக்கியது முஹ்யித்தீன் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஞானநூற்கள் எனலாம்.

இப்னு அரபியின் ‘ஃபுத்துஹாத்து’க்கு விரிவுரை எழுதியுள்ளார்கள். இன்ஸானுல் காமில் ஃபீ அமஅரிபத்தில் அவாகிர்வல் அவாயில்'(முதலாவதும் இறுதியானதுமான விஷயங்களில் பரிபூரணமான அறிவைப் பெற்றுள்ள மனிதன்) என்பது> இவர்கள் ஆத்மஞானக் கடலில் மூழ்கி எடுத்த நன்முத்தாக விளங்குகிறது. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தம் குரு என்று இன்ஸானுல் காமில் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இதுதவிர மேலும் 30நூல்கள் வரை எழுதியுள்ளனர். அதில் ஒன்று மராதிபுல் உஜூது என்பதாகும். இதில் மனிதனின் 40படித்தரங்களை குறிப்பிடுகின்றார்கள்.

ஹிஜ்ரி 790 (கி.பி.1337ல் இவர்கள் இந்தியாவுக்கும் வந்துள்ளனர்.

இவர்கள் பல ஆன்மீன அனுபவங்களை பெற்றுள்ளனர். வானவர்களுடன் உரையாடியுள்ளனர். நபிமார்களையும்> வலிமார்களையும் ஆன்மீக முறையில் சந்தித்துள்ளனர். இவர்கள் ஹிஜ்ரி 832 (கி.பி. 1428ல் மறைந்தார்கள்.)

அபுல் ஹஸன் அல் அஷ்அரீ

இவர்கள் பஸராவில் ஹிஜ்ரி 260 (கி.பி.873) ஆம் ஆண்டு பிறந்தார்கள். இவர்களின் தந்தையார் பெயர் இஸ்மாயீல் என்பதாகும். இவர்களின் மூதாதையர்களில் ஒருவர் ரோமத்துடன் பிறந்ததால் அல் அஷ்அர் (ரோமமுடையவர்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி என்ற ஸஹாபியின் வம்சவழி வந்தவர்கள்.

இவர்களின் தந்தை இறந்ததும் இவர்களின் அன்னை முஃதஸிலா இயக்கத்தின் தலைவரான அபூஅலீ அல்ஜுப்பாயை மணந்து கொண்டார். எனவே இவர்கள் அல்ஜுப்பாயிடமே கல்வி கற்று அவர்களின் மாணவராயினர்.

பக்தாதில் அல்மன்சூர் பள்ளிவாயிலி;ல் ஷாபியி மத்ஹப் அறிஞர் அபூ இஸ்ஹாக் அல்மர்வஸியின் பேச்சுக்களை ஒவ்வொரு வெள்ளியும் கேட்டு வந்ததோடு அவர்களின் மாணவராகவும் ஆயினர்.

இவர்கள் வாக்குவாதம் செய்வதில் மிகவும் திறமையாக இருந்தார்கள். அல்ஜுப்பாயிடம் வாக்குவாதம் செய்ய வருவோரை அவர் இவர்களிடம் வாக்குவாதம் செய்யவிடுவார். 40வயது வரை முஃதஸிலாக்களின் தலைவரான அல்ஜுப்பாயிடம் மாணவராக இவர் இருந்தார்.

நாளடைவில் முஃதஸிலா மீது இருந்த மோகம் இவர்களுக்கு குறைந்தது. நபித்தோழர்கள் சென்றவழியே நேர்வழி என்று கண்டார். இதன்பின் 15நாட்கள் மனப்போராட்டத்திற்கிடையே வீட்டிலேயே முடங்கி கிடந்தார்கள். 15நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமை வெளியே வந்து நேரே பள்ளி சென்றார்கள். அங்கு இவர்கள் அல்ஜுப்பாயை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்தார். அவரின் கேள்விக்கு பதில் கூறமுடியாமல் அல்ஜுப்பாயி திணறினார்.

உடனே தான் சொற்பொழிவாற்ற போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவாறு, ‘நான் இதுவரையிலும் குர்ஆன் படைக்கப்பட்டதென்றும், மனிதர் தங்களின் கண்களால் இறைவனைக் காண இயலாது என்றும், நம்முடைய தீ|ய செயல்களுக்கு நாமே காரணம் என்று கருதிக் கொண்டிருந்தேன். இப்போது அக்கொள்கைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அக்கொள்கையுடையவர்களின் இழித்தன்மையை எடுத்துரைக்க ஆயத்தமாகிவிட்டேன்’ என்று உரத்துக் கூறினார்கள்.

இதன்பிறகு முஃதஸிலாக் கொள்கைக்காரர்களிடம் சென்று அவர்களின் தவறான போக்கை எடுத்துரைத்தார்கள். இவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விளக்கி 300நூல்கள் வரை எழுதியுள்ளார்கள். இவர்கள் எழுதிய 99நூற்களை இப்னுஅஸாகிர் குறிப்பிடுகிறார். இவர்கள் தாம் இறப்பதற்கு 4நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ‘அல்அமத்’ என்ற நூலை எழுதி அதில் தான் எழுதிய 68நூற்களின் பெயர்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருக்குர்ஆனுக்கு மட்டும் 30பாகங்களில் விரிவுரை எழுதியிக்கிறார்கள். இவர்கள் எழுதிய ‘கிதாபுல் ஃபுஸூல்’ 12பாகங்களைக் கொண்டதாகும். இவர்கள் எழுதிய நூல்களில் சிறப்பு வாய்ந்தது ‘மகாலாத்துல் இஸ்லாமிய்யீன்’ என்பதாகும்.

ஷாபி மத்ஹபைப் பின்பற்றிய இவர்களின் கருத்துகக்ளை ஷாபிய்யாக்கள் ஏற்றுக் கொண்டனர்.இவர்களுடைய கருத்துக்கள் கொள்கைகளை பரப்புவதற்காகவே நிஜாமுல் முல்கினால் நிஜாமிய்யா கல்லூரி நிறுவப்பட்டது. இவர்களை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முழுக்க முழுக்க பின்பற்றி இவர்களின் கொள்கைகளை சுன்னத் வல் ஜமாஅத்தின் நிலையான கொள்கையாக ஆக்கினர்.

இவர்கள் இரவு இஷா தொழுகைக்கு செய்யும் ஒளுவோடு சுப்ஹுத் தொழுகையையும் பல்லாண்டுகளாக நிறைவேற்றி வந்தார்கள் என அபுல் ஹுஸைன் அல் ஹர்வி அவர்கள் கூறுகிறார்கள்.

இவர்களின் பாட்டனார் பிலால் இப்னு அபீ புர்தாவின் வழியாக வந்த ஒரு சிறு நிலத்திலிருந்து நாளொன்றுக்கு 17திர்ஹம் வருமானம் வந்து கொண்டிருந்தது. அதைக் கொண்டே இவர்கள் எளிய வாழ்வு வந்தனரென்று இவர்களின் ஊழியர் பிந்தார் இப்னு அல்ஹுஸைன் கூறுகின்றார்.

இவர்களின் சிறப்பியல்புகளைப் பற்றி ஹாபிஸ் அபுல் காசிம் இப்னு அஸாகீர் ஒரு நூல் எழுதியுள்ளார்.

இவர்களைப் பற்றிஅ பூபக்கர் அஸ்ஸீரஃபீ கூறும்போது, ‘இறைவன் அல்அஷ்அரீயை இவ்வுலகிற்கு அனுப்பும் வரை முஃதஸிலாக்கள் தலைநிமிர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ் அபுல்ஹஸன் அஷ்அரீயை அனுப்பி அவர்களின் ஆதிக்கத்தை அழித்தொழித்தான்’ என்று கூறினார்.

சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை இவர்களிடமிருந்துதான் வலுவடையத் துவங்கியது. இவர்கள் ஹிஜ்ரி 324ல் பக்தாதில் மறைந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

Add Comment

Your email address will not be published.